Thursday, January 9, 2020

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் - பகுதி 69. 'கல்வியும்... சுக போக வாழ்வும்...' பகுதி - 3.





சுக வாழ்வுக்கும் அடிப்படையான... பொருளாதார வளர்ச்சி,செல்வம், வீடு, வாகனம் என, எண்ணற்ற சுக வாழ்வுச் சூழல்களுக்கு... 'சுக்கிர பகவான்' காரணகர்த்தாவாகிறார்.

ஜோதிட கலையின், பிரதான அமைப்பான 'இராசிச் சக்கரத்தில்' அவரின் அமைவை சற்று ஆழ்ந்து நோக்கினால்... எண்ணற்ற சூட்சுமங்களை அதில் மறைந்த்து வைத்திருப்பது புலனாகும்.

'சுக்கிர பகவானுக்கு',  ரிஷபம் மற்றும் துலாம் இராசிகள் 'ஆட்சி வீடுகளாகின்றன.

முதல் வீடான...

# ரிஷப இராசியில்... 'சுக்கிர பகவான்' ஆட்சி பெற்று வலுக்கிறார். அந்த வீட்டில் 'மனோகாரகனான'... 'சந்திர பகவான்' தனது 'உச்ச பலத்தை பெறுகிறார்.

இந்த அமைவு வெளிப்படுத்தும் சூட்சுமம்...

* தனது வீட்டில் வலுத்து, ஆட்சி பெற்ற 'சுக்கிர பகவான்' அந்த ஆதிபத்தியத்திற்கு ஏற்ப நிறைவான செல்வ சுகங்களான வண்டி, வீடு, வாகனம், மகிழ்வான இல்லறம் என அனைத்து உலக சுகங்களையும் அளிக்கத் தவறுவதில்லை.

* 'சுக்கிர பகவான்' ஆட்சி பெறும் வீட்டில் உச்ச பலம் பெறும்... 'சந்திர பகவான்', இந்த சுக போகக்காரகருக்கு, அந்த போகத்தை மேலும், மேலும் பெருக்கிக் கொள்ளும் எண்ணங்களைத்தான் ஊக்குவிப்பார். 'போதும்' என்ற எண்ணம் எப்போதும் ஏற்படாதவாறு பார்த்துக் கொள்வார்.

இரண்டாம் வீடான...

# துலா இராசியில்... 'சுக்கிர பகவான்' ஆட்சி பெற்று வலுக்கிறார். அந்த வீட்டில் 'ஆயுள் காரகரான' ... 'சனி பகவான்' தனது 'உச்ச பலத்தைப்' பெறுகிறார். அது மட்டுமல்ல, 'ஆத்மகாரகரான'... 'சூரிய பகவான்' அந்த வீட்டில், பலமிழந்து... 'நீச நிலையில்' சஞ்சரிக்கிறார்.

இந்த அமைவு வெளிப்படுத்தும் சூட்சுமம்...

* 'சுக்கிர பகவானின்' ஆட்சி பலம்... ஆதிபத்தியத்திற்கு ஏற்ப நிறைந்த செல்வ சுகங்களை அளிக்கும்.

* 'சுக்கிர பகவானின்' வீட்டில், தனது 'உச்ச பலத்தை' பெறும் 'சனி பகவான்' இவருக்கு நிறைந்த ஆயுள் பலத்தை அளிப்பார். ஆதிபத்தியத்திற்கு ஏற்ப செல்வ வளம் பெற்ற ஜாதகர்... தனது செல்வ நிலையை நீண்ட காலத்திற்கு தக்க வைத்துக் கொள்ளும் பாக்கியத்தையும் அளிப்பார்.

* 'சுக்கிர பகவானின்' வீட்டில், தனது 'நீச நிலையைப்' பெற்றிருக்கும் ஆத்மகாரகரான 'சூரிய பகவான்'... இந்த சுக போகக்காரகரை, 'உலக வாழ்விலேயே உழல வைப்பார்'. இந்த உடல்தான் நிரந்தரம் என்ற மாயை உருவாக்கி... உள்ளிருக்கும் நிலையான... 'ஆத்ம பந்தத்தை' அறிந்து கொள்ள முடியாமல் வாழ்வைக் கடக்க வைப்பார்.

இந்தக் 'காரண - காரிய' முடிச்சுகளை... 'கர்ம வினைக் சுழல்களை' எவ்வாறேல்லாம்... இந்த இராசிக் கட்டத்தில் 'புதைத்து வைத்திருக்கிறார்கள்' என்பதை உணரும் போது... இந்த 'ஜோதிடக் கலையின் புனிதத்துவம்' இதைக் கையாள்பவர்களைப் பெருமைப்படுத்துகிறது.

ஸாய்ராம்.


No comments:

Post a Comment

ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...