Thursday, April 30, 2020

ஸ்ரீ சாது ஓம் சுவாமிகளின் ஸ்ரீ ரமண வழி, 'சாதனை சாரம்' : சற்சங்கம் - பாடல் 4.





சற்சங்கப் பேராற் சனத்திரளைக் கூட்டினால்,
விற்பன்னர் பேச்சில், மிகப்படித்தோர் - கற்பனை
மெட்டேட் டபரவித்தை யேன்றோ ரிவர்கூட்டம் !
சற்சங்க மன்றிதனைத் தள்ளு.

சற்று... இந்தப் பாடலை எளிமையாக்கினால்...

சத்சங்கப் பேரால் ஜனத்திரளைக் கூட்டினால்,
விற்பன்னர் பேச்சில், மிகப் படித்தோர் - கற்பனை
மெட்டேல் பரவித்தை என்றோர் இவர் கூட்டம் !
சத்சங்கம் அன்றி இதனைத் தள்ளு.

பொருள் :

சத்சங்கம் என்று ஒரு ஜனத்திரளைக் கூட்டி... அந்த ஜனத்திரளுக்கு மத்தியில் ஆத்மாவைப் பற்றி அறிந்து கொள்ள முற்பட்டால்... பேச்சில் விற்பன்னராகவும்... மிகப் படித்தவராகவும்... பரவித்தை என்ற ஆத்ம ஞான அறிவில் கற்பனைகள் செய்யக் கூடியவர்களாகவும்... மாறுவோமே தவிர... சத்சங்கம் என்ற ஆத்மஞான இணைவில் நிலைக்க மாட்டோம். ஆதலால்... அந்தக் கூட்டத்தை தவிர்த்துவிடு.

ஸாய்ராம்.

No comments:

Post a Comment

ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...