சத்திலுன்னா நிற்பதற்குச் சக்தியில்லை யென்றாற் போய்
சத்தறிந்த சாதுக்க டம்பக்க(ம்) - நத்தி நில்
அப்பாக் கியமு மடைகிலையே லன்னோர்முன்
செப்பியநூ லோடேனுஞ் சேர்.
சற்று இந்தப் பாடலை எளிமையாக்கினால்...
சத்தில் உன்னால் நிற்பதற்குச் சக்தியில்லை என்றால் போய்
சந்தறிந்த சாதுக்களின் பக்கம் நத்தி நில்
அப் பாக்கியமும் அடைகிலையேல் அன்னோர் முன்
செப்பிய நூலோடேனும் சேர்.
பொருள் :
சத்து என்ற ஆன்மாவில் உன்னால் நிற்பதற்குச் சக்தியில்லை எனில்... அந்த ஆன்மாவில் ஒன்றிய சாதுக்கள் என்ற மகான்களின் அருகில்... அவர்களை அணுகி நிற்கலாம். அந்த பாக்கியமும் கிடைக்க வில்லயெனில்... அந்த மகான்கள் அருளிய அனுபவங்களாகிய அவர்களின் நூல்களின் மூலமாக ஆத்ம அனுபவத்தை அடையலாம்.
ஸாய்ராம்.

No comments:
Post a Comment