Friday, April 17, 2020

கடமையும் அதை எதிர்கொள்ளும் பக்குவமும்...



விதிக்கப்பட்ட செயல்களை... எந்த வித எதிர்பார்ப்புமின்றி... அந்த செயல்களின் பூரணத்துவத்தில் மற்றும் தமது கவனத்தை செலுத்துவதைத்தான்... 'செயல்களின் பக்குவம்' அல்லது 'பற்றற்று கடமைகளை முடித்தல்' அல்லது கர்ம யோகம் என்று அழைக்கிறோம்.

இந்த வகையாக கடமைகளை எதிர்கொள்ளும் போது 'இரண்டு முக்கிய விளைவுகளக்' கடந்து செல்ல வேண்டியிருக்கும்.

ஒன்று, இவ்வாறு கடமைகளை எதிர்கொண்டு செய்ல்களை கடந்து போகும் போது... ஈடுபடும் நமக்கு எந்த விதமான உலக லாபமும் கிடைப்பதில்லை.

இரண்டாவது, பற்றற்ற முறையில் ஈடுபடும் நமக்கு... நம்மை அறியாமலேயே நமது பூர்வ வினைகளின் பெரும் பகுதி கழிந்தும் போகிறது.

முதலாவதில், நாம் உலக ரீதியான பலன்களை இழக்கிறோம். அது மட்டுமல்ல... நாம் எதிர்கொள்ளும் செயலில்... யாருக்காகவெல்லாம் கடமைகளைச் செய்கிறோமோ... அவர்களிடமிருந்து நாம் எதிர்கொள்ள வேண்டியிருப்பதையும் அனுபவித்துக் கடக்க வேண்டியிருக்கும்.

அவைகளாவன...

1) யாரை முன்னிட்டு நாம் கடமைகளைச் செய்கிறோமோ அவர்களிடமிருந்து எந்த ஒத்துழைப்பும் கிடைக்காது.

2) அவர்களிடமிருந்து ஒரு குறைந்த பட்ச அன்பு கூட கிடைக்காது.

3) மாறாக, அவர்களிடமிருந்து வெறுப்பு உணர்வுகள் வெளி வந்த வண்ணமாக இருக்கும்.

4) இறுதியாக... யாருக்காக நாம் கடமைகளைச் செய்கிறோமோ... அவர்களே அதற்கு எதிராகச் செயல்படுவதையும் பார்க்க முடியும்.

இவற்றையெல்லாம் பொறுத்துக் கொண்டு... கடமைகளைப் பூர்த்தி செய்து... அதிலிருந்து வெளிவருபவருக்கே... இரண்டாவதான 'கர்ம வினைகளின் கழிவு' என்ற விலைமதிப்பில்லாத பரிசு கிடைக்கின்றது,

இதுதான்... கர்ம யோகம்.

ஸாய்ராம்.

No comments:

Post a Comment

ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...