Saturday, April 18, 2020

'ஸாயீயின் கீதங்கள்'



(கடந்த 25.05.2004 அன்று...  ஸாயீ பாவின் அருளால்... அடியேனின் மனதில் உருவான இந்த கீதம்... ஸாயீ மஹானின் திருவடிகளுக்கு சமர்ப்பிக்கப்பட்டது.)

பாபா நீயே துணை எனக்கு - இந்த 
சாகரத்தை நான் கடப்பதற்கு
எத்தனை காலம் சுழல் நடுவில் - நான்
சுழன்றே இருப்பது நடுக்கடலில்.

அலைகடல் நடுவே வந்து விடு
எனக்குன் கையைத் தந்து விடு
இங்கொரு பிறவி இனி வேண்டேன்
இனி பிறவா வரத்தைத் தந்துவிடு.

பிறவி பெரும் சுமையானதிங்கு - அதை
சுமந்தே வளைந்தன தோள்கள் ரெண்டு
பிறவிகள் தோறும் வினைகள் ரெண்டு - அதன்
விளைவால் மீண்டும் பிறவி இங்கு.

வினைகளை நீயே அளித்துவிடு 
சுமைகளை நீயே இறக்கி விடு
மோக வலையை அறுத்து விடு
சுகமாய் வானில் பறக்கவிடு.

ஸாய்ராம்.


No comments:

Post a Comment

ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...