Friday, December 6, 2019

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் - பகுதி 54. 'கேந்திர ஸ்தானங்கள்' ஸ்தானங்கள். வழியேயான ஜீவனின் வாழ்வு. பகுதி-10.





12 இராசி வீடுகளைக் கொண்ட இந்த ஜோதிட சித்திரத்தில்... ஜீவன் பிறப்பெடுத்த நேரம்... 'லக்னமாக' அமைகிறது. இந்த லக்னத்தை மூலமாகக் கொண்டு... 'ஏனைய ஸ்தானங்கள்' அமைகின்றன.

அந்த ஸ்தான அமைவுகளில்... 'திரிகோணம்' என்ற 'முதல் ஸ்தான அமைவை' இதுவரை ஆய்ந்தோம். இந்த ஸ்தானம் ஜீவனின் 'கர்ம வினைகளை' அடிப்படையாகக் கொண்டு... 'உலகவாழ்வையும்... உள் வாழ்வையும்'... எவ்வாறு நிர்ணயிக்கிறது என்பதையும் ஆய்ந்தோம்.

இந்தத் தொடரில்... ஒரு ஜீவன், தனது 'கர்ம வினைகளின்' வழியேயான வாழ்வை... எவ்வாறு 'உலகியல் ரீதியாகவும்... உள் வாழ்வின் ரீதியாகவும்...' தனது 'கடமைகளின் அடிப்படையில்...' கடந்து போகிறது என்பதை ஆய்வோம்.

கடமைகளின் அடிப்படையில்... எனும் போது... அதை 'கேந்திர ஸ்தானங்கள்' என்ற 'இரண்டாவது ஸ்தான அமைவு' வழியே அணுகலாம். இந்த கேந்திர ஸ்தானங்கள்... ஜீவனை உலக வாழ்வில்... ஜீவனை கடமைகளின் வழியே அழைத்துச் செல்வதில் முக்கிய பங்கை அளிக்கிறது.

கேந்திர ஸ்தானங்கள் :

லக்னம் (1), சுகம் (4), களத்திரம் (7) மற்றும் ஜீவனம் (10) என்ற இந்த நான்கு ஸ்தானங்களைத்தான்... 'கேந்திர ஸ்தானங்கள்' என்று அழைக்கிறோம். இந்த அமைவு...ஒரு ஜீவனின் வாழ்வு நிலையை உணர்த்தும் இரண்டாவது முக்கிய ஸ்தானங்களாக அமைகிறது.

லக்னம்

'பிராரப்த கர்மா' (கர்ம வினைகள்) என்ற... இந்த 'வாழ்விற்கான திட்டங்களுடன்' பிறப்பெடுக்கும் ஜீவன்... அதற்கேற்ப பிறவியை அடைகிறது. அந்தப் பிறவிக்குண்டான தகுதிகள் எவ்வாறு அமைகிறது... என்பதை, ஜீவனின் 'லக்ன பாவம்' உணர்த்துகிறது.

சுகம்

ஜீவன்... தனது, இளமைக் காலத்தை எவ்வாறு கடந்து போகிறது... என்பதை உணர்த்தும் 'சுக பவமாக' இந்த ஸ்தானம் அமைகிறது. அது கல்வி என்ற அறிவின் வழியே பயணித்து... அதன் வழியேயான வாழ்வை அடைகிறதா...? அல்லது உழைப்பை மூலமாகக் கொண்டு... அதன் வழியேயான வாழ்வை அடைகிறதா...? அந்த ஜீவனின் சுகானுபவங்கள் எவ்வாறு அமைகின்றது...? என்பதை உணர்த்தும் ஸ்தானமாக அமைகிறது.

களத்திரம்

உலகில் பிறப்பெடுக்கும் ஜீவனின்... வாழ்வின் பாதையை தீர்மானிக்கும் பாவமாக இந்த பாவம் அமைகிறது. தனது,, கர்ம வினைகள்... ஜீவனை, இக-லோக வாழ்வின் கடமைகளின் வழியே  'திருமண பந்தத்தில்' அழைத்துச் செல்கிறதா...? அல்லது கடமைகளிலிருந்து விடுபட்டு  'பிரம்மச்சர்யம்' என்ற பாதையில் அழைத்துச் செல்கிறதா...? என்பதை தீர்மானிக்கும் ஸ்தானமாக அமைகிறது. ஒரு ஜீவனை பந்தத்தில் இணைத்துவிடுவதும்... விடுவிப்பதும்... இந்த ஸ்தான அமைவையொட்டிதான் அமைகிறது.

ஜீவனம் 

ஜீவன், இந்த உலக வாழ்வில்... தனது 'கர்ம வினைகள்' வெளிப்படுத்தும் கடமைகளின் வழியே எவ்வாறு கடந்து போகிறது...? என்பதை வெளிப்படுத்தும் 'ஜீவன பாவமாக' அமைகிறது. ஒவ்வொரு ஜாதகச் சித்திரத்தின் ஆரம்பத்தில்லும் குறிப்படப்படும் ஒரு 'சுலோகம்'...

                                                                                                                                                                '... ஜனனி ஜன்ம சௌக்யானாம்...
     வர்த்தனீ குல சம்பதாம்...
     பதவீ பூர்வ புண்யானாம்...
     லிக்யதே ஜன்ம பத்ரிகா...'

'பதவி' என்ற ஒரு ஸ்தானம்... அந்தந்த ஜிவனின் கர்ம வினைகளின் விளைவுகளின் வழியேதான் அமைகிறது... என்பதை சுட்டிக் காட்டுகிறது. அந்தப் பதவி... அந்த ஜீவன் வகிக்கப்போகும் புத்திரன்... சகோதரன்... கணவன்... தந்தை... தாத்தா என்ற குடும்பப் பதவிகளாகவும் அமையலாம். அல்லது, உத்தியோகம்... தொழில் என்ற பதவிகளாகவும் அமையலாம். அல்லது சிஷ்யன்... குரு... சத்குரு என்ற பதவிகளாகவும் அமையலாம். இதைத்தான்... இந்த 'ஜீவன் கர்ம பாவம்' உணர்த்துகிறது.

இவற்றை உதாரணங்களோடு அணுகுவோம்... இனி வரும் பகுதிகளில்... இறவனின் அருளோடு...

ஸாய்ராம்.

No comments:

Post a Comment

ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...