... 12 ராசிகளைக் கொண்ட இந்த ஜோதிடச் சித்திரத்தில்... ஜீவன் பிறப்பெடுத்த நேரம் 'லக்னமாக' அமைகிறது. இந்த லக்னத்தை மூலமாகக் கொண்டுதான்... ஏனைய 'ஸ்தானங்கள்' வகைப்படுத்தப்படுகின்றன.
ஸ்தானங்களின் வகைகள் :
~ திரிகோண ஸ்தானங்கள்
~ கேந்திர ஸ்தானங்கள்
~ பண பர ஸ்தானங்கள்
~ மறைவு ஸ்தானங்கள்
இந்த ஸ்தானங்கள் உணர்த்தும் 'ஜீவ வாழ்வின் இரகசியங்கள்' என்ற 'கர்ம வினைகளின் விளைவுகளை... ஒவ்வொன்றாக ஆய்வோம்.
திரிகோண ஸ்தானங்கள் :
லக்னம் (1), பூர்வ புண்ணியம் (5) மற்றும் பாக்கியம் (9) என்ற இந்த மூன்று ஸ்தானங்களையும்தான் 'திரிகோண ஸ்தானங்கள்' என்று அழைக்கிறோம். இந்த முக்கோண அமைவே... ஒரு ஜீவனின் வாழ்வின் நிலையை உணர்த்தும் முதல் ஸ்தானங்களாக அமைகிறது.
லக்னம் :
ஒரு ஜீவனின் பிறப்பில்... அது, இந்த உலகம் என்ற நாடக மேடையில்... தான் ஏற்றுக் கொண்டு நடிக்கப் போகும் தனது... 'வாழ்வு' என்ற நாடகத்தில்... தான் பங்கு பெறும் 'பாத்திரம்' பற்றிய வருணனையைத்தான்... 'லக்னம்' என்ற ஸ்தானம் விவரிக்கிறது.
பூர்வ புண்ணியம் :
அந்தப் பாத்திரத்திற்கு ஏற்றவாறு... இந்த நாடகத்தில் தான் பங்கு பெறுவதற்கு... தான் சுமந்து கொண்டு வந்திருக்கும்... அனுபவங்களைத்தான், இந்த 'பூர்வ புண்ணியம்' என்ற ஸ்தானம் விவரிக்கிறது.
பாக்கியம் :
இந்த நாடகத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது... தனது வெளிப்பாடுகளால் ஏற்படும் விளைவுகளிலிருந்தும், தான் எதிர்கொள்ளும் பாத்திரங்களின் வெளிப்பாடுகளுக்கு ஏற்றவாறு... தான் வெளிப்படுத்தும் வெளிப்பாடுகளும்தான்... அனுபவமாக மலர்கிறது. இதைத்தான்... இந்த 'பாக்கியம்' என்ற ஸ்தானம் விவரிக்கிறது.
இவற்றை... உதாரணங்களோடு அணுகுவோம்... தொடர்ந்து... இறைவனின் அருளோடு...
ஸாய்ராம்.

No comments:
Post a Comment