Thursday, January 23, 2020

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் - பகுதி 74. 'ஞானக்காரகரான குரு பகவான்', வெளிப்படுத்தும் கர்மவினை சூட்சுமங்கள்'. பகுதி 1.





'ஞானம்' என்பது 'ஜீவனுக்கு'... 'ஆத்ம சொரூபம்' அளிக்கும் அருள் கொடை என்றால், அது மிகையில்லை.

அனைத்தையும் அறிந்தது 'ஆத்மா'. அது 'ஆயிரம் கோடி சூரிய பிரகாசத்தைப் போன்றது. அந்த ஆத்மசொரூபத்திடம் இருந்து, அருளாற்றலைப் பெற்றுக் கொண்ட ஜீவன், இந்த புற உலகத்தில்... தான் சுமந்து கொண்டு வந்திருக்கிற 'கர்ம வினைகளை' மூலமாகக் கொண்டு ஜீவிதம் செய்கிறது.

இந்த ஜீவிதம்... கர்மவினைகளின் விளைவுகளான... 'இன்ப-துன்ப அனுபவங்களை' மாறி, மாறி அனுபவிப்பதிலேயே கழிந்து விடுகிறது. இதனால் தொடர்ந்து பிறவிகள் மேல் பிறவிகளாக எடுத்து... சலித்துப் போன ஜீவன்... 'இந்த வாழ்வின் நோக்கம்தான் என்ன... ?' என்ற கேள்வியை மனதில் எழுப்புகிறது. இந்தக் கேள்விதான் 'ஞான வெளிப்பாட்டிற்கான' முதல் வித்தாக அமைகிறது.

இந்தக் கேள்வியை ஒரு முறையேனும் எழுப்பாத ஜீவன்... இந்த உலகத்தில் இல்லை... எனலாம்.

இந்த 'ஞான வெளிப்பாட்டை...' ஒரு ஜீவன், 'எப்போது தனது வாழ்வில் பெறுகிறது...?' அல்லது, 'எப்போது அதை நோக்கிப் பயணம் செய்கிறது...? ' என்பதை, 'ஜோதிடச் சித்திரத்தில்'... 'நவக்கிரக நாயகர்களில்' மிகச் சுபராகக் கருதப்படும் 'குரு பகவானின்' நிலையைக் கொண்டே அறிந்துகொள்ளலாம்.

பொதுவாக, ஜோதிடச் சித்திரத்தில்... 'குரு பகவான்'...

* 'தனுர் இராசியை' தனது 'ஆட்சி வீடாகக்' கொள்கிறார்.

* 'மீன இராசியையும்' தனது 'ஆட்சி வீடாகக்' கொள்கிறார்'.

* 'கடக இராசியில்' தனது 'உச்ச பலத்தை' அடைகிறார்.

* 'மகர இராசியில்' தனது பலத்தை இழந்து 'நீச நிலையில்' சஞ்சரிக்கிறார்.

இந்த அமைவுகள்... நமக்கு எதைச் சுட்டிக் காட்டுகிறது... என்பதை, இறைவனின் அருளால் தொடர்ந்து ஆய்வோம்...

ஸாய்ராம்.


No comments:

Post a Comment

ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...