Tuesday, November 5, 2019

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் - பகுதி 30. 'ஏழாம் இடம்' என்ற 'இணையும் - துணையும்' - பகுதி 2. இணை (நட்பு)

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் - பகுதி 30. 

'ஏழாம் இடம்' என்ற 'இணையும் - துணையும்' - பகுதி 2. இணை (நட்பு)





'...நமக்கு உடன் படாதவர்களின்   தொடர்பையும், துணையையும் கொண்டுதான்... இந்த உலக வாழ்வில்... நமது 'பூர்வ வினைகள்' என்ற 'கர்ம வினைகளைக்' கடந்து போக வேண்டும்...'

# ...'நட்புக் கிரகமாக' அமையாது இருப்பது...

# ...'பகைக் கிரகமாக' அமைவது...

# ...பொதுவான 'மாரக ஸ்தானமாக' அமைவது...

... இதைத்தான்...ஜாதக அமைவில், 7 ஆமிடம் உணர்த்துகிறது.

இவ்வாறான சூழலில்தான்... நாம் 'தொடர்புகளின் துணையுடன்' (இணை - துணை)  இந்த வாழ்வைக் கடக்க நேரிடுகிறது.

இணை ( நட்பு ) :

இதை உச்சரிக்கும் போதுதான் எவ்வளவு மகிழ்ச்சி. இந்த தொடர்பு கொடுக்கும் அனுபவங்களுக்கு ஈடு இணை ஏது...!

~ எந்த வித எதிர்பார்ப்புகளும் இல்லாதது.

~ எந்த வித பாகுபாடுகளும் இல்லாதது... ( மதம் - இனம் - பொருளாதாரம்                    போன்ற...)

~ வயது வரம்பு இலக்கு இல்லாதது.

~ மனதில் இருக்கும் அல்லது தோன்றும் அனைத்தையும், எந்த வித                               தயக்கமும் இல்லாது பகிர்ந்து கொள்வது.

~ குறையில்லாத மனிதர்களே... இந்த உலகத்தில் இல்லை என்பதை புரிந்து                வைந்த்திருப்பது.

~ ஏற்படும் சிறு பிரச்சனையையும் விட்டு விட்டுச் செல்வது அல்லது அதற்கு             மனமார மன்னிப்புக் கேட்டுக் கொள்வது.

~ இடம் - தூரம் - காலம் என்பதெல்லாம் ஒரு பொருட்டே இல்லாமல் இருப்பது.

~ ஒரு துன்பம்... என்று நிகழும் போது... ஓடி வந்து தோளில் கை போட்டு                        ஆறுதலும்... நிவாரணமும் அளிப்பது.

...இந்த அற்புதங்களை எல்லாம் நிகழ்த்துவதும் இந்த 'ஸ்தானம்தான்' என்றால்... அது, ஆச்சரியத்தைத்தான் விளைவிக்கும்...!

இதற்குக் காரணம்... இந்த 'நட்பு' என்ற 'இணைவு'... ஒரு 'பந்தத்தை ஏற்படுத்துகிறது'... ஆனால், 'பற்றை ஏற்படுத்துவதில்லை'...

நட்பு என்ற பந்தம்... சேரும் போதும், பழகும் போதும், விட்டுப் பிரியும் போதும்... ஏற்படும் 'மனப் போராட்டங்களிலிருந்தும்'... அவை ஏற்படுத்தும் ' சிதைவுகளிலிருந்தும்'... வெகு சீக்கிரமாக வெளியேறி விட வாய்ப்பை ஏற்படுத்தித் தருகிறது.

மாறாக... இந்த பந்தத்துடன்... பற்று என்பது சேர்ந்தால்...?

அதை அடுத்த பதிவில், சற்று ஆய்ந்து பார்ப்போம்... இறைவனின் அருளைக் கொண்டு...

ஸாய்ராம்.

No comments:

Post a Comment

ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...