Saturday, January 25, 2020

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் - பகுதி 76. 'ஞானக்காரகரான குரு பகவான்', வெளிப்படுத்தும் கர்மவினை சூட்சுமங்கள்'. பகுதி 3.





'ஞான வெளிப்பாட்டை' ஒரு ஜீவன் பெறும் மார்க்கத்தை... 'ஜோதிடச் சித்திரத்தின்' வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

'குரு பகவான்'... இராசி சக்கரத்தில்...

# 'கடக இராசியில்' பலமுடன்... 'உச்ச கதியில்' இயங்குகிறார். ஆனால், அந்த வீடு 'சந்திர பகவானின்' சுய சேத்திரமாக அமைகிறது. 'மனோகாரகரான'... 'சந்திர பகவான்' இந்த இராசி விட்டில் 'ஆட்சி பலம்' பெறுகிறார். 'ஆற்றல் காரகரான'... 'செவ்வாய் பகவான்' இதே விட்டில் தனது பலத்தை இழந்து... 'நீச நிலையில்' சஞ்சாரம் செய்கிறார்.

இந்த நிலை...

*  ஜீவன், தனது மனதில் உதிக்கும் எண்ணங்கள் என்ற 'கர்ம வினைகளின் விளைவுகளை'... சமநிலையில் இருந்து நோக்கும் வல்லமையைப் பெறுகிறது. (சந்திர பகவானின் ஆட்சி நிலை)

* இந்த திடமான மனோ நிலையில் இருக்கும் ஜீவன்... அதன் எண்ணங்களை மிக ஆக்கப்பூர்வமாகவும்... மட்டுப்பட்ட ஆற்றலுடனும் வெளிப்படுத்துகிறது. எண்ணங்கள் போகும் போக்கில் செல்லாமல்... மனதை அதன் செயல்களின் சரியான விளைவுகளை விளைவிக்கும் பாதையில் செலுத்தும் வல்லமையை ஜீவன் பெறுகிறது. (செவ்வாய் பகவானின் நீச நிலை)

* 'சம நிலையில் இருக்கும் மனம்'... 'சரியான ஆற்றலுடன் இயங்கும் மனம்'... இந்த இரண்டு நிலைகள் போதும், ஞானத்தின் வெளிப்பாட்டை உணர்வதற்கு. ஜீவன், ஞான ஒளி வெள்ளத்தில் மூழ்கி முத்தெடுக்கும் வாய்ப்பைப் பெறும். (குரு பகவானின் உச்ச நிலை)

# 'மகர இராசியில்' தனது பலத்தை இழந்து, 'குரு பகவான்' நிச நிலையில் சஞ்சரிக்கிறார். அந்த விடு... 'ஆயுள் காரகரரான'... 'சனி பகவானுக்கு', ஆட்சி வீடாகிறது. அதே நேரத்தில், இந்த விட்டில்... 'ஆற்றல் காரகரான'... 'செவ்வாய் பகவான்' பலம் பெற்று 'உச்ச கதியில்' சஞ்சரிக்கிறார்.

இதன் விளைவாக...

* ஜீவன் தனக்கு, இந்தப் பிறவியில் விதிக்கப்பட்ட... 'பிராரப்த கர்மம்' என்ற 'கர்ம வினையின் விளைவுகளை... தனது ஆயுள் காலம் முழுவதும் அனுபவித்துக் கடக்கிறது. (சனி பகவானின் ஆட்சி பலம்)

* ஜீவனுக்கு... அதற்கான வல்லமையும்... ஆற்றலும்... இயற்கையாகவே அமைந்திருக்கும். (செவ்வாய் பகவானின்' உச்ச நிலை)

* இந்தக் 'கர்ம வினைப் போராட்டத்தில்'... தனது கடமைகளைப் பூரணமாக்கப் போராடும் ஜீவனுக்கு... 'ஞானத் தேடுதல்' சற்றுத் தொலைவுதான். ஆனாலும், தனது கடமைகளின் பூரணத்துவத்திற்காக போராடும் ஜீவன்... இறுதியில் தனது ஞான நிலையில் சங்கமிப்பதை தவிர்க்கமுடியாது. இது, ஜீவனுக்கான கடமை உணர்வுக்குக் கிடைக்கும் பரிசாக அமையும். (குரு பகவானின் நீச நிலை).

... இராசிச் சக்கரத்தில்... 'குரு பகவானின்' அமைவு... இந்த ஞானத் தேடலின் சூட்சுமங்களைச் சுட்டிக் காட்டுகிறது.

தொடர்ந்து, ஜோதிட சூட்சுமங்களை ஆய்வோம்... இறைவனின் அருளோடு...

ஸாய்ராம்.

No comments:

Post a Comment

ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...