Wednesday, December 4, 2019

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் - பகுதி 53. 'திரிகோணமும் -_உலக வாழ்வும்'. ஸ்தானங்கள் வழியேயான ஜீவனின் வாழ்வு. பகுதி-9.





திரிகோண அமைவுகள் உணர்த்தும் சில சூட்சும பலன்கள் :

'உலக வாழ்விலே' திளைத்து நிற்கும் ஜீவர்களுக்கென அமையும்... சில சிறப்பான அமைவுகளை ஆய்வோம்...

கிரகங்களின் சிறப்பு அமைவுகள் :

* ஆத்மகாரகரான 'சூரிய பகவானும்'... அறிவு, புத்தி மற்றும் வியாபாரயுக்தியையும்... மதியூகத்தையும் வழங்கும்... 'புத பகவானும்'... இணைந்து... வலுப்பெற்றிருப்பர். இந்த இணைவு... தொழில் மற்றும் லாபாதிபதியுடனும்... தொடர்பையும் பெற்றிருக்கும் வண்ணம் அமைந்திருக்கும்.

* கிரகிக்கிம் தன்மையை வழங்கும்... 'சந்திர பகவானும்'... ஆற்றலை வழங்கும் 'செவ்வாய் பகவானும்'... ஜாதகத்தில் வலுத்து அமைந்திருப்பார்கள். அவர்களுக்கிடையே 'ஒரு சூட்சும தொடர்பு' இருக்கும் வண்ணம் அமைவு இருக்கும்.

* ஞானக்காரகரான 'குரு பகவான்'... தனக்காரகராகவும் இருப்பதால்... அவர் வலிமை பெருவது மட்டுமல்ல... திரிகோணாதிபதிகளுடனும்... தன-லாபாதிபதிகளுடன்  தொடர்பைப் பெற்றிருப்பார்.

* உலக சுகங்களுக்கு ஆதாரமான... 'சுக்கிர பகவான்' வலுப்பெற்று அமர்ந்திருப்பார். ஆயுள் காரகராகவும்... உழைப்பு மற்றும் உழைப்பாளர்களின் காரகத்துவத்துக்கு அதிபதியாகி வலுத்த...'சனி பகவானுடனும்'... வியாபாரம் என்ற உலக விருத்தி நாயகனான... 'புத பகவானுடனும்' ஒரு சூட்சுமமான தொடர்பை ஏற்படுத்திக் கொண்டிருப்பார்.

* 'போகக்காரகன்' என்று வருணிக்கப்படும்... 'ராகு பகவான்'... நிழல் கிரகமாக இருப்பதால்... நிழலாகவும், கனவாகவும், கற்பனையாகவும் நினைக்கப்படும் தொழில்களில்...  வல்லமையுடன் இருக்கும் வண்ணமாக அமைந்திருப்பார்.

* ஞானம் மற்றும் மோக்ஷத்திற்குக் காரகரான... 'கேது பகவான்'... பலம் குன்றி இருப்பார். அவர் உலக வாழ்வுக்கு இடையூறு இல்லா வண்ணம் அமைந்திருப்பார்.

இராசிக் கட்டத்தில்... 'லக்ன பாவங்கள்'... சில சூட்சும அமைவுகள் மூலம்... உலக வாழ்வை நோக்கித் திரும்பும் ஜீவனுக்கான அமைவை சுட்டிக் காட்டும்...

* லக்ன பாவம் வலுத்து... பூர்வம், பாக்கியத்துடன் தொடர்பு பெற்றிருக்கும்.
* தன-லாப பாவங்கள் வலுத்திருக்கும்.
* தைர்ய பாவம் வலுத்திருக்கும்
* சுக பாவம் வலுத்திருக்கும்.
* பூர்வ பாவம் வலுத்து... லக்னம் மற்றும் பாக்கியத்துடன் தொடர்பு பெற்றிருக்கும்.
* சத்ரு பாவம் நசித்திருக்கும்.
* களத்திர பாவம் வலுத்து பூர்வத்துடன் ஒரு தொடர்பை பெற்றிருக்கும்.
* ஆயுள் பாவம் வலுத்து அதன் அட்டமாதித்தியம் குறைந்திருக்கும்.
* தர்மம்-பாக்கிய பாவம் வலுத்து... லக்னம் மற்றும் பூர்வத்துடன் தொடர்பை பெற்றிருக்கும்
* ஜீவன'கர்ம ஸ்தானம் வலுத்து... லக்னத்துடன் சூட்சுமமான தொடர்பை பெற்றிருக்கும்.
* சுக-சயன் ஸ்தானம் வலு குறைந்திருக்கும். ஓயாத உழைப்புக்கு வழிகாட்டுவதாக அமையும்.

இவ்வாறு... கிரகங்களும்... பாவங்களும் அமைந்து, ஜீவனை உலக வாழ்வின் சுகம் மட்டுமே இலக்கு என்பதற்கு ஏற்றவாறு ஜீவனை வழி நடத்தும்.

இதுவரை... திரிகோண அமைவை பற்றிய சில சூட்சுமமான விடயங்களுக்குள் இறைவனின் அருளோடு... பயணித்தோம்... தொடர்ந்து... கேந்திர அமைவை பற்றிய சூட்சுமங்களுக்குள் பயணிப்போம்...

ஸாய்ராம்.

No comments:

Post a Comment

ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...