Friday, January 10, 2020

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் - பகுதி 71. 'ஆற்றல்காரகரான செவ்வாய் பகவான் வெளிப்படுத்தும் கர்மவினை சூட்சுமங்கள்'. பகுதி 2..





ஆற்றலை வெளிப்படுத்துபவராக... ஜோதிடக் கலையில், 'செவ்வாய் பகவான்' இடம் பெறுகிறார். இவர் ஜோதிடச் சித்திரத்தின் அடிப்படை அமைவான... இராசிச் சித்திரத்தில் அமையும் நிலைகளே... 'கர்ம வினைகளின் சூத்திரத்தை வெளிப்படுத்துகின்றன.

# 'மேஷ இராசியை' ஆட்சி வீடாகக் கொள்ளும் 'செவ்வாய் பகவான்'... அந்த வீட்டை, 'உச்ச பலம்' பெறும்... 'ஆத்மகாரகரான'... 'சூரிய பகவானுடனும்'... 'நீச நிலையில்' தத்தளிக்கும்... 'ஆயுள் காரகரான'... 'சனி பகவானுடனும்' பகிர்ந்து கொள்கிறார்.

இந்த அமைவு உணர்த்துவது...

* ஜீவாத்மா... தனது பூரண ஆற்றலுடன் ஒளி பெற்று நிகழும் நிலையில் இருப்பார். (செவ்வாய் பகவானின் ஆட்சி)

* அந்த ஆற்றல், ஆத்மகாரகரானின்... அளவிலா ஆற்றலுடன் கலந்து ஒருமித்து நிற்கும் வாய்ப்பு நிகழும். (சூரிய பகவானின் உச்ச கதி)

* இந்த இணைப்பு... 'ஜீவ - ஈஸ்வர ஐக்கியம்' என்ற உன்னத நிலைக்கு வழிவகுத்து... பிறவிகள் இல்லா நிலையை நோக்கி நகரும். ( சனி பகவானின் நீச நிலை)

# 'விருச்சிக இராசியை' ஆட்சி வீடாகக் கொள்ளும் செவ்வாய் பகவான்'... அந்த விட்டில்... 'நீச நிலையில்' தத்தளிக்கும், 'மனோகாரகனான'... 'சந்திர பகவானுடன்' பகிர்ந்து கொள்கிறார்.

இந்த அமைவு உணர்த்துவது...

* ஜீவாத்மாவின் ஆற்றல் பூரணமாக ஒளி பெற்றிருக்கும். (செவ்வாய் பகவானின் ஆட்சி நிலை)

* அந்த அளவிலா ஆற்றலுக்கும் முன்... மனதில் எழும் 'கர்ம வினைகளின் விளைவுகளான'... 'எண்ணங்களை'... 'மனம்'... தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ளப் போராடும். (சந்திர பகவானின் நீச நிலை)

# 'மகர இராசியில்'... 'உச்ச கதியை' அனுபவிக்கும் 'செவ்வாய் பகவான்'... அந்த வீட்டின் 'ஆட்சி அதிபதியாகிய'... 'ஆயுள் காரகரான'... 'சனி பகவானுடனும்', தனது பலத்தை இழந்து, 'நீச நிலையில்' இருக்கும்... 'ஞானக்காரகரான'... 'குரு பகவானுடனும்' பகிர்ந்து கொள்கிறார்.

இந்த அமைவு உணர்த்துவது...

* நீண்ட ஆயுளையும், அந்த ஆயுள் காலத்திற்கேற்ப... ஆற்றலையும் ஜீவாத்மா பெற்றிருக்கும். ( சனி பகவானின் ஆட்சி நிலையும், செவ்வாய் பகவானின் உச்ச கதியும்)

* இந்த நீண்ட ஆயுள் போரட்டத்தில்... கடமைகளுக்குள் சிக்கித் தவித்து, தனது ஆற்றலை இழந்து கொண்டெ வரும் ஜீவாத்மாவால்,,, ஞானம் பெற முடியாது போகும் நிலை உருவாகும். (குரு பகவானின் நிச நிலை)

#'கடக இராசியில்'... தனது பலத்தை இழந்து...'நீச நிலையில்' சஞ்சரிக்கும் 'செவ்வாய் பகவான்'... பலம் பெற்ற 'மனோகாரகரான'... 'சந்திர பகவான்' ஆட்சி செய்யும் வீட்டில் அமர்கிறார். அந்த விட்டில், 'ஞானக்காரகரான'... 'குரு பகவான்' பலம் பெற்று... 'உச்ச கதியில்' இயங்கும் வாய்ப்பையும் பெறுகிறார்.

இந்த அமைவு உணர்த்துவது...

*மனம் என்ற ஸ்தானத்தில்தான்... ஜீவாத்மாவின் 'கர்ம வினைகள்'... எண்ணங்களாக வெளிப்படுகிறது. இந்த இராசியில், 'மனோகாரகன்' பலம் பெற்று இருப்பதால்... எண்ணங்கள் ஒரே சீராக இருப்பதற்கு வாய்ப்புகள் உருவாகிறது. (சந்திர பகவானின் ஆட்சி நிலை)

* அந்த எண்ணங்களை சம நிலையில் வைத்திருப்பதும்... தேவையான எண்ணத்தை ஒரு நிலைப் படுத்துவதும்... ஜீவாத்மாவுக்குச் சாத்தியமாகிறது. இந்த ஞானத்தை... ஞானக்காரகரான் அருளும் நிலை உருவாகிறது. (குரு பகவானின் உச்ச கதி)

* எண்ணங்களின் சமநிலை மற்றும் ஒன்று பட்ட நிலையும்... அதை வெளிப்படுத்தும் ஞானமும்... ஒன்று படும் போது... ஜீவாத்மாவின் ஆற்றல் மட்டுப்படுத்தப்படுகிறது. (செவ்வாய் பகவானின் நீச நிலை)

இவ்வாறாக, 'செவ்வாய் பகவான்'... அவரது ஆற்றலை' கொண்டு... அவரமரும் இராசிகளின் நிலைகளுக்கேற்ப... ஜீவாத்மாவின் 'கர்ம வினைகளின் விளைவுகளை வெளிப்படுத்துகிறார்.

ஸாய்ராம்.

No comments:

Post a Comment

ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...