Wednesday, April 22, 2020

குரு தேடல் - பகுதி 4. யோகானந்த பரமஹம்ஸரது சீடரான டிகின்ஸனின் அனுபவம்..



1936 ஆம் வருடம், டிசம்பர் மாதம் 24 ஆம் தேதி... கிருஸ்துமஸ்த்திற்கு முதல் நாள்... அமெரிக்காவின் கலிஃபோர்னியாமாநிலத்தில் அமைந்துள்ள மௌண்ட் வாஷிங்டன், யோகதா சத் சங்க மையத்தில்... ஒரு கூட்டுத் தியானத்திற்கு பின்னர்... பரிசளிக்கும் நேரம் வந்தது.

அமெரிக்காவிலிருந்து... கடந்த 16 மாதங்களாக 'யோகானந்தர்' மேற்கொண்ட இந்திய தேச பயணத்திர்குப் பின்னர், நடக்கும் முதல் கொண்டாட்டம் என்பதால்... அமெரிக்காவின் அனைத்து பகுதிகளிலிருந்தும் சிஷ்யர்களின் குலாம் மையத்தில் ஆவலுடன் கூடியிருந்தது.

இந்தியாவிலிருந்தும்... வரும் வழியில் பயணித்த பாலஸ்தீனம்... எகிப்து... இங்கிலாந்து... ஃபிரான்ஸ்... இத்தாலி போன்ற நாடுகளிலிருந்தெல்லாம்... தனது ஒவ்வொரு சிஷ்யருக்குமாகத் தேடித் தேடி வாங்கி வந்த பரிசுகள் கிரிஸ்த்துமஸ் மரத்தைச் சுற்றிக் குவிந்திருந்தன.

அதிலிருந்து ஒரு பரிசை எடுத்து... கடந்த 11 வருடங்களாக இந்த மையத்திற்கு தொடர்ந்து வந்து கொண்டிருக்கும்...'கிரியா யோகியான' டிகின்ஸன் அவர்களுக்கு யோகானந்தர் கொடுத்தார். இந்தப் பதினோராவது வருடாந்திரக் கொண்டாட்டத்தில்... தனக்குக் கிடைத்தப் பரிசைப் பிரித்துப் பார்த்து ஆச்சரியத்தில் மூழ்கிப் போனார்... அந்தப் பரிசு 'ஒரு வெள்ளிக் கிண்ணம்'.

உணர்ச்சிப் பெருக்கில் தவித்துப் போன டிக்கின்ஸன்...'ஐயா. இந்த வெள்ளிக் கிண்ணத்திற்காக தயவு செய்து இப்பொழுது என்னை நன்றி கூற விடுங்கள். கிருஸ்துமஸ் இரவென்று எனக்கு வார்த்தைகளே அகப்படவில்லை.' என்றார்.

யோகானந்தரோ புன்னகைத்தபடியே... 'நான் அந்தப் பரிசை உங்களுக்காகவே வாங்கி வந்தேன்.' என்றார்.

'43 வருடங்களாக நான் இந்த வெள்ளிக் கிண்ணத்திற்காகக் காத்துக் கொண்டிருக்கிறேன்... நான் எனக்குள்ளேயே மறைத்து வைத்திருந்த நீண்ட கதை அது...' என்றார் டிக்கின்ஸன்.

 டிக்கின்ஸனின் 5 ஆவது வயதில், அவரது தமையன் அவரை வீட்டுக்கு அருகில் இருக்கும் ஒரு 15 அடி ஆழமுள்ள குளத்தில் விளையாட்டாகத் தள்ளிவிட்டான். இரண்டாவது தடவையாக அவர் மூழுகும்போது... 'ஜொலிக்கும் பல வண்ண ஒளியும் அதன் மத்தியில் நம்பிக்கையளிக்கும் புன்னகையுடன் கூடிய சாந்தமான ஒரு மனித முகமும் தோன்றியது.' மூன்றாவது முறை மூழ்கும் போது தோழன் ஒருவன் நீட்டிய ஒரு அலரி மரக் கொப்பைப் பிடித்துக் கொண்ட அவரை... அவர்கள் தூக்கிக் கரையில் போட்டுக் காப்பாற்றினர்.

12 வருடங்களுக்குப் பின்னர்...1893 ல் 17 வயதான டிக்கின்ஸன், தனது தாயாருடன் சிக்காக்கோவிற்கு விஜயம் செய்தார். அது செப்டம்பர் மாதம்...  அப்போது அங்கு 'உலக சர்வ மத மகா சபைக் கூட்டம்' நடந்து கொண்டிருந்தது. ஒரு முக்கிய வீதியில் அவர்கள் நடந்து சென்ற போது, அவர்களுக்கு முன்னால் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார். டிக்கின்ஸனின் உள்ளுணர்வில் மூழிகிக் கிடந்த அந்த ஒளி வெள்ளம் மீண்டும் அவரைச் சூழ்ந்தது. அவர்களை அறியாமலேயே... அவர்கள் அந்த மனிதரைத் தொடர்ந்தார்கள்... அந்த மனிதர்... மகா சபை நடக்கும் அரங்கத்திற்குள் நுழைந்தார்.

இவர்கள் இருவரும் உள்ளே சென்று பார்க்கும் போது அவரின் 'ஆன்மாவைத் தூண்டக் கூடிய சொற்பொழிவு' நிகழ்ந்து கொண்டிருந்தது. அப்போதுதான், அந்தத் துறவிதான் இந்தியாவிலிருந்து வந்திருந்த உயர் நிலைத் துறவியான 'சுவாமி விவேகானந்தர்' என்பதை அறிந்தனர். அவரது சொற்பொழிவு முடிந்த பின்னர் அவரைச் சந்தித்து போது... அவர் உதிர்த்த வார்த்தைகளால் ஆச்சரியத்தால் முழ்கிப்போனார் டிக்கின்ஸன். அது...'இளஞனே...நீ தண்ணீரை விட்டு விலகி இருக்க வேண்டுமென்று விரும்புகிறேன்...' என்பதுதான்.

தன்னை ஒரு சிஷ்யனாக ஏற்றுக் கொள்ள வேண்டுமென்ற டிக்கின்ஸனின் பிரார்த்தனைகளுக்கு...  விவேகானந்தர், 'இல்லை, என் மகனே, நான் உன் குரு அல்ல. உன் குரு பின்னால் வருவார், அவர் உனக்கு வெள்ளிக் கிண்ணம் ஒன்றை அளிப்பார்.... இப்பொழுது நீ தாங்கிக் கொள்ள முடிவதை விட அதிகமான அருளாசிகளை அவர் உன் மிது பொழிவார்.' என்று கூறினார்.

ஆனால் வருடங்கள் கழிந்தன... ஓர் நாளிரவில் டிக்கின்ஸனின் கனவில் விண்ணுலகத்தைச் சேர்ந்தவர்கள் தோன்றி அந்த இரவுப் பொழுதை இன்னிசையால் நிறைத்தார்கள். அதற்கு மறுநாள் மாலை முதன் முதலாக... லாஸ் ஏன்ஞ்சலீஸில் யோகானந்தரின் சொற்பொழிவைக் கேட்டார். அன்றே அவரிடம் சரணடைந்தார். அதற்குப் பின்னார் 11 வருடங்களுக்குப் பின்னார்... விவேகானந்த குறிப்பிட்டபடி அந்த வெள்ளிக் கிண்ணமும் அவர் கைக்குக் கிடைத்தது.

குரு தேடல் என்பது... தேடல் நம்மிடமிருந்தாலும்... அது அவரின் அருளினால்தான் நிறைவேறுகிறது.

ஸாய்ராம்.

No comments:

Post a Comment

ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...