அகப்பச் சுவையறியா தாழ்ந்தமிழ்ந்தெல் லார்க்கு
மிகப்பெய் திடுமே விருந்திவ் - விகத்தின்ப
மேது நுகரா ரிறைஞ்சுவார்க் கீந்தருள்வார்
கோதகன்ற ஞானியருள் கூர்ந்து.
( 'ஸ்ரீ சாது ஓம்' சுவாமிகள் அருளிய 'சாதனை சாரம்', பாடல் : 13. ஞானி அருள் )
இந்தப் பாடலை சற்று எளிமையாக்கினால்...
'அகப்பை சுவை அறியாது... ஆழ்ந்து... அமிழ்ந்து... எல்லார்க்கும்,
மிகப் பெய்திடுமே விருந்து. இகத்து இன்பம்
ஏதும் நுகரார்... இறைஞ்சுவார்க்கு ஈந்து அருள்வார்
கோது அகன்ற ஞானி அருள்'
... என்று அமையும்.
இதன் பொழிப்புரையாக... சுவாமிகள் அருளியது...
' சுவை மிக்க பாயாசம் போன்ற உணவுப் பொருள்களை வாரி வழங்கும் அகப்பையானது, அதன் சுவையை ருசி பார்ப்பதேயில்ல. பரிமாறும் ஒவ்வொரு சமயத்திலும் அது அந்தச் சுவை மிகுந்த பாயசம் போன்ற உணவுப் பொருள்களுள் ஆழ்ந்து, முழுகி... முழுகி... எழுந்து வந்து, எல்லோருக்கும் பாயச விருந்தைப் பரிமாறும். அது போலவே, யாதொரு உலக தோஷமும் அற்ற ஆன்ம ஞானிகள்... இகபர சுகங்களுள் எதையுமே தாம் நுகர மாட்டார்கள். ஆனால், அவற்றை வேண்டி வந்து பிரார்த்திக்கும் காமியார்த்திகளுக்கு (உலக வாழ்வில் உழலுபவர்களுக்கு) கிடைக்கும் படி அருள் செய்வர்.'
ஸாய்ராம்.
'

No comments:
Post a Comment