மகான்களுக்கும் மடங்கள் மற்றும் ஆசிரமங்களுக்குமான தொடர்பு எவ்வாறு இருந்தது...? பகுதி 3 - பகவான் ஸ்ரீ ரமண மகிரிஷி.
1879 ன் இறுதியில் இந்த மகானின் அவதாரத்தை... விருதுநகர் மாவட்டத்தின் ஒரு சிறிய கிராமமான... 'திருச்சுழி' கண்டு களித்தது.
பள்ளிப் படிப்புக்காக மதுரை வந்த 'வேங்கடராமன்' என்ற, இந்த இளம் பாலகனுக்கு... தனது தந்தையாரின் மரணம்... தனது 'உள் தேடுதலுக்கான' வழியைக் காட்டியது. சிறுவனின் கண்களுக்கு... தந்தையார் உடலுடன் இருப்பது தெரிகிறது. ஆனால்... குடும்பத்தினர்களும், உறவினர்களும்... அவர் இறந்துவிட்டதாக துயரத்தில் மூழ்கியிருப்பது... அவனுள், ஆச்சரியத்தையும்... எண்ணற்ற கேள்விகளையும் எழுப்புகிறது.
தந்தையார், காலையில் இந்த உடலுடன் தானே இருந்தார்...! இப்போதும், அந்த உடல் இங்குதானே இருக்கிறது...! அவர் செயலற்ற நிலையில் இருக்கிறாரே...! உடம்பு சில்லிட்டு இருக்கிறதே...! அப்படியெனில், அவரின் உடல்... அவர் இல்லையா...! அவர் இந்த உடல் இல்லையெனில்... அவரிடம் இருந்து வெளியேறியது எது...?
இந்தத் தேடல், அவரை அந்த வீட்டு மாடியறைக்கு அழைத்துச் சென்றது. கதவை மூடிவிட்டு... தந்தையாரைப் போலவே... கண்களை மூடி... கை, கால்களை உடலுடன் அசைவற்ற நிலையில் வைத்துக் கொண்டார். மூச்சை வெளியே விடாமல்... உள்ளுக்குள்ளேயே ஓடவிட்டார். அவரின் கவனம்... அந்த மூச்சைக் கவனித்துக் கொண்டிருக்கும் போதே... அது ஓரிடத்தில் ஒடுங்கி... அடங்கும் க்ஷணத்தில் ஏற்பட்ட 'பரமானந்தத்தை' பூரணமாக அனுபவித்தார். அவருக்கும் அனைத்தும் புரிந்தது. 'தான் இந்த உடல் அல்ல... அதற்குள் இருந்து ஸ்புரணிக்கும் ஆத்மா...' என்பதை அனுபவித்து உணர்ந்து கொண்டார்.
இந்த உணர்வுக்குள் அவரை ஈர்த்தது... 'அண்ணாமலையார்' என்பதை... 16 ஆவது வயதில்... 'திருவண்ணாமலைக்கு', விழுப்புரம் வரை ரெயிலில் வந்து. அங்கிருந்து நடந்தே, திருவண்ணாமலைக்கு வந்து... 'அசலமாக' நிற்கும் அண்ணாமலையைப் பார்த்தபின்தான் உணர்ந்தார்.
அன்றிலிருந்து... 'ஒரு சேத்திர சந்நியாசியாக'... திருவண்ணாமலையை விட்டு... தனது 'மகாசமாதி' வரை அகலாது... 'ரமண மகிரிஷி' என்ற நாமத்துடன் இருந்தவர்தான்... இந்த அற்புத மகான்.
முதலில் ஆலயப் பிரகார பாதாள லிங்கத்திற்கு அருகிலும்... சிறிது காலம், ஒரு தோப்பிலும்... பின்னர் அடிவாரத்தில் 'ஆசிரமம்' அமையும் வரை 'விருப்பாட்சி குகையிலும்'... அவரது 'இருப்பு' தொடர்ந்தது.
அத்யந்த பக்தர்களின் அன்புக்கு இணங்கி ஒரு 'ஆசிரம' வாழ்வுக்கு அவர் ஒப்புக் கொண்டாலும்... அதை, 'சாதகர்களை' வழி நடத்துவதற்கான ஒரு வாய்ப்பாகவே பயன்படுத்திக் கொண்டார்.
ஒருமுறை, ஆசிரமத்திற்கு வந்து செல்பவர்களைக் கண்ட கொள்ளைக்காரர்கள்... ஒரு இரவு நேரத்தில், ஆசிரமத்திற்குள் புகுந்து திருட முற்பட்டு... ஆசிரமத்தில் கொஞ்சம் சிலவுக்கான பணமும்... ஒரு வாரத்திற்குண்டான உணவுப் பொருள்கள் மட்டுமே இருப்பதைக் கண்டார்கள். கொள்ளையடிப்பதற்கு ஏதும் மதிப்பானவைகள் இல்லாததைக் கண்டு... கோபமுற்ற கொள்ளையர்கள்... பகவானைத் தாக்கிவிட்டும் சென்றார்கள்.
இதுதான்... இந்த மகானுக்கும்... ஆசிரமத்திற்கும் இடையேயான தொடர்பு.
ஸாய்ராம்.
1879 ன் இறுதியில் இந்த மகானின் அவதாரத்தை... விருதுநகர் மாவட்டத்தின் ஒரு சிறிய கிராமமான... 'திருச்சுழி' கண்டு களித்தது.
பள்ளிப் படிப்புக்காக மதுரை வந்த 'வேங்கடராமன்' என்ற, இந்த இளம் பாலகனுக்கு... தனது தந்தையாரின் மரணம்... தனது 'உள் தேடுதலுக்கான' வழியைக் காட்டியது. சிறுவனின் கண்களுக்கு... தந்தையார் உடலுடன் இருப்பது தெரிகிறது. ஆனால்... குடும்பத்தினர்களும், உறவினர்களும்... அவர் இறந்துவிட்டதாக துயரத்தில் மூழ்கியிருப்பது... அவனுள், ஆச்சரியத்தையும்... எண்ணற்ற கேள்விகளையும் எழுப்புகிறது.
தந்தையார், காலையில் இந்த உடலுடன் தானே இருந்தார்...! இப்போதும், அந்த உடல் இங்குதானே இருக்கிறது...! அவர் செயலற்ற நிலையில் இருக்கிறாரே...! உடம்பு சில்லிட்டு இருக்கிறதே...! அப்படியெனில், அவரின் உடல்... அவர் இல்லையா...! அவர் இந்த உடல் இல்லையெனில்... அவரிடம் இருந்து வெளியேறியது எது...?
இந்தத் தேடல், அவரை அந்த வீட்டு மாடியறைக்கு அழைத்துச் சென்றது. கதவை மூடிவிட்டு... தந்தையாரைப் போலவே... கண்களை மூடி... கை, கால்களை உடலுடன் அசைவற்ற நிலையில் வைத்துக் கொண்டார். மூச்சை வெளியே விடாமல்... உள்ளுக்குள்ளேயே ஓடவிட்டார். அவரின் கவனம்... அந்த மூச்சைக் கவனித்துக் கொண்டிருக்கும் போதே... அது ஓரிடத்தில் ஒடுங்கி... அடங்கும் க்ஷணத்தில் ஏற்பட்ட 'பரமானந்தத்தை' பூரணமாக அனுபவித்தார். அவருக்கும் அனைத்தும் புரிந்தது. 'தான் இந்த உடல் அல்ல... அதற்குள் இருந்து ஸ்புரணிக்கும் ஆத்மா...' என்பதை அனுபவித்து உணர்ந்து கொண்டார்.
இந்த உணர்வுக்குள் அவரை ஈர்த்தது... 'அண்ணாமலையார்' என்பதை... 16 ஆவது வயதில்... 'திருவண்ணாமலைக்கு', விழுப்புரம் வரை ரெயிலில் வந்து. அங்கிருந்து நடந்தே, திருவண்ணாமலைக்கு வந்து... 'அசலமாக' நிற்கும் அண்ணாமலையைப் பார்த்தபின்தான் உணர்ந்தார்.
அன்றிலிருந்து... 'ஒரு சேத்திர சந்நியாசியாக'... திருவண்ணாமலையை விட்டு... தனது 'மகாசமாதி' வரை அகலாது... 'ரமண மகிரிஷி' என்ற நாமத்துடன் இருந்தவர்தான்... இந்த அற்புத மகான்.
முதலில் ஆலயப் பிரகார பாதாள லிங்கத்திற்கு அருகிலும்... சிறிது காலம், ஒரு தோப்பிலும்... பின்னர் அடிவாரத்தில் 'ஆசிரமம்' அமையும் வரை 'விருப்பாட்சி குகையிலும்'... அவரது 'இருப்பு' தொடர்ந்தது.
அத்யந்த பக்தர்களின் அன்புக்கு இணங்கி ஒரு 'ஆசிரம' வாழ்வுக்கு அவர் ஒப்புக் கொண்டாலும்... அதை, 'சாதகர்களை' வழி நடத்துவதற்கான ஒரு வாய்ப்பாகவே பயன்படுத்திக் கொண்டார்.
ஒருமுறை, ஆசிரமத்திற்கு வந்து செல்பவர்களைக் கண்ட கொள்ளைக்காரர்கள்... ஒரு இரவு நேரத்தில், ஆசிரமத்திற்குள் புகுந்து திருட முற்பட்டு... ஆசிரமத்தில் கொஞ்சம் சிலவுக்கான பணமும்... ஒரு வாரத்திற்குண்டான உணவுப் பொருள்கள் மட்டுமே இருப்பதைக் கண்டார்கள். கொள்ளையடிப்பதற்கு ஏதும் மதிப்பானவைகள் இல்லாததைக் கண்டு... கோபமுற்ற கொள்ளையர்கள்... பகவானைத் தாக்கிவிட்டும் சென்றார்கள்.
இதுதான்... இந்த மகானுக்கும்... ஆசிரமத்திற்கும் இடையேயான தொடர்பு.
ஸாய்ராம்.

No comments:
Post a Comment