'மறைவு ஸ்தானங்கள்' என்று அழைக்கப்படும் 3, 6, 8 மற்றும் 12 ஆம் பாவங்களில்... 3 ஆம் பாவம் பற்றிய ஆய்வைத் தொடர்ந்து... இந்தப் பகுதியில், '6 ஆம் பாவம்' வெளிப்படுத்தும்... 'கர்ம வினைகளின் பூர்வ புண்ணிய விளைவுகளை' ஆய்வோம்.
6 ஆம் பாவம் ( ருண-ரோக-சத்ரு ஸ்தானம்)
இந்த பாவத்தை பொதுவாக 'கடன், நோய் மற்றும் எதிர்ப்புகளை எதிர் கொள்ளும் ஸ்தானமாக' ஜோதிடம் வரையருக்கிறது. இரண்டு விதமாகத்தான்... ஒரு ஜீவன் தனது 'கர்ம வினைகளின் விளைவுகளை' அனுபவிக்கிறது, ஒன்று... தாமாக நிகழ்த்தும் செயல்களால், இரண்டாவது தமக்கு நேரும் செயல்களுக்கு ஏற்ப வெளிப்படுத்தும் எதிர்செயல்களால். இந்த இரண்டு விதமான செயல் வடிவங்களும்... எவ்வாறு ஜீவனால் எதிர்கொள்ளப் படுகிறது என்பதை... இந்த ஸ்தானம் தீர்மானிக்கின்றது.
உதாரணம் 1
'கும்ப லக்னத்தில்' பிறந்திருக்கும் ஜாதகருக்கு... 'சனி பகவான்' 3 ஆம் பாவமான, தைர்ய ஸ்தானத்தில்... 'கார்த்திகை 1 ஆம் பாதத்திலும்', 'சந்திர பகவான்' 4 ஆம் பாவமான சுக ஸ்தானத்தில்...'ரோகிணி நட்சத்திரத்தின் 4 ஆம் பாதத்திலும்' அமைவதாகக் கொள்வோம்.
# லக்னாதிபதியாகிய... 'சனி பகவான்'... 3 ஆம் பாவமான, தைர்ய ஸ்தானத்தில் தனது வலிமையை இழந்து... நீச நிலையில் சஞ்சரிக்கிறார். இவரது 3 ஆம் பார்வை... பூர்வ புண்ணிய ஸ்தானத்திலும், 7 ஆம் பார்வை... பாக்கிய ஸ்தானத்திலும், 10 ஆம் பார்வை... சுக-சயனம் மற்றும் விரய ஸ்தானத்திலும் விரவுகிறது.
# 6 ஆம் பாவமான... ருண-ரோக-சத்ரு ஸ்தானங்களுக்கு அதிபதியாகிற... 'சந்திர பகவான்'... சுக ஸ்தானத்தில் அமர்ந்து வலிமை பெற்று, தனது நட்சத்திரத்தின் வலிமையையும்... உச்ச நிலை பலத்தையும் பெற்று, தனது 7 ஆம் பார்வையாக ஜீவனம் மற்றும் கர்ம ஸ்தானத்தை பார்வை செய்கிறார்.
இந்த அமைவுகளைப் பெற்ற ஜாதகர்...
* அடிமை போன்ற வாழ்வு அமையப் பெற்றிருப்பார்.('சனி பகவான்' நீச நிலை)
* பூர்வ புண்ணியங்கள் என்ற அவரது பூர்வம் முழுவதும்... இவரின் பிறப்பின் போதே கடன்களால் சூழப்பட்டு... அவற்றை திருப்பி செலுத்த முடியாத நிலையில்... அவற்றை இழக்கும் சுழலில்தான் பிறவி அமைந்திருக்கும்.('சனி பகவானின்' 3 மற்றும் 10 ஆம் பார்வைகள் முறையே... பூர்வம் மற்றும் விரயத்திற்கு படுவதாலும், 'சந்திர பகவானின்' 4 ஆம் பாவத்தின் அமைவும்...)
* தனது அன்றாட வாழ்வை மேற்கொள்வதில்... 'ஒவ்வொரு நொடியையும் ஒரு யுகத்தைக் கடப்பதைப் போல கடத்த வேண்டிய...' சூழல் அமையும்.
* தனது ஒவ்வொரு கடமையையும் கடந்து போக... முதலில் கடன் பெற வேண்டிய சூழலும், பின்னர் அந்த கடனை அடைக்கமுடியாது திணறும் சுழ்நிலையும் ஏற்படும்.('சந்திர பகவானின் 7 ஆம் பார்வை... ஜீவனம் மற்றும் கர்ம ஸ்தானத்தில் படர்வதால்...)
* தனது வாழ்வில் இவர் தேடும் நட்பும், துணையும் இவரை அடிமைப்படுத்தவே நினைக்குமே அன்றி... இவருக்கு ஆறுதல் தரும் சூழ் நிலையில் அமைவதில்லை. ('சனி பகவானின்' 7 ஆம் பார்வையை பாக்கிய ஸ்தானம் பெறுவதால்...)
* லக்னாதிபதியின் பலம் குறைந்து, 6 ஆம் பாவாதிபதியின் பலம் கூடி இருப்பதால்... இவரது வாழ்வில் எப்போதும் எதிரிகளின் கை ஓங்கியிருப்பதும், அதனால் இவர் அடிபணிந்து போவதும்,,, அவமானப் படுவதும்... ஒரு தொடர்கதையாகவே அமையும்.
உதாரணம் 2
'கும்ப லக்னத்தில்' பிறந்திருக்கும் ஜாதகருக்கு 'சனி பகவான்' பாக்கிய ஸ்தானத்தில்...'துலா இராசியில்'... சுவாதி நட்சத்திரத்தின் 3 ஆம் பாதத்தில் அமைவதாகவும், 'சந்திர பகவான்' 6 ஆம் பாவமான 'கடக இராசியில்; பூசம் நட்சத்திரத்தின் 4 ஆம் பாதத்திலும் அமைவதாகக் கொள்வோம்.
# லக்னாதிபதியாகிய 'சனி பகவான்' பாக்கிய ஸ்தானத்தில் பலம் பெற்று அமைந்து... உச்ச நிலையில் சஞ்சரிக்கிறார். அவரது 3 ஆம் பார்வை... 11 ஆம் பாவமான லாப ஸ்தானத்திற்கும், அவரது 7 ஆம் பார்வை... தைர்ய ஸ்தானத்திற்கும், அவரது 10 ஆம் பார்வை... 6 ஆம் பாவத்திற்கும், அதிலமைந்திருக்கிற பாவாதிபதி மற்றும் ஸ்தானாதிபதியாகிய 'சந்திர பகவானுக்கும்' படுகிறது.
# 6 ஆம் பாவாதிபதியாகிய... சத்ரு ஸ்தானாதிபதி 'சந்திர பகவான்' 6 ஆம் இடத்தில் 'ஆட்சி பலம்' பெற்று அமர்ந்து, அவரது 7 ஆம் பார்வை... விரய ஸ்தானத்திற்கு படுவதாக அமைகிறது.
இந்த அமைவுகளைப் பெற்ற ஜாதகர்...
* ஒரு குழுவுக்கோ அல்லது ஒரு ஸ்தானபத்திற்கோ தலைமை ஏற்பவராகத் திகழ்வார்.('சனி பகவானின்' பாக்கிய ஸ்தான உச்ச பலம்...)
* இவரின் நிர்வாகம்... ஒழுங்கும், கட்டுப்பாடும், நேர்மையும்... ஒளி வீசுவதாக அமையும். இதனால் நிர்வாகத்திற்கு பெரும் பெயரும் லாபமும் வந்து சேரும்.('சனி பகவானின்' பார்வையை லாபாதிபதி பெருவதால்...)
* நிர்வாகத்தில் எப்போதும் சச்சரவுகளும்... எதிர்ப்புகளும் இருந்தாலும் அதை இவர் மிகச் சாதுர்யமாகவும், தைர்யத்துடனும் எதிர்கொள்வார்.('சனி பகவானின்' பார்வையை தைர்ய ஸ்தானமும்... 6 ஆம் பாவமும் பெருவதால்...)
* இவரை எதிர்ப்பவர்கள் எல்லோரும் தோல்வியையே தழுவுவர்.( 'உச்சம் பெற்ற'... 'சனி பகவானின்' பார்வையைப் பெரும் 'ஆட்சி பெற்ற'... 'சந்திர பகவான்'...)
* வழக்குகள் மூலமாகவும்... மறைவான சதிகள்... மூலமாகவும் இவருக்கு வரும் நேரடி மற்றும் மறைமுக எதிர்ப்புகள் அனைத்தும்... இவரின் 'எதிர்கொள்வதின் தன்மையைக்' கொண்டு... தோல்விகளைத் தழுவும்.
* ஆனால்... எப்பொது எதிர்ப்புகளின் வழியேதான்... இவரது வாழ்வு போராட்டத்துடன் கடந்து போகும்.
இதுவரை '6 ஆம் பாவம்' வெளிப்படுத்தும் 'இருவிதமான கர்ம வினைகளின் விளைவுகளை' ஆய்ந்தோம்.
தொடர்ந்து... ' 8 ஆம் பாவம்' வெளிப்படுத்தும்... கர்ம வினைகளின் பூர்வ புண்ணிய விளைவுகளை ஆய்வோம்... இறை அருளோடு...
ஸாய்ராம்.

No comments:
Post a Comment