Tuesday, December 3, 2019

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் - பகுதி 51. 'திரிகோணமும் -_உள்வாழ்வும்'. ஸ்தானங்கள் வழியேயான ஜீவனின் வாழ்வு. பகுதி-7.







'திரிகோண அமைவுகள்' உணர்த்தும் சில சூட்சுமங்கள்...

'உள் வாழ்வை' நோக்கித் திரும்பும் ஜாதகங்களில்... ' சிறப்பு அமைவுகள்' அமைந்திருக்கும்...

கிரகங்களின் சிறப்பு அமைவுகள் :

* ஆத்மக்காரகர் என்றழைகாப்படும் 'சூரிய பகவான்' பெரும்பாலும்... உச்ச கதி, ஸ்தான பலம், நட்பு வீட்டுகள் என பலத்துடன் அமைந்திருப்பார்.

* அறிவுக்கும், புத்திக்கும் காரகரான... 'புத பகவான்', 'மறைந்த புதன் நிறைந்த கல்வி...' என்பதற்கேற்ப... பொருள் தேடும் உலகக் கல்வியை விடுத்து... அருள் தேடும் ஞானக்கல்வியை அளிக்கும் வகையில்... அமைந்திருப்பார்.

* கிரகிக்கும் தன்மையை வெளிப்படுத்தும்... 'சந்திர பகவான்'... 'புத பகவானுடன்'... சூட்சுமமான தொடர்பைப் பெற்றிருப்பார்.

* ஆற்றலை வெளிப்படுத்தும்... 'செவ்வாய் பகவான்' பலத்துடன் அமைந்து... மனம் மற்றும் உடலை ஆளும்... 'சந்திர பகவானை' சூட்சுமமாக இயக்கும்படி அமைந்திருப்பார்.

* ஞானத்தையும்... மோக்ஷத்தையும் அளிக்கும் 'கேது பகவான்'... பலமுடன் அமைந்து... உள் வாழ்வுக்கான வழிகாட்டுதலுக்கு வழிகாட்டியாக இருப்பார்.

* உள் வாழ்வுக்கு வழி காட்டும் பிரதானமான கிரகமான... ஞானக்காரகரான... 'குரு பகவான்' மிகுந்த வலிமையுடன் இருப்பார். அவர் மேற்குறிப்பிட்ட அமைவுகளில் அமைந்திருக்கும்... 'சூரிய-சந்திர-செவ்வாய்-புத-கேது பகவான்களுடன்' தொடர்புடன் இருப்பார்.


*  துறவுக்கும்... உறவுக்கும் ஆயுள் பலம் தேவை. ஆயுளுக்குக் காரகரான 'சனி பகவான்'... துறவு என்ற பற்றற்ற நிலக்கும்... உள்வாழ்வுக்கும்... காரகத்துவமானவர்தான். உள்வாழ்வுக்கான ஜாதக அமைவில்... இந்த சனி பகவான்... 'குரு பகவானின்'  சூட்சுமமான கட்டுக்குள் கட்டுப்பட்டிருப்பார்.

* உலக சுகத்திற்கு வழிகாட்டும்... 'சுக்கிர பகவானும்'... 'ராகு பகவானும்'... பலம் இழந்து காணப்படுவர்.

இராசிக் கட்டத்தில்... 'லக்ன பாவங்கள்'... சில சூட்சும அமைவுகளின் மூலம்... இந்த உள்வாழ்வை நோக்கித் திரும்பும் ஜீவனுக்கான அமைவை சுட்டிக் காட்டும்...:

* லக்ன பாவம் வலுத்திருக்கும்.
* குடும்ப பாவம் வலு குறைந்திருக்கும்.
* தைர்ய பாவம் வலுத்திருக்கும்.
* சுக பாவம் நசித்திருக்கும்.
* பூர்வ பாவம் வலுத்து... அது, உலக வாழ்வை துறக்கும் படியாக இருக்கும்.
* சத்ரு பாவம் வலுத்திருக்கும்.
* களத்திர பாவம் வலுவில்லாமல் இருக்கும்.
* ஆயுள் பாவம் வலுத்திருக்கும்.
* தர்ம ஸ்தானம் வலுத்திருக்கும்.
* ஜீவன பாவம்... கர்மத்தை அனுசரிக்கும்படியாக அமைந்திருக்கும்.
* லாப பாவம் வலுத்திருக்கும்.
* சுக-சயன பாவம் நசித்திருக்கும்.

மேற்கண்ட சிறப்பு அமைவுகளில்... 'திரிகோணம் வலுத்திருப்பதைக் காணலாம்'. ஆனால் இந்த திரிகோண அமைவு எவ்வாறு... அந்த ஜீவனை உள் நோக்கிய பயணத்திற்கு அழைத்துச் செல்வதற்கு ஏதுவாக இருக்கிறது... என்பதையும் அறிந்து கொல்ளலாம்.

தொடர்ந்து... 'உலக வாழ்வுக்கு' இட்டுச் செல்லும் திரிகோண அமைவும்... அவை காட்டும் கிரக... பாவ அமைவுகளையும்... ஆய்வோம்... இறைவனின் அருளோடு...

ஸாய்ராம்.

No comments:

Post a Comment

ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...