Monday, June 3, 2019

கவிஞர் கண்ணதாசன் - ஒரு பார்வை - பகுதி 1 :

கவிஞர் கண்ணதாசன் - ஒரு பார்வை - பகுதி 1 :

நமக்குள் இருக்கும் இறைவனை, தியானம் என்ற உள் முக தரிசனத்தாலும்... இறைவனுக்காக ஒரு ஆலயத்தை எழுப்பி, அதில் அவரது திருவுருவத்தை வடித்து, அதை வழிபடுவதன் மூலமும்... அனுபவித்து வருகிறோம். இந்த அனுபவம் கனிந்து ஒரு பூரணத்துவத்தை அடையும் போது... காணும் அனைத்திலும் அந்த இறைவனைக் கண்டு மகிழ்கிறது மனம்.

அது போலவே, இந்த புவியில் இயற்கை, தனது அழகை எண்ணற்ற வளங்களாக வெளிப்படுத்தும் போது... கண்களால் கண்டும்... மனதினால் ரசித்தும்... ஆத்மார்த்தமாக அனுபவிக்கும்... கவிஞர்...

உலகம் பிறந்தது எனக்காக
ஓடும் நதிகளும் எனக்காக
மலர்கள் மலர்வதும் எனக்காக - அன்னை
மடியை விரித்தாள் எனக்காக...

... என்று  மடியை விரித்த இயற்கையின் செல்வங்களாக... ஓடும் நதியையும்... அதன் கரையிலிருந்து பூத்துக் குழுங்கி மணம் பரப்பும் மலர்களையும்... நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்தி... அவருடன் நம்மையும் சேர்ந்து அனுபவிக்க வைக்கிறார்.

அந்த அனுபவத்தின் பூரணம் கனியும் போது... அதன் பின்னனியில் இருந்து இயக்கும் இறைவனை...

காற்றில் மிதக்கும் ஒலிகளிலே
கடலில் தவழும் அலைகளிலே
இறைவன் இருப்பதை நானறிவேன்...

... என்று தனது உள்ளுணர்வால் அனுபவிக்கும் போது... நமது மனமும் அவரின் உள்ளுணர்வுடன் இணைந்து விடுகிறது.

இறைவனை நாம் அறிவது ஒரு அற்புதம்... அந்த இறைவன் நம்மை அணைத்துக் கொள்வது ஒரு ஆனந்த அனுபவம்... இந்த அனுபவத்தைத்தான்... மாணிக்கவாசகர், '...அவனருளாளே... அவன் தாள் வணங்கி...' என்று 'சிவபுராணமாக்கினார்'. அந்த அனுபவத்தை கவிஞர்... இந்தப் பாடலில்...

'...என்னை... அவனே தானறிவான்...'

...என்ற... இறுதி வரியாக்கி... அந்த ஆனந்த அனுபவத்தில் நம்மையும் திளைக்க வைக்கிறார்.

திரைக் கதையின் சூழலுக்குத்தான் பாடல்... ஆனால் அந்த சூழலுக்காக எழுதும் பாடலுக்குள்... இந்த சூட்சுமத்தை வைக்கும் கவிஞரின் ஞானம்தான் என்ன...!

ஸாய்ராம்.


No comments:

Post a Comment

ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...