Sunday, April 26, 2020

ஸ்ரீ சாது ஓம் சுவாமிகளின் ஸ்ரீ ரமண வழி, 'சாதனை சாரம்' : சற்சங்கம் - பாடல் 1.






'சத்தொடுநஞ் சங்கமே சற்சங்க மான்மாவே
சத்ததனி னிற்றலே சற்சங்கம் - சத்தினைச்
சாட்சாற் கரித்தமகா சாதுக் களுஞ்சத்தே
யாட்பட் டவர்பா லிரு.'

சற்று இந்தப் பாடலை எளிமையாக்கினால்...

சத்தொடு நம் சங்கமே சத்சங்கம் ஆன்மாவே
சத்து அதனில் நிற்றலே சத்சங்கம் - சத்தினைச்
சாட்சாற்கரித்த மகா சாதுக்களும் சத்தே
ஆட்பட்டவர் பால் இரு.

பொருள் :

ஜீவனாகிய நமக்கு நமது ஆன்மாவே 'சத்' என்கிற 'சத்தியம்'. அதோடும் நாம் கொள்ளும் உறவுதான் சத்சங்கம். ஆன்மாவில் நம்மால் சங்கமம் ஆவதற்கு சற்று சிரமாமாக இருக்கும் பட்சத்தில்... அந்த ஆன்மாவிலேயே தன்னை சங்கமமாக்கிக் கொண்ட சாதுக்களின் சங்கமத்தில் இருப்பதும் சத்சங்கம்தான்.

ஸாய்ராம்.

No comments:

Post a Comment

ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...