Tuesday, April 28, 2020

ஸ்ரீ சாது ஓம் சுவாமிகளின் ஸ்ரீ ரமண வழி, 'சாதனை சாரம்' : சற்சங்கம் - பாடல் 3.




அத்தகைய நூற்களெவை ?  "யான்மாவே மெய், யதனா
னித்தமு மான்மாவி நிட்டையடை - சத்விசார
மொன்றே செய், யின்றேசெய், யுள்ளே போ" வென்றுன்னை
நன் றுறுத்து (ம்) நூலே அவை.

சற்று... இந்தப் பாடலை எளிமையாக்கினால்...

அத்தகைய நூல்கள் எவை ?  "ஆன்மாவே மெய். அதனால்
நித்தமும் ஆன்மாவில் நிஷ்டை அடை. சத்விசாரம்
ஒன்றே செய், இன்றே செய், உள்ளே போ" என்று உன்னை
நன்று உறுத்தும் நூலே அவை.

பொருள் :

சாதுக்களினிடத்தும்... மகான்களிடத்தும் அணுக முடியாத போது... அவர்களின் அனுபவ நூலகளின் வழியே ஆத்ம அனுபவத்தை பெறலாம் எனில்... அத்தகைய நூல்கள் எவ்வாறு இருக்க வேண்டும் ? அந்த நூல்கள் எதை உறுதியிட்ட் சொல்ல வேண்டுமெனில்... ஆன்மாவே மெய். அதனால் நித்தமும் ஆன்மாவில் நிஷ்டையுற வேண்டும். அந்த சத் சங்கம் ஒன்றைத்தான் செய்ய வேண்டும். அதையும் இன்றே செய்ய வேண்டும். ஆதலால் மனமே உள் திரும்பு... என்று உணர்த்தும் நூல்களாக இருக்க வேண்டும்.

ஸாய்ராம்.

No comments:

Post a Comment

ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...