முன் தொடர்ச்சி...
... இவ்வாறு... எண் கணிதத்தையும்... பெயரியல் கலையையும்... ஜோதிடக் கலையுடன் ஒப்புமைப் படுத்தி ஆய்ந்து பார்ப்பதும்... ஜோதிடக் கலையின் சூட்சுமங்களில் ஒன்றுதான்.
தொடர்கிறது...
பெயரியல் கலை ( Namology ) என்பது புதிதானதல்ல. நம் பாரம்பரியக் கலையான 'ஜோதிடக் கலையுடன்' தொடர்பு பெற்றதுதான்.
இந்த புவி வாழ்வில் மனிதனை அடையாளப்படுத்துவதற்கு இரண்டு காரணிகள் தேவைப்படுகின்றன. ஒன்று... 'நாமம்' (பெயர்), மற்றொன்று... 'ரூபம்' (தோற்றம்).
ரூபம்... மாறுதல்களுக்கு உள்ளாகிறது. ஆனாலும்... அறிந்தவர்களால் அடையாளமும் காணப்படுகிறது. நாமம்... நம்மால் மாற்றிக் கொள்ளாதவரை... மாறுதல் இல்லாமல்... நம் வாழ்வு முழுவதுமாகத் தொடர்கிறது.
அதனால்தான், என்றோ... சிறிய வயதில் நம்மைப் பார்த்தவர்கள்... நம்மைப் பார்த்தவுடன்...'நீங்கள் 'சரவணன்தானே...!' என்று முதலில் கேட்பதும், பின்னர்... ' உங்கள் தோற்றத்தை வைத்துதான்... கண்டு பிடித்தேன்...!' என்று பின்னர் கூறுவதையும்... நடைமுறையில் அனுபவிக்கிறோம்.
தோற்றம் என்ற 'ரூபம்' மாறிக்கொண்டெ இருந்தாலும்... அதன் வளர்ச்சியிலும், மாற்றத்திலும், நமது பங்கு ஒன்றுமில்லாததாகிறது. ஆனால், 'பெயரைப் பொருத்தவரை', அதை தீர்மானிக்கும் உரிமை, நமக்கு இல்லாவிட்டாலும்... நமது பெற்றோருக்குக் வழங்கப்பட்டிருக்கிறது. அதை அவர்கள் எவ்வாறு பயன்படுத்திக் கொண்டார்கள் என்பதை அறிந்து கொண்டால்தான்... அதன் மகத்துவம் நமக்குப் புரியவரும்.
பாரதத்தின் புதல்வர்கள் அனைவரும் 'சப்த ரிஷிகளின்' கோத்திரத்தில் பிறந்தவர்களாகிறோம்.(மூலம் : ஸ்ரீ மத் பாகவதம்). அந்த கோத்திரத்திலிருந்து... குலமும் (சிவகுலம்... விஷ்ணு குலம்)... அதிலிருந்து குடிகளும் (குல தெய்வப் பிரிவுகள்) வகுக்கப்பட்டன.
மேற்கண்ட வழிமுறைகளைக் கொண்டே 'பெயர்கள் சூட்டப்பட்டன'. பெயர்களைக் கொண்டே... முற்காலத்தில் கோத்திரங்களையும்... குலத்தையும்... குடியையும்... அறிந்து கொள்ள முடிந்தது.
'பரத்வாஜ்... கௌதமன்...' போன்ற பெயர்கள் 'கோத்திரங்களை' அறிந்து கொள்ளுமாறு அமைந்தன.
'பரமேஸ்வரன்... அருணாசலம்...' போன்ற பெயர்கள்... 'குலத்தை' அதாவது 'சிவ குலத்தைப்' பிரதிபலிப்பவைகளாக அமைந்தன.
'ரெங்கநாதன்... ஸ்ரீநிவாஸன்...' போன்ற பெயர்கள்...'குலத்தை' அதாவது 'விஷ்ணு குலத்தைப்' பிரதிபலிப்பைவைகளாக அமைந்தன.
'இருளன்... வீரபத்திரன்... கருப்பண்ணன்... பெரியண்ணன்...' போன்ற பெயர்கள்... 'குடியை' அதாவது 'குல தெய்வப் பிரிவுகளை' பிரதிபலிப்பைவைகளாக அமைந்தன.
இவ்வாறு அமைந்த பெயர்களின் வழியாகத்தான்... மனிதனின் நாகரீகம் என்ற பாரம்பரியம் பாதுகாக்கப்பட்டது.
இந்த பாரம்பரியம் எவ்வாறு பரம்பரை... பரம்பரையாகத் தொடர்ந்தது என்பதை... இனி வரும் பகுதியில் தொடர்ந்து ஆய்வோம்... இறைவனின் அருளுடனே...
ஸாய்ராம்.

No comments:
Post a Comment