Monday, January 27, 2020

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் - பகுதி 79. 'ஆயுள்காரகரான' சனி பகவான்', வெளிப்படுத்தும் கர்மவினை சூட்சுமங்கள்'. பகுதி 3.





'தர்ம பரிபாலனத்தை' மேற்கொள்பவரான... 'சனி பகவான்'...

# 'மகர இராசியில்' ... தனது ஆளுமையை நிலைநிறுத்தி 'ஆட்சி செய்கிறார்'. அந்த வீட்டில், 'ஞானக்காரகரான'... 'குரு பகவான்', தனது பலத்தை இழந்து... நீச நிலையில் சஞ்சரிக்கின்றார். 'ஆற்றல் காரகரான'... 'செவ்வாய் பகவான்' மிக வலிமை பெற்று, 'உச்ச கதியில்' இயங்குகிறார்.

இந்த அமைவு...

* ஜீவன், தனக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ள 'ஆயுள் காலத்தை' பூரணமாகக் கடந்து போகும். (சனி பகவானின் ஆட்சி நிலை)

* ஜீவன், தனக்கான உலக வாழ்வை, மிக முக்கியமானதாகவும், அதன் ஏற்ற-தாழ்வுகளிலும்... இன்ப-துன்பங்களிலும்... மூழ்கிப்போய், உலக வாழ்வின் போராட்டத்தில் தனது 'ஆற்றல்' முழுவதையும் இழந்து போகும். (செவ்வாய் பகவானின் உச்ச நிலை)

* தான் 'எதிர்கொள்ளும் அல்லது வெளிப்படுத்தும்' செயல்களின் விளைவுகளில் பெரும் எதிர்பார்ப்பைக் கொண்டிருக்கும். அதனால் விளையும் இன்ப-துன்பங்களால் மீண்டும், மிண்டும் பிறவிகளை நோக்கி நகர ஆரம்பிக்கும். (குரு பகவானின் நீச நிலை)

# 'கும்ப இராசியில்'... தனித்துவம் பெற்ற 'ஆட்சியாளராக'... கோளோச்சுகிறார்.

இந்த அமைவு...

* பிறவியின் உன்னதத்தை உணர வைக்கும் ஸ்தானமாக... இந்த இராசி விடு அமைகிறது.

* 'அசத்து' என்ற அசையா பொருள்களிருந்து பயணித்த ஜீவனின் வாழ்வு அசையும் தாவரங்களாகி... பின்னர் புழு, பூச்சிகள், நீர்வாழ்வன, காற்றில் வாழ்வன, நிலம் வாழ்வனவற்றில் விலங்குகள் என பரிணமித்து இறுதியில் இந்த அரிய 'மனிதப் பிறவியை' அடைகிறது. இந்த உன்னதத்தை உணர வைக்கும் இடமாக இந்த இராசி வீடு அமைகிறது.

* அரிதிலும், அரிதாகப் பெற்ற இந்த 'மனித வாழ்வை' எவ்வாறு பூரணமாக்குவது...? என்ற நோக்கத்துடன் ஜீவனை பயணிக்க வைக்கும் ஸ்தானமாக இந்த இராசி வீடு அமைகிறது.

* ஒவ்வொரு 'பிரளய காலத்திலும்' ஜீவர்களின் மூலம்... ஒரு 'கும்பத்தில்' வைத்துக் காக்கப்படுவதாகவும்... பிளயத்தின் முடிவிலும், அடுத்த யுகத்தின் ஆரம்பத்திலும்... இந்த 'கும்பத்தில்' இருந்துதான்... ஜீவனின் உற்பத்தியும் ஆரம்பிக்கிறது என்பதையும்...  நமது புராணங்கள் வரையறுக்கின்றன.

* அந்த ஒப்பற்ற ஸ்தானமாக இந்த இராசி வீடு அமைகிறது. அதனால்தான், 'குடும்பத்துக்கு ஒரு கும்பம் அவசியம்...' என்ற சொல்வழக்கும் உலவுகிறது.

இதுவரையில்... 'தர்மபரிபாலன' நாயகரானவரும், ஜீவனின் செயல் வெளிப்பாடுகளுக்கு சாட்சியாளராகவும், ஜீவ வாழ்வின் ஆயுளுக்கு காரகத்துவமானவராகவும் பொறுப்பு வகிக்கும்... 'சனி பகவான்' அருளும் 'கர்ம வினைகளின் விளைவுகள்' பற்றிய பற்றிய... ஒரு சிறிய ஆய்வின் வழியே பயணித்தோம்... இறைவனின் அருளோடு.

ஸாய்ராம்.

No comments:

Post a Comment

ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...