இந்த உலக வாழ்வு... அதில் பங்கு பெறும்... ஒவ்வொரு ஜீவனின்'கர்ம வினைகளை' அடிப்படையாகக் கொண்டுதான்... படைப்பாளரால் நிர்வாகிக்கப்படுகிறது.
இந்தக் 'கர்ம வினைகளைச்' சுமந்து கொண்டு, இந்த புவி வாழ்வைக் கடக்கும் ஜீவர்களின் வாழ்வை... மேலோட்டமாகப் பார்க்கும் போது, மிகவும் 'விசித்திரமான கலவைகள்' கொண்டதாக இருப்பது போலத் தோன்றினாலும், உள்ளார்ந்து பார்க்கும் போது... அதன் 'தர்மமும் - கர்மமும்' எப்போதும் இணைந்திருப்பது தெரியும்.
அதன் சூட்சுமத்தை அறிந்து கொள்ளும் கலைதான்... ஜோதிடக்கலை.
பரமாத்ம சொரூபம்... ஆத்ம சொரூபமாகி, இந்த ஜீவனை, வழி நடத்துவதற்கு... 'தனது எல்லையற்ற ஆற்றலை...' ஜீவனது 'கர்ம-வினைகளுக்கேற்ப'... 'ஜீவ-ஆத்மாவாக'... ஒரு கட்டுக்குள் வைத்து அளிக்கிறது.
அந்த 'ஆற்றலை' ஜோதிடச் சித்திரத்தில் வெளிப்படுத்துபவராக... 'செவ்வாய் பகவான்' அமைகிறார். இந்த 'செவ்வாய் பகவான்' ஜோதிடச் சித்திரத்தில்... எவ்வாறெல்லாம் அமைகிறார் என்று பார்க்கும் போதுதான்... அந்த அமைவுகள் வெளிப்படுத்தும் 'கர்ம வினை' சூத்திரங்களின் சூட்சுமங்கள் புரிகிறது.
'ஆற்றல் காரகரான'... 'செவ்வாய் பகவான்' ஜோதிடச் சித்திரத்தில்...
# மேஷ இராசியை' தனது ஆட்சி வீடாகக் கொள்கிறார்.
இந்த விட்டில், தனது பலத்தை தக்க வைத்துக் கொள்கிறார் 'செவ்வாய் பகவான்'. இந்த வீட்டில், 'ஆத்மகாரகரான'... 'சூரிய பகவான்' தனது 'உச்ச பலத்தை' அடைகிறார். 'ஆயுள் காரகரான'... 'சனி பகவான்' தனது 'நீச பலத்தைப் பெறுகிறார்.
# 'விருச்சிக இராசியையும்' தனது ஆட்சி வீடாகக் கொள்கிறார்.
'செவ்வாய் பகவான்', இந்த விட்டில், தனது பலத்தை தக்க வைத்துக் கொள்கிறார் . இந்த வீட்டில், 'மனோகாரகரான'... 'சந்திர பகவான்' தனது பலத்தை இழந்து... 'நீச நிலையை' அடைகிறார்.
# 'மகர இராசியில்' தனது 'உச்ச பலத்தை' அடைகிறார்.
'செவ்வாய் பகவான்', இந்த வீட்டில், தனது உச்ச பலத்தை அடைகிறார். இந்த வீடு, 'ஆயுள் காரகரான'... 'சனி பகவானின்' ஆட்சி வீடாகிறது. அதுமட்டுமல்ல, இந்த வீட்டில், 'ஞானக் காரகரான'... 'குரு பகவான்' தனது பலத்தை இழந்து... 'நீச நிலையில்' நிலை பெறுகிறார்..
# 'கடக இராசியில்' தனது 'நீச பலத்தை' அடைகிறார்.
'செவ்வாய் பகவான்', இந்த வீட்டில், தனது பலத்தை இழந்து, 'நீச நிலையில் சஞ்சரிக்கிறார். இந்த வீடு, 'மனோகாரகரான'... 'சந்திர பகவானின்' ஆட்சி வீடாகிறது. இந்த வீட்டில், 'ஞானக்காரகரான'... 'குரு பகவான்' பலம் பெற்று 'உச்ச கதியில்' சஞ்சரிக்கிறார்.
இந்த ஒவ்வொரு நிலையிலும், 'செவ்வாய் பகவான்' வெளிப்படுத்தும், கர்ம-வினைச் சூழல்களை... தொடர்ந்து ஆய்வோம்... இறைவனின் அருளோடு...
ஸாய்ராம்.

No comments:
Post a Comment