Tuesday, October 22, 2019

மகான்களுக்கும் மடங்கள் மற்றும் ஆசிரமங்களுக்குமான தொடர்பு எவ்வாறு இருந்தது...? பகுதி 4 - அருள் பிரகாச வள்ளளார்.

மகான்களுக்கும் மடங்கள் மற்றும் ஆசிரமங்களுக்குமான தொடர்பு எவ்வாறு இருந்தது...? பகுதி 4 - அருள் பிரகாச வள்ளளார்.




ஆன்மீகப் புகழ் கொண்ட... ஜிவனின் வாழ்வு இரகசியங்கள் பொதிந்துள்ள ஸ்தலமான... சிதம்பரத்தின் அருகில் இருக்கும் ஒரு சிற்றுரில் 1823 ஆம் ஆண்டில் அவதரித்தவர்.

தமது வாழ்வின் பெரும் பகுதியை அன்றைய சென்னை மாகாணத்தில் கழித்தவர். இளமையிலேயே... இறைவனின் கருணையை... 'ஒரு அருள் பெரும் ஜோதியின் வடிவமாக'  அனுபவித்து உணர்ந்தவர்.

அந்த அருள் பெரும் ஜோதிதான்... உலகத்தில் இருக்கும் அனைத்து 'அசையும்... அசையா' பொருள்கள் மற்றும் உயிரினங்களிலும் விரவி இருக்கின்றது என்ற உண்மையை உணர்ந்தவர்.

இந்த உண்மை உணர்த்திய தெளிவு... மாந்தர்களின் மனத்தில் இருக்கும் மாசை அகற்றுவதற்கான வழி... அவர்களை இந்த பொது வழிப் பாதையில் அழைத்துச் செல்வதுதான்... என்ற தீர்மானத்திற்கு அவரை இட்டுச் சென்றது.

அதுவரை உலவி வந்த ஆன்மீகப் பாதைகளை விடுத்து... உலக மாந்தர்கள் அனைவரையும் ஒன்று படுத்தும் முகமாக... 'சர்வ சமய சமரச சுத்த சன்மார்க்க சங்கம்' என்ற புதிய... புரட்சிகரமான அமைவை ஏற்படுத்தி... அதற்கு, தான் அனுபவித்து உணர்ந்த... 'அருள் பெரும் ஜோதியை' மூல வடிவமாக்கினார்.

அந்த 'அருள் பெரும் ஜோதியை'... தனது அனுபவத்தால்...'தனிப் பெரும் கருணை' யாக அனுபவித்து மகிழ்ந்தவர் இந்த அருள் பிரகாச வள்ளளார். தான் பெற்ற அனுபவத்தை... தனது பக்தர்களுக்கும் அளித்து... அவர்களையும் அந்த அருள் பாதையில் அழைத்துச் சென்ற ஆன்மீக வள்ளல்... உலக மாந்தர்களின் நீங்காத துன்பங்களில் ஒன்றான 'பசிப்பிணியை' நீக்க.. வடலுர் அடியார்களின் துணை கொண்டு... அந்தக் காலத்திலேயே... 80 காணி நிலத்தைப் தானமாகப் பெற்று... என்றும் அணையாத... 'சத்திய தரும சாலையை' நிறுவினார்.

அவர் ஏற்றி வைத்த தீபம் போலவே... அந்த அணையா அடுப்பும் இன்றும் எண்ணற்ற மாந்தர்களின் 'பசிப் பிணியையும்... ஆன்மீகத் தாகத்தையும்' தீர்த்து வைக்கிறது.

இதுதான்... இந்த மகானுக்கும்... ஆசிரமத்திற்குமான தொடர்பு.

ஸாய்ராம்.


No comments:

Post a Comment

ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...