'சுக்கிர பகவான்' சுகத்தை அள்ளி வழங்குபவர்... என்ற பதம் நிதர்சனமானதுதான். அவரிடம் இருக்கும் 'அமிர்த சஞ்சீவினி திருமந்திரம்' இறவாமையை மட்டுமல்ல... மீண்டும் பிறவாமையயும்... அளிக்கும் திருமந்திரமாக இருக்கிறது.
அந்த ஆனந்த அனுபவத்தை அளிக்கும் ஸ்தலமாக அமைந்ததுதான்... திருவரங்கம், 'ஸ்ரீ ரெங்கநாதரின் திருக்கோவில்'. இந்த ஆலயத்தின் திருமூர்த்தி, 'சுக்கிர பகவானை' தனது அம்சத்தில் ஆட்கொள்கிறார்.
திவ்யதேசங்களின் முதல் ஸ்தலமாகவும்... 'பெரிய' என்ற பதத்திற்கு ஏற்றவாறு, இங்கமைந்திருக்கும் அத்தனை அம்சங்களும் 'பெரிதுதான்'.
கோவில்... பெரிய கோவிலாகிறது. கோபுரம்... பெரிய கோபுரமாகிறது. பெருமாள்... பெரிய பெருமாளாகிறார். கருடன் பெரிய கருடனாகிறார். திவ்ய தேசக் கோவில்களிலேயே, வருடம் முழுவதும்... ஒவ்வொரு நாளும் 'திருநாளாககக்' கொண்டாடப்படுவது இந்த ஆலயத்தில் மட்டும்தான்.
ஆலய முர்த்தியான 'ஸ்ரீ ரெங்கநாதர்' அரவணைப் பள்ளி கொண்டு அருள் காட்சி அளிப்பதும், தான் உற்சவராக... 'நம்பெருமாளாக' எழுந்தருளி... திருவரங்கத்தை மட்டுமல்ல... இந்த ஈரேழு லோகங்களையும் ஆளும்... 'அரங்கராஜனாக' அருள் ராஜ்ஜியம் நடத்துவது... நாம் பெற்ற புண்ணியமன்றி வேறேதும் இல்லை.
'சுக்கிர பகவானின்' ஆளுமையைப் பெற்ற... அல்லது பெற வேண்டிய ஜாதகர்களின் ஒரே சரணாகதியாகத் திகழ்வது... இந்த 'பூலோக வைகுண்டமான' திருவரங்கமே.
இந்த ஆலயம் வந்து, அம்மாபண்டபக் கரையில் புரண்டோடும் காவேரியில் மூழ்கி எழுந்து... இராஜ கோபுரம், கல்கம்பம், ரெங்கா ரெங்கா கோபுரம் வழியாக... கருடன்... ஆஞ்சநேயர்... 'தாயார் ஸ்ரீ ரெங்க நாச்சியாரை' தரிசித்து... பாற்கடலில் இருந்து தோன்றிய... விமானத்தின் கீழ் பள்ளி கொண்டிருக்கிற. ஸ்ரீ ரெங்கநாதரை தரிசித்து, உற்சவத் திருமேனியாக எழுந்தருளும்... நம்பெருமாளின் திருவடியில்... சரணடையும் யாவர்க்கும்... இந்த பூலோகத்தின் சுக வாழ்வு... குறவில்லாது கூடும் என்பது திண்ணமே.
தொடர்ந்து பயணிப்போம்... இறைவனின் அருளோடு...
ஸாய்ராம்.





No comments:
Post a Comment