Wednesday, December 18, 2019

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் - பகுதி 60. "மறைவு ஸ்தானங்கள்- '3 ஆம் பாவம்' - வழியேயான ஜீவனின் வாழ்வு"... பகுதி-16.




12 இராசிகளைக் கொண்ட ஜோதிட சித்திரத்தில்... 'ஜீவன்' பிறப்பெடுத்த நேரம் லக்னமாக அமைகிறது. இந்த லக்னத்தை மூலமாகக் கொண்டுதான் ஏனைய ஸ்தானங்கள் அமைகின்றன.

அந்த ஸ்தானங்களி... இதுவரை, திரிகோணம், கேந்திரம், பணபர ஸ்தானங்கள் வழியே பயணம் செய்தோம்.

இந்தப் பகுதியில், 'மறைவு ஸ்தானங்கள்' என்றழைக்கப்படும்... ஸ்தானங்கள் எவ்வாறு... ஜீவனுக்கு அதன் 'கர்ம வினைகளின் விளவுகளை' அளிக்கிறது என்பதை உதாரணங்களோடு ஆய்வோம்...

மறைவு ஸ்தானங்கள் ( 3, 6, 8 மற்றும் 12 ஆம் பாவங்கள்)

இதை ஏன் 'மறைவு ஸ்தானங்கள்' என்று குறிப்பிட்டார்கள் எனில்... லக்னத்திலிருந்து இந்த ஸ்தானங்களில் அமையும் கிரகங்கள்... அவைகளின் ஆதிபத்தியத்திற்கு ஏற்ப... தனது 'இன்ப அனுபவங்களைக் குறைத்து'... 'தனது துன்ப அனுபவங்களைக் கூட்டியும்' கொடுப்பதால்தான்.

இவை பொதுவாக... ஜீவனின் வினைகளின் விளைவுகள வெளிப்படுத்தும் நேரடி ஸ்தானங்களாக அமைகின்றன.

3 ஆம் பாவம் ( தைர்ய ஸ்தானம்)

இதைப் பொதுவாக 'தைர்ய ஸ்தானம்' என்று அழைத்தாலும்... இந்த பாவம்; 'இளைய சகோதர ஸ்தானமாகவும்... தொடர்புக்கான ஸ்தானமாகவும்... கடிதப் போக்குவரத்துக்கான ஸ்தானமாகவும்... எவ்வகையான பாக்கியத்தை ஜீவன் அனுபவிக்கப் போகிறது என்பதை தீர்மானிக்கும் ஸ்தானமாகவும்'... அமைகிறது.

உதாரணம் 1

'மிதுன லக்னத்தில்' பிறந்திருக்கும் ஜாதகருக்கு... 3 ஆம் பாவத்தில், 'சூரிய பகவான்'... 'உத்திர நட்சத்திரத்தின் 1 ஆம் பாதத்தில்' அமைவதாகக் கொள்வோம்... இந்த ஜாதகருக்கு... 'சூரிய பகவானின்' அமைவு எத்தகைய கர்ம வினைகளின் விளைவுகளை வெளிப்படுத்துகிறது... என்பதை ஆய்வோம்...

# 'சிம்ம இராசியில்' தனது 'ஆட்சி வீட்டில்'... தனது நட்சத்திரமான 'உத்திரத்திலேயே' அமர்ந்து மிகவும் வலிமை பெற்று... தனது 7 ஆம் பார்வையாக... பாக்கிய ஸ்தத்தைப் பார்வை செய்கிறார்.

இந்த அமைவைப்[ பெற்ற ஜாதகருக்கு...

* 'ஆத்மகாரகன்' என்ற 'சூரிய பகவான்' 3 ஆம் பாவாதிபதியாகவும், ஸ்தானாதிபதியாகவும் அமைந்ததனால்... மிகவும் 'மனோ-தைர்யம்' பெற்றவராக இருப்பார்.
* மிகவும் நேர்மையாகவும்... வெளிப்படையாகவும் காரியங்களை அணுகுபவராக இருப்பார்.
* தான் மேற்கொள்ளும் காரியங்கள் அணைத்தும்... தர்மத்துடன் கூடியதாக இருக்கிறதா... என்பதை ஆராய்ந்தபின்தான் செயலில் இறங்குவார்.
* தான் மேற்கொள்ளும் காரியங்களுக்கு... அவை நன்மையாக முடிந்தாலும் தீமையாக முடிந்தாலும்...  எந்த வித தயக்கமுமில்லாமல்... தாம்தான் பொறுப்பு எனத் தாமே... பொறுப்பேற்றுக் கொள்வார்.
* அரசு மற்றும் அரசு சம்பந்தப்பட்ட துறைகளுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்புகள் கூடிவரும்.
* தனது கடமைகளை கண்ணும் கருத்துமாக இருந்து பூர்த்தி செய்வார்.

உதாரணம் 2 

இதுவே, 'மிதுன லக்ன ஜாதகருக்கு'... 3 ஆம் பாவத்திற்குறிய 'சூரிய பகவான்'... 6 ஆம் பாவமான...'விருச்சிக இராசியில்'... 'அனுஷ நட்சத்திரத்தின் 3 ஆம் பாதத்தில்' அமைவதாகக் கொள்வோம்... இந்த அமைவு உணர்த்தும் 'பூர்வ புண்ணிய கர்ம-வினைகள்' எவ்வாறு அமைகிறது என்பதை... ஆய்வோம்...

# விருச்சிக இராசியில்... 6 ஆம் பாவத்தில்... அமர்ந்து, தனது 7 ஆம் பார்வையாக... 12 ஆம் இடமான, சுக-சயன மற்றும் விரய ஸ்தானத்தைப் பார்வை செய்கிறார்.

இந்த அமைவு பெற்ற ஜாதகருக்கு...

* இவரின் 'மனோ தைர்யம்' இவரை அடிக்கடி 'நியாயாதிபதிக்கு' முன் கொண்டு நிறுத்தும்.
* மிகவும் தைர்யமாக இவர் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் அனைத்தும்... இவரின் முன்னேற்றத்தைத் தடுத்து... இவரை விரயத்துக்குள் கொண்டு செலுத்தும்.
* அடிக்கடி... அரசு மற்றும் அரசு சார்ந்த துறைகளின் எதிர்ப்புகளுக்கு ஆளாகக் கூடும்.
* பெரும்பாலும் இந்த அமைவு... இவருக்கு இவர் விரும்பி மணந்து கொள்ளும் வாழ்விற்குள் கொண்டு செலுத்தும்.
* பெரும்பாலும் கடனுடன் கூடிய வாழ்வுக்குள் சிக்கித் தவிக்க வேண்டியிருக்கும்.

இதுவரை... 3 ஆம் பாவம் வெளிப்படுத்தும் கர்மவினைகளின் விளைவுகளை ஆய்ந்தோம்.

தொடர்ந்து... 6 ஆம் பாவத்தை... ஆய்வோம்... இறைவனின் அருளோடு,,,

ஸாய்ராம்.

No comments:

Post a Comment

ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...