Wednesday, December 11, 2019

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் - பகுதி 58. "பணபர ஸ்தானங்கள்- வழியேயான ஜீவனின் வாழ்வு. பகுதி-14.




12 இராசிகளைக் கொண்ட இந்த ஜோதிட சித்திரத்தில்... ஜீவன் பிறப்பெடுத்த நேரம் 'லக்னமாக அமைகிறது. இந்த லக்னத்தை மூலமாகக் கொண்டுதான்... ஏனைய ஸ்தானங்கள் அமைகின்றன.

அந்த ஸ்தானங்களில்... இதுவரையில், திரி கோணம் மற்றும் கேந்திர ஸ்தானங்களைப் பற்றிய எளிய விளக்கங்களை... உதாரணங்களோடு அணுகினோம்.

இந்தப் பகுதியில் 'பண பர ஸ்தானங்கள்' என்ற ஸ்தானங்களின் வழியே ஆய்வுப் பயணத்தைத் தொடர்வோம்.

பணபர ஸ்தானங்கள் ( 2 ஆம் பாவம் மற்றும் 11 ஆம் பாவம்)

பொதுவாக இந்த இரண்டு பாவங்களையும்... பணபர ஸ்தானங்கள் என்று அழைப்பதுண்டு. உலக வாழ்வில் ஈடுபடும் ஜீவர்களுக்கு இந்த ஸ்தானங்களின் வழியே... இன்பத்தை லாபமாக அனுபவிப்பதற்கு வாய்ப்புகள் இருப்பதால்... இந்த ஸ்தானங்கள் அனைவராலும் ஈர்க்கப்படுகிறது.

2 ஆம் பாவம :

இந்த பாவத்தை 'குடும்ப ஸ்தானமாகவும்... வாக்கு ஸ்தானமாகவும்' பாவித்தாலும்... 'தன ஸ்தானம்' என்பதுதான் இதற்கு 'பணபர ஸ்தானம்' என்ற பெயரை ஈட்டிக் கொடுத்திருக்கிறது.

ஆனால். இந்த பாவம் 'மாரக பாவம்' என்றும் அழைக்கப்படுகிறது. மாரகம் என்பது... மரணம் அல்ல... 'மரணத்திற்கு ஒப்பான துன்பம்' என்பதுதான். 12 இராசிகளில்... அனைத்து வீடுகளுக்கும்... இந்த 2 ஆம் இடம் மாரக ஸ்தானமாக அமைகிறது.

காரணம்... ஒரு ஜாதகர் பிறக்கும் குடும்பத்தின் சூழல் நன்றாக அமையும் போது, நிறைந்த இன்பத்தை அனுபவிப்பராக இருப்பார். அதுவே சூழல் சற்று கடுமையாக இருக்கும் போது, மிகவும் துயரத்தை அனுபவிப்பராக இருப்பார்.

அதுபோல, நிறைந்த வசதிகளுடன் பிறந்திருக்கும் ஜாதகருக்கு... இன்பத்தை அள்ளிக் கொடுக்கும் இந்த பாவம், வசதியற்ற நிலையில் பிறந்திருக்கும் ஜாதகருக்கு... கடும் துன்பத்தை அளித்து விடுவார்.

அதுமட்டுமல்ல... குடும்பம் என்பது பந்தங்களும்... அவற்றினிடையேயான பற்றுக்களுக்குமான அமைவு என்பதால், பெரும்பாலும் சிறிதளவு இன்பத்தையும், பெரும்பாலும் துன்பத்தையுமே அளிப்பதால்... இதை 'மாரக ஸ்தானம்' என்று அழைக்கிறோம்.

11 ஆம் பாவம் :

இந்த பாவத்தை 'மூத்த சகோதர ஸ்தானம்' மற்றும் 'பூர்வத்தில் தொடர்பு உடையவர்களுடனான' ஸ்தானமாகவும் இருந்தாலும்... லாபம் என்ற 'லாப ஸ்தானம்தான்' இதற்கு புகழை ஈட்டிக் கொடுத்திருக்கிறது.

ஆனால்... அனைத்து லக்னதாரர்களுக்கும் இந்த ஸ்தானம்... பூர்வம் என்ற 5 ஆம் ஸ்தானத்திற்கு... நேரெதிர் ஸ்தானமாக (7 ஆம் ஸ்தானமாக) அமைவதால்... அந்த பூர்வம் என்ற 'கர்ம வினைகளுக்கு' ஏற்பவே இந்த உறவுகளும்-தொடர்புகளும் -இகலோக லாபங்களும்' அமைகிறது.

அதிலும்... குறிப்பாக 'சர லக்னங்களுக்கு'... இந்த லாப ஸ்தானமான 11 ஆம் பாவம்... மிகவும் 'பாதகம்' என்ற துயரினைத் தருவதாக... 'பாதக ஸ்தானமாகவும்' அமைந்து விடுகிறது.

மேற்கண்ட அமைவுகளின் மூலம்... இந்த ஸ்தானங்கள் அளிக்கும்... பூர்வ புண்ணிய கர்ம வினைகளின் விளைவுகளை... உதாரணங்களுடன்... இனிவரும் பகுதிகளில் ஆய்வோம்... இறைவனின் அருளோடு...

ஸாய்ராம்.

No comments:

Post a Comment

ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...