Saturday, January 18, 2020

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் - பகுதி 73. 'மனோகாரகனான சந்திர பகவான்', வெளிப்படுத்தும் கர்மவினை சூட்சுமங்கள்'. பகுதி 2.




ஜோதிடச் சித்திரத்தில்... மனோகாரகனான, 'சந்திர பகவானின்' அமைவு... எவ்வாறு 'கர்ம வினைகளின் விளைவுகளை' வெளிப்படுத்துகிறது என்பதை தொடர்ந்து ஆய்வோம்.

- 'கடக இராசியைத்' தனது 'ஆட்சி வீடாகக்' கொள்கிறார்.

- 'ரிஷப இராசியில்' தனது 'உச்ச பலத்தைப்' பெறுகிறார்.

- .விருச்சிக இராசியில்' தனது பலத்தை இழந்து... 'நீச நிலையில்' சஞ்சரிக்கிறார்.

# 'கடக இராசியில்'... ஆட்சி பெறும், 'சந்திர பகவானின்' வீட்டில், 'ஆற்றல் காரகரான'... 'செவ்வா பகவான்' தனது பலத்தை இழந்து, 'நீச நிலையில்' சஞ்சரிக்கிறார். 'ஞானக்காரகரான'... 'குரு பகவான்' பலம் பெற்று, 'உச்ச நிலையில்' சஞ்சரிக்கிறார்.

இந்த அமைவினால்...

* மனதில் தோன்றும் எண்ணங்களை... ஒரு கட்டுக்குள் கொண்டுவரும் தன்மை, ஜீவனுக்கு இருக்கும். (சந்திர பகவானின் ஆட்சி நிலை)

* அவ்வாறு தோன்றும் எண்ணங்களை... சிதறவிடாமல் சேர்த்துவைத்து... அதனை இலக்கை நோக்கி செலுத்தும் வல்லமை ஜீவனுக்கு இருக்கும். (செவ்வாய் பகவானின் நீச நிலை)

* ஒருமை படுத்திய எண்ணம், சிதறவிடாத ஆற்றல் என்ற இந்த இரண்டு சக்திகளையும்... தனது ஞானத்தைக் கொண்டு செயல் படுத்தும் ஆற்றல் ஜீவனுக்கு அமையும். (குரு பகவானின் உச்ச நிலை)

# 'ரிஷப இராசியில்' தனது உச்ச பலத்தைப் பெறும் 'சந்திர பகவான்' அமைந்திருக்கும் வீட்டின் 'ஆட்சியாதிபதியாக'... 'சுக்கிர பகவான்' அமைகிறார்.

இந்த அமைவினால்...

* மனதில் தோன்றும் எண்ணங்கள் பெரும்பாலும், தனது சுக வாழ்வை நோக்கியதாகவும்... அதை 'சிறிதும் விட்டுக் கொடுக்காமல்' வாழும் மனநிலையும் ஜீவனுக்கு ஏற்படும். (சந்திர பகவானின் உச்ச நிலை)

* எண்ணங்களுக்கு ஏற்பவே சுக வாழ்வும் அமையும். தனது சுகத்திற்காக எதையும் விட்டுக் கொடுக்காத தன்மை ஜீவனுக்கு ஏற்படும். (சுக்கிர பகவானின் ஆட்சி நிலை)

# 'விருச்சிக இராசியில்' தனது பலத்தை இழந்து 'நீச நிலையில்' சஞ்சரிக்கிறார்... 'சந்திர பகவான்'. இந்த விட்டின் 'ஸ்தானாதிபதியாக' பலம் பெர்று 'ஆட்சி விட்டில்' அமைகிறார் 'ஆற்றல்காரகரான'... 'செவ்வாய் பகவான்'.

இந்த அமைவினால்...

* மனதில் தோன்றும் எண்ணங்களால்... ஜீவன் தனக்குத் தானே, ஒரு 'தாழ்வு நிலைக்குத்' தள்ளப்படுவார். (சந்திர பகவானின் நீச நிலை)

* இந்தத் தாழ்வு நிலையினால்... தத்தளித்து, தவிக்கும் நிலைக்குப் போகாமல், ஜீவன்... தனது ஆற்றலை ஒரு கட்டுக்குள் வைத்திருக்கும் தன்மையை அடையும். (செவ்வாய் பகவானின் ஆட்சி பலம்)

இவ்வாறாக... மனம என்ற, 'கர்ம வினைகளின் உற்பத்தி ஸ்தானத்தை'... 'சந்திர பகவான்' வெளிப்படுத்துமாறு... ஜோதிடச் சித்திரத்தில் அமைக்கப் பட்டிருக்கிறார்... என்பதிலிருந்தே... இந்தக் கலை எவ்வாறெல்லாம் 'கர்ம வினைகளின் முடிச்சுகளை' களைகிறது என்பது ஒரு புரிதலுக்குள் வரும்.

தொடர்ந்து சிந்திப்போம்... இறைவனின் அருளோடு...

ஸாய்ராம்.

No comments:

Post a Comment

ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...