ஒரு செயலை செய்யும் வல்லமை மட்டுமே நம் வசம் இருக்கிறது. ஆனால் அது விளைவிக்கும் விளைவான பலன்கள் நம் கைவசம் இல்லை.
உதாரணமாக... ஒரு கல்லை எடுத்து... ஒரு இலக்கை நிர்ணயம் செய்து வீசுகிறோம். ஆனால், அந்தக் கல் அந்த இலக்கை நோக்கி செலவதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை.
அது இலக்கையயும் அடையலாம்... அல்லது இலக்கை விட்டும் நகரலாம்... அல்லது வேறு ஏதாவது ஒன்றின் மீது பட்டு, அந்த இலக்குக்கு ஆபத்தையும் ஏற்படுத்தலாம். இந்த ஒரு வினைக்கு... மூன்று விதமான விளைவுகளை ஏற்படுத்தும் வாய்ப்பு அமைந்து போகிறது.
இது போலத்தான்... நாம் வாழ்வில் மேற்கொள்ளும் செயல்களும்... நாம் எதிர் கொள்ளும் நிகழ்வுகளும்.
செயல்களை செய்யும் வல்லமை மட்டுமே நம் வசம் இருக்கிறது. அது ஏற்படுத்தும் விளைவுகளை... நமது 'பூர்வ கர்ம வினைகளே' தீர்மானிக்கின்றன.
இவ்வாறு செயல்கள்... நமது 'பூர்வ கர்ம வினைகளை' தீர்மானிப்பதால்... இந்தப் பிறவிப் பிணி விளைவிக்கும் விளைவுகளிலிருந்து... நாம் விடுபட வேண்டுமெனில்... இந்த செயல்களில் ஈடுபடும் நமது 'மனோ நிலையில்தான்' மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமே தவிர... செயல்களிலிருந்து விடுபட்டுவிட முடியாது. 'மனோ நிலை' மாற்றம் என்பது... செயல்களைக் 'கடமையாகக்' கருதுவது.
நாம் செயல்படும் செயல்களில் 'கடமையுணர்வுடன் ஈடுபடுவது' ஒன்றே... இந்த 'கர்ம வினைச் சுழற்சியிலிருந்து விடுபடும் உபாயம்'.
ஏனெனில் நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் 'ஒரு நோக்கம்' இருக்கும். 'ஒரு எதிர்பார்ப்பும்' இருக்கும். அந்த நோக்கத்தையும், எதிர்பார்ப்பையும் நாம் விட்டு விட முடியாது. ஆனால்... அது 'விளைவிக்கும் விளைவிலிருந்து' நம்மால் 'விடுபட்டு விட முடியும்'. அதாவது அந்த 'எதிர்பார்ப்பிலிருந்து' நம்மை விடுவித்துக் கொள்ள முடியும்.
இந்த நுட்பத்தை அறிந்து கொண்டால்... எந்த எதிர்பார்ப்பும் இல்லாது நம்மால் ஒரு செயலைச் செய்ய முடியும். அதன் விளைவைப் பற்றிய எதிர்பார்ப்பு இல்லாததால்... அந்த செயலின் வடிவமும் முழுமையாக இருக்கும்.
இந்த செயல் வடிவத்தைத்தான்... 'கர்ம யோகம்' என்கிறோம். இவ்வாறான கர்ம யோகம்... கர்ம வினைகளின் தொகுப்பிலிருந்து மட்டுமல்ல... பிறவிப் பிணியான சுழற்சியிலிருந்தே... நம்மை விடுவித்து விடும்.
இதுவரையில்... ஜீவன் கடைத் தேற்றம் பெரும் வழிகளான... பக்தியோகம்-ஞான யோகம்-கர்ம யோகம்... என்ற 'ஸ்மிருதி' என்ற வாழ்வியல் வழி முறைகளிலிருந்து... சிறிய, எளிய விளக்கங்களுக்குள் பிரவேசித்தோம்... இறைவனின் அருளோடு...
ஸாய்ராம்.

No comments:
Post a Comment