'ஞான வெளிப்பாட்டை' ஒரு ஜீவன் எவ்வாறு பெறுகிறது... ? என்பதை, ஜோதிடச் சித்திரத்தில் அவரமைந்த ஸ்தானங்களைக் கொண்டு அறிந்து கொள்ளலாம்.
'குரு பகவான்'... இராசியில் ;
# 'தனுர் இராசியை' தனது 'ஆட்சி வீடாகக் கொள்கிறார். அந்த வீட்டில் அவரின் ஆளுமை மட்டுமே நிறைந்திருக்கிறது.
* இந்த ஆளுமை, ஜீவனை விருப்பு - வெறுப்புகளுக்கு உள்ளாகாமல்... தனது கடமைகளை பூரணப்படுத்துவதற்கு உதவுகிறது.
* தனது 'கர்ம வினைகளை' அனுபவித்துக் கடக்கும் ஜீவனுக்கு... அந்த கர்ம வினைகளால் வெளிப்படும்... இன்ப-துன்பங்களுக்கு ஏற்ப... தன்னை சமப்படுத்திக் கொள்ளும் பக்குவத்தை அளிக்கிறது.
* இன்ப-துன்பங்களில் சமப்படும் ஜீவன்... அதனால் வெளிப்படும் விளைவுகளான 'பாப-புண்ணியங்களில்' இருந்து முற்றிலுமாக விடுதலை அடைகிறது.
* இந்த விடுதலைதான்... தொடர் பிறப்புகளின் சுழற்சியை நிறுத்துகிறது.
# 'மீன இராசியை' தனது 'ஆட்சி வீடாகக்' கொள்ளும் 'குரு பகவான்'... அந்த வீட்டில் 'உச்ச நிலை' பலத்தை அடையும் 'சுக்கிர பகவானுக்கு' உறுதுணையாக இருக்கிறார். மேலும், பலமிழந்து... 'நீச நிலையில்' சஞ்சரிக்கும்'புத பகவானையும்' அரவணைத்துச் செல்கிறார்.
* இந்த ஸ்தானத்தில்... 'குரு பகவானது' பங்கு மிகவும் கடினமாகத்தான் இருக்கிறது. எங்கு 'சுக வாழ்வு' மிகுகிறதோ... அங்கு 'ஞானத்தின்' வெளிப்பாடு குறைவுறத்தான் செய்யும். இங்கும், ஜீவனுக்கு ஏற்படும் போராட்டம் அதுதான். சுக வாழ்வின் மிகுதியினால்... அதுதான் நிரந்தரம் என்ற நிலைக்கு ஜீவனின் வாழ்வு தள்ளப்படுகிறது. ( சுக்கிர பகவானின் உச்ச நிலை)
* ஞானத்தை அடைவது என்பது... அஞ்ஞானத்திலிருந்து விடுபடுவதில்தான் ஆரம்பிக்கிறது. எவ்வாறு கண்ணாடியின் தூய்மை, அதன் அழுக்கை நீக்கும் போது வெளிப்படுகிறதோ... அவ்வாறே, அஞ்ஞானத்தை நீக்கும் போதுதான்... ஞானத்தின் இருப்பும் வெளிப்படுகிறது. இதற்கான புத்தி சக்தியை ஜீவன் பெறுவதில் பெறும் தடையாக இருப்பது... ஜீவன் பெற்ற சுகவாழ்வு என்றால் அது மிகையானதல்ல.(புத பகவானின் நீச நிலை)
*எப்போது 'சுக வாழ்வுக்குத்' தடை ஏற்படுகிறதோ... எப்போது சுக வாழ்வு நிரந்தரமானது அல்ல என்ற 'புத்தி சக்தி' ஏற்படுகிறதோ... அப்போதிருந்தே... ஞானத்தின் தேடுதல் ஆரம்பிக்கிறது. ஞானம் பெறுவது அல்ல... அது அடையப்படுவது. ஜீவன், இயற்கையிலேயே ஞானத்துடன் இருக்கிறது. கர்ம வினைகளின் விளைவால்... அது அஞ்ஞானத்தில் மூழ்கி இருக்கிறது. எப்போது அஞ்ஞானம் விலகுகிறதோ... அப்போதே ஞானம் தான் இருந்த இடத்திலிருந்து தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது. ( குரு பகவானின் ஆட்சி நிலை)
தொடர்ந்து, இந்த ஞான வெளிப்பாட்டை ஆய்வோம்... இறைவனின் அருளோடு...
ஸாய்ராம்.

No comments:
Post a Comment