'பாற்கடலைக்' கடையும் போது, 'மகாமேரு மலையை' மத்தாக்கி, 'வாசுகி' என்ற சர்ப்பத்தைக் கயறாக்கித்தான்... தேவர்கள் வால் புறமும்... அசுரர்கள் தலைப் புறமும்... இழுத்துக் கடைந்தார்கள்.
பாற்கடலிலிருந்து பவித்திரமான வஸ்துக்கள் வருவதற்கு முன், வெளிவந்தது 'ஆலகால விஷம்தான்'. அதைத்தான் 'சர்வேஸ்வரன்' உண்டு... நீலகண்டனானார்.
அந்த நிகழ்வுக்குத் தானும் ஒரு காரணம் என்பதை உணர்ந்த 'வாசுகி' தான் வந்து தவமியற்ற ஒரு ஸ்தலத்தித் தேர்ந்தெடுத்தது. அந்த ஸ்தலம்தான்... கும்பகோணத்திற்கு அருகிலிருக்கும் 'கீழப் பெரும்பள்ளம்.
இந்த மூங்கில் காடுகள் சூழ்ந்திருக்கும் ஸ்தலத்திற்கு வந்திருந்து, தாயார் 'சௌந்தர்ய நாயகி சமேத நாகநாதர் சுவாமியை' வழிபட்டு, தனக்கு ஏற்பட்ட மனக்குறையைத் தீர்த்து, தனக்கு அருளியவாறே, இங்கு வந்து வழிபடும் அனைவருக்கும் அருளிட வேண்டும் என்றும் பிரார்த்திக்கிறார்.
வாசுகியின் பிரார்த்தனைக்கு மனமிரங்கிய சர்வேஸ்வரன், வாசுகிக்கும், வாசுகியின் துணையால் கிடைத்த அமுதத்தை உண்டு, வால் வேறான சுவர்ண்பானுக்கு, 'கேது பகவானாக' பிரகாரத்தில் இடமுமளித்து, ஆலய சேத்திர பாலகனாக நியமித்து அனுக்கிரஹிக்கிறார்.
'ஞானக்காரகரான'... கேது பகவானை, இங்கு வந்து வழிபடுவோருக்கு, 'கர்மவினைகளைக் கடந்து போகும்படியான' ஞானத்தை அருளுமாரு சர்வேஸ்வரன் பணித்துள்ளார்,
இந்த நிகழ்வை நினைவுபடுத்தும்படியாக, ஒவ்வொரு பங்குனி மாதத்திலும், வாசுகி உட்சவமும்... தொடர்ந்து மூன்றாம் நாள், கேது பகவானுக்கு, நாகநாதர், தாயார் சௌந்தர்யநாயகி சமேதமாக' காட்சி அருளும் திரு உற்சவமும் நடந்தேருகிறது.
'கர்ம வினைகளின் கடுமையால்' துன்புற்று வருந்துபவர்கள், அதைக் கடந்து போகும் வல்லமையையும்... அதை ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தையும்... கொடுத்து 'ஞானவானாக' மாற்றும் ஸ்தலமாக... இந்தக் கீழப்பெரும்பள்ளம் அமைகிறது என்றால்... அது மிகையில்லை.
தொடர்ந்து பயணிப்போம்... இறைவனின் அருளோடு...
ஸாய்ராம்.




No comments:
Post a Comment