Saturday, October 19, 2019

மகான்களுக்கும் மடங்கள் மற்றும் ஆசிரமங்களுக்குமான தொடர்பு எவ்வாறு இருந்தது...? பகுதி 2 - ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்ஸர்.

மகான்களுக்கும் மடங்கள் மற்றும் ஆசிரமங்களுக்குமான தொடர்பு எவ்வாறு இருந்தது...? பகுதி 2. - ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்ஸர்.




மேற்கு வங்காளத்தின் 'காமார்புகூர்' என்ற ஒரு சிரிய கிராமத்தில் பிறந்த இந்த அற்புத மகானை... கல்கத்தாவில் அமைந்திருக்கும் 'காளி மாதா...' தனது அன்பென்னும் கருணையால் ஆட்கொண்டார். இவருக்கு, காளி அன்னையின் மீது பொழியும் அன்பைத் தவிர வேறொன்றிலும் நாட்டமிருந்ததில்லை.

ஏனைய பூஜாரிகள்... அன்னைக்கு அபிஷேகம் செய்யும் போதும்... அலங்காரம் செய்யும் போதும்... அர்ச்சனை செய்யும் பொதும்... நிவேதனம் என்ற 'அமுது கண்டருளுதலின்' போதும்... இவற்றை ஒரு சம்பிராதயமாக மேற்கொள்ளும் போது... இவர் மட்டும், இவற்றையெல்லாம்... அன்னைக்குச் செய்யும் ஒரு அன்பு மகனின்... தொண்டாகத்தான் செய்வார்.

அவரின் ஒவ்வொரு செயலிலும் இருக்கும் ஈடுபாடும்... அவரின் பக்திக்கு இணங்கி அன்னை அவரிடம் நடத்திய லீலையும்... பார்ப்பவர்கள் கண்களுக்கு, ஒரு 'உன்மத்தரின்' செயலைப் போன்றுதான் இருந்தது. ஆனால் இந்த பூஜாரியோ... அன்னையுடன் நனவிலும்... கனவிலும்... ஆழ் உணர்விலும் ஒன்று கலந்தே இருந்தார்.

ஒரு 'யோக சாதகராக' இந்த மஹான் செய்த சாதனைகள் அளவிட முடியாதது. யோக சாதனைகள் அனைத்தையும் கைக் கொண்டு... அவற்றின் வழியாக 'உருவத்துடன் கூடிய பிரம்மத்தையும்...', 'உருவமற்ற பிரம்மத்தையும்...' பரிபூரணமாக அனுபவித்தார்.

'சமாதி' என்று குறிப்பிடப்படும் யோக சாதனை நிலைகளின் படிமானங்களான... 'சமாதி... நிர்விகல்ப்ப சமாதி... சகஜ சமாதி என்ற நிலைகளை...' விழிப்பு நிலையிலேயே அனுபவித்துக் கொண்டிருந்தார். இந்த சாதனைகள்... அவரின் உடலை நசித்துவிட்டிருப்பதில் ஆச்சரியம் எதுவும் இல்லை.

உலகம் முழுவதும் பரவி... விரவியிருந்த 'யோக சாதககர்கள்'... அவர்களை வழி நடத்தும் ஒரு 'சத்குருவை' நோக்கி... தமது கைகளை நீட்டிக் கொண்டிருப்பதை... தனது உள்ளுணர்வால் உணர்ந்து கொண்ட இந்த மகான்... அவர்களது வருகைக்காகக் காத்துக் கொண்டிருந்தார்.

அந்த சாதகர்களில் ஒருவராகவும்... ஏனைய சாதகர்களை வழி நடத்துபவராகவும்... அன்னையால் அழைத்துவரப்பட்டவரே... 'நரேந்திரன்' என்ற... 'சுவாமி விவேகானந்தர்'. அவரின் வருகையால்தான்.. இந்த மகோன்னதமான... உத்தம 'சத்குரு'... சுவாமி ஸ்ரீ இராமகிரிஷ்ணரின் புகழ் உலகெங்கும் பரவியது.

இவரின் இறுதிக் காலத்தில்...இவரின் உடல் நலிந்து கொண்டிருக்கும் போது... இவர் சதா நேரத்திலும்... சகஜ சமாதியில் நிலைத்திருக்கும் நிலையில்... இவரை பாதுகாக்கும் பொருட்டு... இவரின் சீடர்களான சுவாமி விவேகானந்தரின் தலைமையில் உருவானதுதான்... 'ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்ஸரின் ஆசிரமமான... மடம்'.

'பகவான் ஸ்ரீ இராமகிருஷ்ணரின்' மகா சமாதிக்குப் பின்னரே... இந்தியாவிலும்... பிறகு மேற்கத்திய நாடுகளிலும்... 'பகவான் ஸ்ரீ இராமகிருஷ்ணரின் மடங்கள்'... தமது ஆன்மீகப் பணிகளைத் தொடர்ந்தன.... இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

இதுதான்... பகவான் ஸ்ரீ இராமகிருஷ்ணருக்கும்... மடத்திற்குமான தொடர்பு...

ஸாய்ராம்.

No comments:

Post a Comment

ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...