Sunday, June 2, 2019

ஜோதிடமும் அதன் அணுகுமுறையும் :



ஜோதிடமும் அதன் அணுகுமுறையும் :

'இரு குடும்பங்களின் இணைவுக்குப்' பாலமாக இருந்த 'திருமணம்'... இன்று, 'இருவரின் இணவைப்' பற்றி மட்டுமே... பேசும் நிலைக்கு வந்துவிட்டது.

இது 'காலத்தின் கட்டாயம்'. நல்ல குடும்பம் -> குணம் -> கல்வி-> கல்வியுடனான
வேலை -> தனிக் குடும்ப அமைவு -> நிறைந்த பொருளாதார நிலை -> வசதியான வாழ்வு... என எதிர்பார்ப்புகள் படிப்படியாக மாற்றம் பெற்றுவிட்டன.

இந்த மாற்றம் 'மணமக்களிடம்' மட்டுமல்ல... 'மணமக்களின் குடும்பத்தினரிடமும்' விரவி விட்டது. எனவேதான்... பொருத்தம் என்பது... 'நட்சத்திரத்திரத்தை' மட்டும் அடிப்படையாகக் கொண்ட நிலையிலிருந்து... 'ஜாதக ரீதியிலான' இணைப்பை... நோக்கி நகர்ந்து விட்டது.

'ஜாதக ரீதியிலான பொருத்தமே'... இந்த 'எதிர்பார்ப்புகளின் உண்மை நிலையையும்'... 'யதார்த்தத்தையும்'... அந்த வரன்களுக்கு உணர்த்த முடியும்.
இப்போதுதான்... 'ஜோதிடர்களின்'... 'ஆத்மார்த்தமான ஆலோசனை'... இந்த வரன்களுக்குத் தேவைப்படுகிறது. அதற்கு வரன்களும்... வரன்களின் பெற்றோர்களும்... ஜோதிடர்களும் முன்வர வேண்டும்.

ஜோதிடப் பணி... 'இன்றைய சமுதாயத்திற்கான'... 'ஆக்கப் பூர்வமான பணியாகவும்' ஆகிவிட்டது. இது காலத்தின் கட்டாயம்.

ஸாய்ராம்.


No comments:

Post a Comment

ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...