Tuesday, April 14, 2020

'பகவான் ராமகிருஷ்ண பரமஹம்சர்' அருளிய... சிறு கதைகளின் தமிழாக்கம். 'செடிகளுக்கு வேலி அமைத்தல்'





சாலை ஓரங்களில் வளர்க்கப்படும் செடிகளுக்கு... அதன் ஆரம்ப காலங்களில் முள்வேலிச் சுற்று அமைக்கப்படுகிறது. இல்லையெனில், அந்தச் செடிகள், கால்நடைகளுக்கு உணவாக மாறி... செடிகளின் வளர்ச்சிக்கு ஆபத்து ஏற்பட்டு விடும்.

அதுவே, அந்த செடிகள் நன்றாக வளர்ந்து... அதன் வேர்கள் ஆழமாக வேர் விட்டு... அதன் தண்டின் அடிப்பகுதி நன்றாகப் பருத்து... ஒரு மரமாக மாறியதற்குப் பின், அந்த முள்வேலி தேவையில்லாததாகிறது. அது மட்டுமல்ல, அதன் பருத்த அடிப்பகுதியில், ஒரு யானையைக் கூட சங்கிலி கொண்டு இணைத்துவிட முடியும்.

அது போலத்தான், ஆன்மீக வாழ்வுக்கும்... உலக வாழ்வுக்கும்... இடையே சரிசமானமாக வாழும் பக்குவ நிலையை... மனித மனம் எளிதில் அடைந்து விடுவதில்லை. அதுவரை... மனிதனின் மனம்... 'இறைவனின் கருணை' என்ற 'அன்பு வேலிக்குள்' பாதுகாக்கப்பட வேண்டும். அவ்வாறு, படிபடியாக பக்குவப்பட்ட மனது... உலக வாழ்வில் ஈடுபட்டாலும், அதன் தன்மை மாறாது... மரத்தினைப் போல உறுதியாக மாறிவிடும்.

ஸாய்ராம்.


No comments:

Post a Comment

ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...