முன் தொடர்ச்சி...
... இந்தப் 'பாரம்பரியப் பெயரிடலை' மீட்டெடுப்பது என்பது ஒரு சவாலான முயற்சிதான்...
தொடர்கிறது...
கோத்திரம் (ரிஷிகளின் பூர்வம்)... குலம் ( சிவ குலம்... வைணவ குலம்)... குடி (குல தெய்வம்)... என வகைப்படுத்துவதில்தான்... நமது முதல் முயற்சி தொடங்குகிறது.
நீங்கள் ஒரு 'ஜோதிட வழிகாட்டியாக' இருக்கும் பக்ஷத்தில்... உங்களிடம் தனது குழந்தைக்கு பெயரிடுவதற்காக, வரும் ஒருவருக்கு... இந்த 'பாரம்பரிய முறையில்' எவ்வாறு வழி காட்டப் போகிறீர்கள்...?
அதற்கான சில 'வழி முறைகளை' இங்கே வகைப்படுத்துகிறோம்... (கவனிக்க வேண்டியது : இவையனைத்தும் விதி விலக்குகளே...!)
1) முதலில் தந்தை, தாயாரின்... 'கோத்திரத்தை' உறுதி செய்து கொள்ள வேண்டும்.
# அவர்களின் இணைவில் 'கோத்திரக் கலப்பு இல்லாமல்' இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
# ஒரு வேளை 'கோத்திரக் கலப்பு இருக்கும்' பக்ஷத்தில்... பிறந்த குழந்தை 'ஆணாக' இருந்தால்... 'தந்தையின் கோத்திரத்தை' மூலமாகக் கொள்ளலாம்.
# 'கோத்திரக் கலப்பில்' பிறந்த பெண் குழந்தையாக இருக்கும் பக்ஷத்தில்... 'தாயாரின் கோத்திரத்தை' மூலமாகக் கொள்ளலாம்.
2) இரண்டாவதாக தந்தை, தாயாரின்... 'குலத்தை' உறுதி செய்து கொள்ள வேண்டும்.
# அவர்களின் இணைவில் 'குலக் கலப்பு' இல்லாது இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
# ஒரு வேளை 'குலக் கலப்பு' இருக்கும் பக்ஷத்தில்... பிறந்த குழந்தை ஆண் குழந்தையாக இருந்தால்... தந்தையின் குலத்தை மூலமாகக் கொள்ளலாம்.
# 'குலக் கலப்பில்' பிறந்த பெண் குழந்தையாக இருக்கும் பக்ஷத்தில்... தாயாரின் குலத்தை மூலமாகக் கொள்ளலாம்.
3) மூன்றாவதாக 'தந்தை, தாயாரின் 'குடி' (குலதெய்வங்களை) உறுதி செய்து கொள்வதுடன்... உறவு முறைகளில் அவர்களின் இணைவு 'மாமன், மைத்துனன்' என்ற வழியில் வருவதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
# அவர்கள் இணைவில் 'குடிக் கலப்பு' இல்லாது இருப்பதை உறுதி செய்து கொள்ள வேன்டும்.
# 'குடிக் கலப்பு' இருக்கும் பக்ஷத்தில்... பிறந்த குழந்தை ஆண் குழந்தையாக இருந்தால்... 'தந்தையின் குடியை' மூலமாகக் கொள்ளலாம்.
# 'குடிக் கலப்பில்' பிறந்த குழந்தை பெண் குழந்தையாக இருக்கும் பக்ஷத்தில்... 'தாயாரின் குடியை' மூல்மாகக் கொள்ளலாம்.
மேற்கண்ட 'மூன்று முக்கிய அம்சங்களை' முதலில் உறுதி செய்து கொண்டு... அவைகளின் நிலைகளையொட்டி... பிறந்த குழந்தையின் 'பாரம்பரிய வழியை' முறைப்படுத்த வேண்டும். இவ்வாறு முறைப்படுத்திவிட்டுத்தான், 'பெயர் வைப்பதற்குள்' நுழைய வேண்டும்.
அடுத்த கட்டம்தான்... 'ஜோதிடக் கலையின்' துணையைக் கொண்டு... பிறந்த குழந்தையின் 'ஜனன ஜாதகத்தைக் கணித்து'... 'பெயர் வைப்பதற்கான' (Namology) வழி முறையில்...
~ குழந்தையின் 'ஜென்ம நட்சத்திரம்'... அதன் பாதம்...
~ நட்சத்திரத்திற்குண்டான நாம எழுத்துக்கள்...
~ ஜென்ம லக்னம்...
~ நவாம்ஸ லக்னம்...
~ தசா புத்தி இருப்பு...
... என, இவற்றை முறைப்படுத்திக் கொள்ள வேண்டியது.
மேற்படி கணித்த 'ஜாதகத்தின்' துணையைக் கொண்டு... கிரக அமைவுகளை நன்றாக ஆய்ந்து... ஜாதகருக்கு மிகவும் உகந்த... யோகமுள்ள... கிரகத்தினை கண்டறிய வேண்டும்.
இறுதிக் கட்டமாகத்தான்... எண் கணிதம் (Numerology) என்ற கலையைக் கைக் கொள்ள வேண்டும்.
~ ஜாதகத்தின் வழியாகக் கண்டறிந்த 'யோகக் கிரகத்தின்'... 'எண் கணித எண்ணை' உறுதி செய்து கொள்ள வேண்டும்.
~ ஜாதகத்தின் வழியாக உறுதி செய்து கொண்ட 'நட்சத்திரத்தின்' நாம எழுத்துக்களின் அடிப்படையாக... அதை பொதுவான 'ஆங்கில எழுத்துக்களின்' மூலத்திற்கு மாற்றிக் கொள்ள வேண்டும்.
~ கோத்திரம்... குலம்... குடி என்ற குல தெய்வம்... என்ற 'பாரம்பரிய முறையில்'... தேர்ந்தெடுத்த பெயரை... ஆங்கிலத்தில் எழுதி... அதற்குண்டான எண்களைக் கூட்டி... அதன் மொத்தக் கூட்டு எண்... முன்பு ஜாதகத்தின் வழியாக கண்டறிந்த 'யோகக் கிரகத்தின்' எண்ணுடன்... சமமாக இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு, பாரம்பரிய முறையில்... கோத்திரம், குலம், குடி, பெயரியல், எண்கணிதம்... என இவையனைத்தையும்... 'ஜோதிடக் கலையின்' மூலமாக இணைப்பதுதான்... பெயரியலின் சூக்ஷுமம்.
இந்த அனுபவ வழியே பயணித்து... மீண்டும் பாரம்பரிய முறையை மிட்டெடுப்போம்... இறைவனின் அருளோடு...
ஸாய்ராம்.

No comments:
Post a Comment