சிவசக்தித் தாயார் - திருவண்ணாமலை :
'அசலம்' என்பது அசையாத தன்மையைக் குறிக்கும். அந்த அசையாத மலைதான் அருணாசலேஸ்வரராக, திருவண்ணாமலையில் என்றும் நிலைத்திருக்கிறது.
அந்தக் காந்த மலையால் ஈர்க்கப்பட்ட எண்ணற்ற மகன்னீயர்கள்... தபஸ்விகள்... ஞானிகள்... யோகிகள் வரிசையில்... இன்று அந்த காந்த மலையால் ஈர்க்கப்பட்டு 25 வருடங்களுக்கு மேலாக... தொடர்ந்து அந்த மலையடிவாரத்தில்... மௌன யோகினீஸ்வரியாக அருள்பவர்தான்... 'அன்னை சிவசக்தித் தாயார்'.
வெறும் காற்றையே... தமது பிராணனாகக் கொண்டு வாழும்... இந்த தபஸ்வினி... நாமறிந்த வரையில் எந்த உணவையும் தம் உயிர் வாழ்விற்கு ஏற்றுக் கொள்வதில்லை. காற்றில் பறக்கும் சருகு போல தன் வாழ்வை நடத்தும் அன்னையின் தீட்க்ஷண்யமான பார்வையை தாங்கும் சக்திதான் நமக்கு இருப்பதில்லை.
அந்த அருள் கண்கள் நம்மை ஊடுருவிப் பார்க்கும் போது... ஒரு எல்லையற்ற சக்தி நமக்குள் புகுந்து... நம்மை அங்குலம்... அங்குலமாக கூறுபோட்டுப் பார்ப்பதை நம்மால் உணரமுடியும். நம் மனதின்... இண்டு... இடுக்குகளில்... ஒளிந்திருக்கும் எத்தனையோ ரகசியங்கள்... நமது கட்டுப் பாட்டையும் மீறி... அவரின் அருட் பார்வைக்கு இலக்காவதை நம்மால் தடுக்க முடிவதில்லை.
அவரின் தரிசனம் முடிந்து... அந்தத் தாயார் ஒரு வண்ணத்துப் பூச்சியைப் போல சிறகை விரித்து கடந்து போனதற்குப் பின்னரும்... அந்த தரிசன மகிமையின் அற்புதம் நம்மை விட்டு நிங்குவதில்லை.
ஆம்... அவர் பார்த்தது... நமது உடலை அல்ல... கர்மாவை சுமந்திருக்கும் நமது ஜீவனை அல்ல... என்றும் நிலைத்திருக்கும் ஆத்மாவை. அதுதான் தீக்ஷை என்பதை நாம் அறிந்து கொள்ளும் முன்னரே... அதை நமக்கு அளிக்கும் கருணை வள்ளலே... சிவ சக்தித் தாயார்.
வாழும் மனன்னீயர்களின் தொடர்பைப் பெறுவது... எத்தனையோ கோடி பிறவிகளில் செய்த புண்ணியங்களின் தொகுப்பே. அந்த புண்ணியம் முழுவதும் தாயாரின் வடிவமாக... திருவண்ணாமலையில் எழுந்தருளி இருக்கிறது. ஆனந்தம் பெறுவோம். வாரீர்.
ஸாய்ராம்.
'அசலம்' என்பது அசையாத தன்மையைக் குறிக்கும். அந்த அசையாத மலைதான் அருணாசலேஸ்வரராக, திருவண்ணாமலையில் என்றும் நிலைத்திருக்கிறது.
அந்தக் காந்த மலையால் ஈர்க்கப்பட்ட எண்ணற்ற மகன்னீயர்கள்... தபஸ்விகள்... ஞானிகள்... யோகிகள் வரிசையில்... இன்று அந்த காந்த மலையால் ஈர்க்கப்பட்டு 25 வருடங்களுக்கு மேலாக... தொடர்ந்து அந்த மலையடிவாரத்தில்... மௌன யோகினீஸ்வரியாக அருள்பவர்தான்... 'அன்னை சிவசக்தித் தாயார்'.
வெறும் காற்றையே... தமது பிராணனாகக் கொண்டு வாழும்... இந்த தபஸ்வினி... நாமறிந்த வரையில் எந்த உணவையும் தம் உயிர் வாழ்விற்கு ஏற்றுக் கொள்வதில்லை. காற்றில் பறக்கும் சருகு போல தன் வாழ்வை நடத்தும் அன்னையின் தீட்க்ஷண்யமான பார்வையை தாங்கும் சக்திதான் நமக்கு இருப்பதில்லை.
அந்த அருள் கண்கள் நம்மை ஊடுருவிப் பார்க்கும் போது... ஒரு எல்லையற்ற சக்தி நமக்குள் புகுந்து... நம்மை அங்குலம்... அங்குலமாக கூறுபோட்டுப் பார்ப்பதை நம்மால் உணரமுடியும். நம் மனதின்... இண்டு... இடுக்குகளில்... ஒளிந்திருக்கும் எத்தனையோ ரகசியங்கள்... நமது கட்டுப் பாட்டையும் மீறி... அவரின் அருட் பார்வைக்கு இலக்காவதை நம்மால் தடுக்க முடிவதில்லை.
அவரின் தரிசனம் முடிந்து... அந்தத் தாயார் ஒரு வண்ணத்துப் பூச்சியைப் போல சிறகை விரித்து கடந்து போனதற்குப் பின்னரும்... அந்த தரிசன மகிமையின் அற்புதம் நம்மை விட்டு நிங்குவதில்லை.
ஆம்... அவர் பார்த்தது... நமது உடலை அல்ல... கர்மாவை சுமந்திருக்கும் நமது ஜீவனை அல்ல... என்றும் நிலைத்திருக்கும் ஆத்மாவை. அதுதான் தீக்ஷை என்பதை நாம் அறிந்து கொள்ளும் முன்னரே... அதை நமக்கு அளிக்கும் கருணை வள்ளலே... சிவ சக்தித் தாயார்.
வாழும் மனன்னீயர்களின் தொடர்பைப் பெறுவது... எத்தனையோ கோடி பிறவிகளில் செய்த புண்ணியங்களின் தொகுப்பே. அந்த புண்ணியம் முழுவதும் தாயாரின் வடிவமாக... திருவண்ணாமலையில் எழுந்தருளி இருக்கிறது. ஆனந்தம் பெறுவோம். வாரீர்.
ஸாய்ராம்.

No comments:
Post a Comment