Monday, April 13, 2020

'பகவான் ராமகிருஷ்ண பரமஹம்சர்' அருளிய... சிறு கதைகளின் தமிழாக்கம். 'பலாச் சுளைகளை எடுப்பது போல...''





ஒரு கனிந்த பலாப் பழத்திலிருந்து... அதன் சுளைகளை ஒவ்வொன்றாக எடுப்பது என்பது... ஒரு அனுபவம்தான். ஏனெனில், அந்தச் சுளைகள் அதன் பிசுபிசுப்பான பாலுக்குள்தான் மூழ்கி இருக்கும். அதை அப்படியே எடுத்தால்... நமது கைகளில் அந்த பிசுபிசுப்பான பால் ஒட்டிக் கொண்டு... அந்த சுளைகளை எடுப்பது மிகவும் கடினமானதாகிவிடும்.

முதலில் நமது கைகளை எண்ணையில் தோய்த்துக் கொள்ள வேண்டும். பின்னர், அந்த பழத்தை வெட்டி, ஒவ்வொரு சுளையாக பிரித்தெடுக்க வேண்டும். கைகளில் தோய்க்கப்பட்ட எண்ணை... பிசுபிசுப்பான பால்... கைகளில் ஒட்டிக் கொள்ளாமல் காத்து... அனைத்துச் சுளைகளையும் சுலபமாக எடுக்க உதவும்.

அது போலத்தான்...இந்த உலக வாழ்வில் நாம் உழலுவது என்பது, அது... ஆபத்துக்களும்... துன்பங்களும்... துயரங்களும்... நிறைந்தது. அதில் நாமாக ஈடுபடுவது.. வெறும் கைகளில் பலாப் பழத்திலிருந்து சுளைகளை எடுப்பது போலாகிவிடும். உலக வாழ்வின் பற்றுகளுக்குள்ளும்... பந்தங்களுக்குள்ளும்... சிக்கிக் கொண்டு மீளமுடியாத துன்பத்தில் சிக்கிக் கொள்ள வேண்டியிருக்கும்.

அதுவே, முதலில் இறைவனுடன் ஒரு உறவை ஏற்படுத்திக் கொண்டு... பின்னர் உலக வாழ்வில் ஈடுபடுவது என்பது... கைகளில் எண்ணையை தோய்த்துக் கொண்டு, பலாச் சுளைகளை எடுப்பது போல... உலக வாழ்வின் பந்தங்களில் சிக்கிக் கொள்ளாமல்... வாழ்வை கடந்து போக உதவும்.

ஸாய்ராம்.


No comments:

Post a Comment

ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...