'கணித முறைகளின் துணை' என்பது... முதல் படியாகவும், 'வானவியல் சாஸ்திரத்தின் துணையென்பது'... இரண்டாவது படியாகவும், இவற்றை மூலமாகக் கொண்டு கணிக்கப்பெறும் ஒரு ஜீவனின் 'ஜோதிடச் சித்திரம்' என்ற 'ஜாதகம்' என்பது... மூன்றாவது படியாகவும்... இருப்பதை சென்ற பகுதியில் பார்த்தோம்...
தற்போது நான்காவது படி நிலையாகிய... அந்த ஜீவனின் 'பிறவிகளின் இரகசியம்' என்பதை ஆய்வோம்.
ஒவ்வொரு ஜீவனும் இறைவனிடமிருந்து தோன்றுவதும்... மீண்டும் இறைவனின் திருவடியிலேயே கலந்துவிடுவதும்தான்... ஜீவனுக்கான வாழ்வியலின் நோக்கமாக இருக்கிறது. இப்பூவுலகில் வாழும் 84 லட்ச உயிரினங்களில்... மனிதன் ஒருவனுக்குத்தான்... தனது ஒவ்வொரு செயல்களுக்கும்... முடிவு எடுக்கும் அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது.
அந்த முடிவை... 'இறைவனை' முன்னிட்டு... தன்னை 'இறைவனின் ஒரு கைக்கருவி' என்ற எண்ணத்தோடு... கடமையுணர்வுடன் எதிர்கொள்ளும் போது, அந்த ஜீவனது வாழ்வை முழுமையாக்கி... தன்னுடன் இணைத்துக் கொள்ளும் இறைவன்... அந்த ஜீவனுக்கும் 'மீண்டும் பிறவியில்லா பெரு வாழ்வு' என்ற பரிசினை அளிக்கிறான்.
அதுவே, 'நான்தான்' செய்கிறேன்... என்ற எண்ணத்தோடு செயல்படும் ஜீவன்... அந்த செயல்களின் விளைவாக வெளிப்படும் 'இன்ப-துன்பங்களுக்கு' (கர்ம வினைகள்) தாமே பொறுப்பேற்க வேண்டியிருக்கிறது. அதனால், அந்த ஜீவன் தனது வாழ்வு நிர்ணய காலத்தையும் கடந்து... அடுதடுத்த பிறவிகளில்... அதன் 'கர்ம வினைகளை' அனுபவிக்க வேண்டியுள்ளது. அடுத்தடுத்த பிறவிகளிலும்... இதே நிலை தொடர்ந்தால்... மீண்டும் 'பிறவிப் பிணி' என்ற மீளாத் துயரில் இருந்து மீள முடியாது தவிக்கிறது.
இந்தப் பிறவித் தளைகளைக் குறிப்பிடும் வண்ணம் அமைவதுதான் இராசி என்ற 'சந்திர பகவானின்' நிலை. ஒரு ஜீவனின் பிறப்பு நிகழும் நேரத்தில்... சந்திர பகவான் உலவும் 'நட்சத்திர மண்டலம்' இராசியாகவும்... அதுவே ஜீவனுக்குறிய 'நட்சத்திரமாகவும்'... அந்த நட்சத்திரத்தின் 'சாரம் பெற்ற கிரகத்திற்கான' கால அளவில்... எந்தப் பகுதியில் பிறப்பு நிகழ்கிறதோ... அதற்கு எஞ்சிய பகுதியே... ஜீவன் முதலில் கடக்கும் 'தசா' என்ற 'வாழ்க்கைப் பாதையாகவும்' அமைகிறது.
இந்த 'தசா' என்ற வாழ்க்கபிப் பாதையின் சாரத்தைத்தான்... 'கர்ப்ப செல் நீக்கி இருப்பு' என்ற ஜீவனின் பிறப்பு இரகசியமாகக் கொள்கிறது...ஜோதிடம் என்ற கலை. அதாவது இந்த 'கர்ப்ப செல் நீக்கிய இருப்பாகக்' கணக்கிடப்படும் கிரகத்தின் எஞ்சிய காலமான... 'வருடங்கள்... மாதங்கள்... நாட்கள்...' என்பவை, இரண்டு முக்கிய நிகழ்வுகளை உறுதி செய்கின்றது.
ஒன்று... அந்த ஜீவனின் 'கர்ப்ப செல் நீக்கிய இருப்புக்கு' முந்தைய காலங்கள்... ஜீவனது சென்ற பிறவியாகக் கணக்கிடப்படுகிறது.
இரண்டு... அந்த ஜீவனது 'கர்ப்ப செல் நீக்கிய இருப்பின் 'எஞ்சிய காலங்கள்' அந்த ஜீவனது நடப்புப் பிறவியாகக் கணக்கிடப்படுகிறது.
'ஜீவனின் பிறவிச் சுழற்சியை' நிர்ணயிக்கும் வழிவகையை இந்த ஜோதிடக் கலை ஒன்றே உலகிறகு வழங்கியிருக்கிறது. உலகில் வழங்கி வரும் வேறு எந்தக் கலையும்... இந்த ஜீவனின் 'முன் ஜென்மம்' என்ற 'முந்தைய பிறப்புகளின்' சூட்சுமமான 'ஜீவனின் வாழ்க்கைப் பயணத்தை' இது போன்று துல்லியமாக வரையறுத்துக் கூறுவதில்லை.
ஆகவேதான்... இறைவனின் அருளினால்... நமது புரதான பாரதத்தின் 'ரிஷி புங்கவர்களான' மகா முனிவர்களின் 'அந்தர் ஞானத்தால்' உருவாக்கப்பட்ட இந்த 'ஜோதிடக் கலை'... பாரதம் உலகுக்கு வழங்கிய மிகப் பெரும் 'அறிவுக் கழஞ்சியமாகப்' போற்றப்படுகிறது.
அணுகுமுறை என்ற இந்த பேரறிவுப் பாதையில் நாம் கடக்க விருப்பது... இந்தக் கலையைக் கொண்டு... ஜீவனின் வாழ்வு இரகசியமான... கர்ம வினைகளைக் கண்டறியும் 'ஐந்தாவது படி நிலை'... இந்தப் படி நிலையையும்... இறைவனின் அருளால் தொடர்ந்து பயணித்துக் கடப்போம்...
ஸாய்ராம்.

No comments:
Post a Comment