Saturday, December 14, 2019

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் - பகுதி 59. "பணபர ஸ்தானங்கள்- வழியேயான ஜீவனின் வாழ்வு. பகுதி-15.





'பணபர ஸ்தானங்கள்' (2 ஆம் பாவம் மற்றும் 11 ஆம் பாவம்)

பொதுவாக இந்த இரண்டு பாவங்களையும்... பணபர ஸ்தானங்கள் என்று அழைப்பதுண்டு. உலக வாழ்வில் ஈடுபடும் ஜீவர்களின்... பூர்வ புண்ணிய கர்ம வினைகளின் விளைவுகளுக்கு ஏற்ப... இந்த ஸ்தானங்கள் வெளிப்படுத்தும் விளைவுகளை... உதாரணங்களுடன் அணுகுவோம்.

உதாரணம் 1

'கும்ப லகனத்தில்' பிறந்திருக்கும் ஒரு ஜாதகருக்கு 'குரு பகவான்'... தன (2 ஆம் பாவம்) மற்றும் லாபாதிபதியாகிறார்(11 ஆம் பாவம்).

- 'குரு பகவான்'... 11 ஆமிடமான 'தனுர் இராசியில்' - பூராடம் நட்சத்திரத்தின் 4 ஆம் பாதத்தில் அமைவதாகக் கொள்வோம். இந்த அமைவினால்... இந்த ஜாதகர் அனுபவிக்கும் 'புர்வ புண்ணிய கர்ம வினைகளின் விளைவுகளை' ஆய்வோம்.

# இந்த ஜாதகருக்கு தன-லாபாதிபதியாகிய 'குரு பகவான்' 11 ஆமிடம் என்ற 'லாப ஸ்தானத்தில்'... பலம் பெற்று... தனது சோந்த வீட்டிலேயே அமர்ந்திர்க்கிறார்.

# அவர், 'சுக்கிர பகவானின்' நட்சத்திர சாரத்தில்... அமர்ந்திருக்கிறார்.

# தனது 5 அம் பார்வையாக... தைர்ய ஸ்தானமான 3 அம் பாவத்தையும், தனது 7 ஆம் பார்வையாக... பூர்வ புண்ணிய ஸ்தானமான 5 ஆம் பாவத்தையும், தனது 9 ஆம் பார்வையாக... களத்திர ஸ்தானமான 7 ஆம் பாவத்தையும் பார்வை செய்கிறார்.

இந்த அமைவில் உள்ள் ஜாதகருக்கு...

* தனக்காரகரான 'குரு பகவானே' தன-லாபாதியாக அமைவதால்... இவரின் வாழ்வில்... தனது தேவைக்கு எப்போதும் குறைவில்லாத தனப் பிராப்தி அமைந்திருக்கும்.
* இவரது சுகமும்... பாக்கியமும் குறைவில்லாத நிலையில் பாதுகாக்கப்படும். ( 'சுக்கிர பகவானின்' நட்சத்திர சாரத்தில் அமைவதால்...)
*இவருக்கு வாழ்வின் தொடர்புகள் குடும்பத்தையும் கடந்து... உலகளாவியதாக அமையும்.(குரு பகவானின் பார்வை... 3 ஆம் பாவத்திற்கு அமைவதால்...)
* இவரின் பூர்வம் தர்மத்தின் வழியாக வந்ததாகவும்... இவரும் அதன் வழியே சென்று... தனது கடமைகளை பூர்த்தி செய்து... தனது பூர்வத்தை அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்பவராக இருப்பார்.( குரு பகவானின் பார்வை... பூர்வ புண்ணிய ஸ்தானமான 5 ஆம் பாவத்திற்கு அமைவதால்...)
*மிக உன்னதமான மனிதர்களுடன் இவருக்கு வாழ்வில் தொடர்புகள் ஏற்படும். இவரும் அந்த உன்னத நிலையை அடைவார். (குரு பகவானின் பார்வை களத்திரம் என்ற 7 அம் பாவத்திற்கு அமைவதால்...)

உதாரணம் 2

இதே 'கும்ப லக்னத்தில்' பிறந்திருக்கும் ஜாதகருக்கு...

'குரு பகவான்' 2 ஆமிடமான 'தன ஸ்தானத்தில்'... 'மீன இராசியில்'... பூரட்டாதி நட்சத்திரத்தின் 4 ஆம் பாதத்தில்' அமைவதாகக் கொள்வோம்.

# இங்கும் 'தன-லாபாதிபதி' பலம் பெறுகிறார். தன ஸ்தானத்திலேயே பலம் பெற்றிருக்கிறார். தனது 5 ஆம் பார்வையால், 6 ஆம் பாவத்தையும், தனது 7 ஆம் பார்வையால்... 8 ஆம் பாவத்தையும், தனது 9 அம் பார்வையால்... ஜீவன் ஸ்தானத்தையும் பார்வை செய்கிறார்.

இந்த அமைவைப் பெற்ற ஜாதகருக்கு... இந்த அமைவு...

ஜோதிட விதிகளுள் ஒன்றான... 'தனக்காரகர் தன ஸ்தானத்தில் அமையும் போது காரகநாஸ்த்தியடைவார். (தனம்-குடும்பம்-வாக்கு ஸ்தானங்களின் பூரணத்துவத்தை அனுபவிக்க முடியாத சூழலை... இவரது கர்ம வினைகள் ஏற்படுத்திக் கொடுக்கும்).

இந்த விதி... இவரின் வாழ்வில் நிகழ்த்தும் லீலைகளான... வினைகளின் விளைவுகள்...

* நல்ல பூர்வத்தில் இந்த ஜாதகர் பிறந்திருப்பார். ஆனால் அந்த பூர்வத்தில் வசிக்கும் பாக்கியத்தை இழப்பார்.
* இவரின் பிறப்பின் போது இருக்கும் செல்வச்செழிப்பு... இவரது வளர்ந்து வரும் சூழலில் குறைந்து கொண்டே போகும்.
* இவரின் அத்தியாவசிய தேவைகளுக்கும் கடன் பெரும் சூழல் ஏற்படும். (குரு பகவானின் 5 ஆம் பார்வையை... 6 ஆம் பாவம் பெறுவதால்...)
*மிகவும் கடினமான சூழல்களால்... இவரின் வாழ்வின் கடமைகளைக் கடந்து போக... மிகவும் போராட வேண்டியிருக்கும். (குரு பகவானின்' பார்வையை 8 ஆமிடம் பெறுவதால்...)
* ஆனால்... 'குரு பகவானின்' அருள் கருணையினால்... இவர் இவரது கடமைகள் அனைத்தையும் பூரணமாக்குவார்.
* நிறைந்த அனுபவங்களை வாழ்வில் பெற்றிடுவார்.
* இவர் உதிர்க்கும் ஒவ்வொரு சொல்லும்... அர்த்தம் மிகுந்ததாகவும்... அனுபவங்கள் கூடியதாகவும் இருக்கும்.
* மிகவும் தர்மத்துடன் தனது வாழ்வைக் கடந்து செல்வார்.
* மிகவும் தைர்யத்துடன் எதையும் அணுகும் இவர்... தனது கடமைகளில் இருந்து தவறாது வாழ்வதற்கு... தனது நிலையில் எந்த அளவிற்கும் தாழ்ந்து போவார்.

தொடர்ந்து... 'மறைவு ஸ்தானங்கள்' என்ற 'தைர்யம்-ருண,ரோக,சத்ரு-ஆயுள்-சுக-சயனம்,விரயம்' பற்றிய ஆய்வுகளை... தொடர்ந்து பார்ப்போம்... இறைவனின் அருளொடு...

ஸாய்ராம்.

No comments:

Post a Comment

ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...