கண்ணுக்குத் தெரியும் இந்த உடலுக்கு, எவ்வாறு 'சிரசு' என்ற தலைப்பகுதி பிரதானமாகிறதோ... அது போல கண்ணுக்குத் தெரியாத இந்த ஜீவனுக்கு, 'மனதே' பிரதானமாகிறது.
சிரசுப் பகுதியின் முக்கிய அங்கமான 'மூளைதான்' இந்த உடலை இயக்கும் மூலம் என்பதை நாம் அறிவோம். ஆனால், அந்த மூளையை இயக்குவதே... கண்ணுக்குத் தெரியாத... சூட்சுமமான இந்த ஜீவனின், மூலமான 'மனம்தான்'... என்று அறியும் போது... வியப்பின் உச்சத்துக்கே செல்கிறோம்.
இந்த மனம் எவ்வாறு இயங்குகிறது ? என்று ஆய்ந்தால், அது, ஒவ்வொரு ஜீவனின் 'பூர்வ புண்ணியம்' என்ற, 'கர்ம வினைகள்தான்' என்பது உணர்வுக்கு வரும். இந்த 'கர்ம வினைகள்தான்'... அதன் விளைவுகளான, 'இன்பம் - துன்பம்' என்ற அடுக்கடுக்கான... 'வினைகளின் விளைவுகளை', ஜீவனுக்கு அதன் மனதில்... 'எண்ணங்களாக' உற்பத்திசெய்கிறது.
இவ்வாறு, மனதில், 'கடலின் அலைகள் போல...' தொடர்ந்து எழும் 'எண்ண அலைகள்...' மூளை வழியாக... உடலின் உறுப்புகளுக்கு 'ஆணைகளாகவும்,,,' மனதுடன் தொடர்புடைய... 'நாளமில்ல சுரபிகளுக்கு'... 'உணர்ச்சிகளாகவும்' வெளிப்படுத்தப்படுகிறது.
இந்த ஆணைகளை, உடலின் உறுப்புகளும்... உடலுடன் சம்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிற நாளமில்லா சுரபிகளும்... ஏற்றுக் கொண்டு, அதை இந்த ஜீவனுக்கு, 'இன்பமாகவும் - துன்பமாகவும்' அனுபவமாக்குகிறது.
ஆகையால்தான், இந்த மனதை... கர்ம வினைகளை ஏற்றுக் கொண்டு, அவற்றை எண்ணங்களாக வெளிப்படுத்தும்... 'மனோகாரகன்' என்று அழைக்கிறது... ஜோதிடக் கலை.
இந்த மனோகாரகனான... 'சந்திர பகவானின்' நிலைகளை எவ்வாறு ஜோதிடக் கலை அணுகுகிறது என்பதையும்... அந்த 'சந்திர பகவான்' ஜோதிடச் சித்திரத்தில்... அமையும் அமைவுகளைப் பற்றியும்... தொடர்ந்து சிந்திப்போம்... இறைவனின் அருளோடு...
ஸாய்ராம்.

No comments:
Post a Comment