பெயர் சூட்டுதல் - ஒரு பார்வை
இருந்தது... இழந்ததும் :
இந்த ஜீவனுக்கு இரண்டு விதமான அவஸ்தைகள் உண்டு. ஒன்று 'நாமம்'... இன்னொன்று 'ரூபம்'.
ரூபம்... பிறப்பின் போது அமைவது. பிறப்பிலிருந்து மரணபரியந்தம் வரை மாறிக் கொண்டே இருப்பது. எல்லா பருவங்களிலிலும்... அந்த ஜீவனை ரூபத்தைக் கொண்டு அடையாளப்படுத்திக் கொள்ள முடியும்.
ஆனால், பெயர்... என்ற நாமம் இந்த ஜீவன் பிறந்ததிற்குப் பின் அடையாளப் படுத்துவதற்காக சூட்டப்படுவது. இந்தப் பெயரே நம்மை இந்த சமூகத்திற்கு அடையாளம் காட்டுகிறது.
எப்போது இந்தப் பெயர், ரூபத்துடன் இணைகிறதோ... அப்போது இந்த ஜீவனால்... இந்த கட்டமைப்பை விட்டு நீங்க முடியாததாக்குகிறது.
இந்த பெயரமைக்கும் வாய்ப்பு நமக்கு வழங்கப்பட்டிருக்கிறது. அதைத்தான் நமது முன்னோர்கள் சரியாக பயன்படுத்தி... ஒரு நிலையான... முறையான... சமூகக் கட்டமைப்பாக... உருவாக்கித் தந்திருக்கிறார்கள்.
நமது மண்ணில் பிறந்த அனைத்து ஜீவர்களும் ரிஷிகளின் பரம்பரையில் வந்தவர்களே. இதில் எந்த சந்தேகமும் தேவை இல்லை. இந்த உண்மையை 'பாகவதம்' நமக்கு உணர்த்துகிறது. அந்த ரிஷி பரம்பரையில் வந்த பாரதத்து மாந்தர்களை பொதுவான இரண்டு பிரிவுகளாக நமது முன்னோர்கள் பிரித்தனர்.
அவை சைவ மரபினர்... வைணவ மரபினர். சிவபெருமானை வணங்கி விபூதி தரிப்பவர்களை சிவகுலமாகவும்... திருமாளை வணங்கி திருநாமமிடும் வைணவர்களை... வைணவ குலமாகவும் பிரித்தனர். ஒரெ குலத்தில் பிறந்தவர்களிடையே மணம் புரிவதில்லை என்ற வரையரையை வகுத்தனர் பெரியோர்.
அதனால்சிவகுலத்தில் பிறக்கும் ஆன்களுக்கு, சிவகுல அம்சமாக... உலகநாதன்... கணபதி... சண்முகம்... என்றும், இதே குலத்தில் பிறக்கும் பெண்களுக்கு, மகாலட்சுமி... ரெங்கநாயகி... பத்மாவதி... என்றும் பெயரிட்டனர்.
குலம் மாற்றி திருமணம் செய்யும் போது சிவகுலத்தில் பிறந்த 'ரெங்கநாயகியை'... வைணவ குலத்தில் பிறந்த 'ரெங்கநாதன்' மணம் புரிந்தான். வைணவ குலத்தில் பிறந்த 'லோகநாயகியை' சிவகுலத்தில் பிறந்த 'உலகநாதன்' மணம் புரிந்தான்.
இந்த இணைவு இரண்டு குலங்களையும் இணைத்தது. அதனால் வரன்களை சேர்ப்பது மிக எளிதாக அமைய... பெயர்கள் மட்டுமே போதுமானதாக இருந்தது. பெயர் பொருத்தம் மட்டுமே... திருமணம் அமைய பெரும் காரணமாக அமைந்தது.
ஸாய்ராம்
இருந்தது... இழந்ததும் :
இந்த ஜீவனுக்கு இரண்டு விதமான அவஸ்தைகள் உண்டு. ஒன்று 'நாமம்'... இன்னொன்று 'ரூபம்'.
ரூபம்... பிறப்பின் போது அமைவது. பிறப்பிலிருந்து மரணபரியந்தம் வரை மாறிக் கொண்டே இருப்பது. எல்லா பருவங்களிலிலும்... அந்த ஜீவனை ரூபத்தைக் கொண்டு அடையாளப்படுத்திக் கொள்ள முடியும்.
ஆனால், பெயர்... என்ற நாமம் இந்த ஜீவன் பிறந்ததிற்குப் பின் அடையாளப் படுத்துவதற்காக சூட்டப்படுவது. இந்தப் பெயரே நம்மை இந்த சமூகத்திற்கு அடையாளம் காட்டுகிறது.
எப்போது இந்தப் பெயர், ரூபத்துடன் இணைகிறதோ... அப்போது இந்த ஜீவனால்... இந்த கட்டமைப்பை விட்டு நீங்க முடியாததாக்குகிறது.
இந்த பெயரமைக்கும் வாய்ப்பு நமக்கு வழங்கப்பட்டிருக்கிறது. அதைத்தான் நமது முன்னோர்கள் சரியாக பயன்படுத்தி... ஒரு நிலையான... முறையான... சமூகக் கட்டமைப்பாக... உருவாக்கித் தந்திருக்கிறார்கள்.
நமது மண்ணில் பிறந்த அனைத்து ஜீவர்களும் ரிஷிகளின் பரம்பரையில் வந்தவர்களே. இதில் எந்த சந்தேகமும் தேவை இல்லை. இந்த உண்மையை 'பாகவதம்' நமக்கு உணர்த்துகிறது. அந்த ரிஷி பரம்பரையில் வந்த பாரதத்து மாந்தர்களை பொதுவான இரண்டு பிரிவுகளாக நமது முன்னோர்கள் பிரித்தனர்.
அவை சைவ மரபினர்... வைணவ மரபினர். சிவபெருமானை வணங்கி விபூதி தரிப்பவர்களை சிவகுலமாகவும்... திருமாளை வணங்கி திருநாமமிடும் வைணவர்களை... வைணவ குலமாகவும் பிரித்தனர். ஒரெ குலத்தில் பிறந்தவர்களிடையே மணம் புரிவதில்லை என்ற வரையரையை வகுத்தனர் பெரியோர்.
அதனால்சிவகுலத்தில் பிறக்கும் ஆன்களுக்கு, சிவகுல அம்சமாக... உலகநாதன்... கணபதி... சண்முகம்... என்றும், இதே குலத்தில் பிறக்கும் பெண்களுக்கு, மகாலட்சுமி... ரெங்கநாயகி... பத்மாவதி... என்றும் பெயரிட்டனர்.
குலம் மாற்றி திருமணம் செய்யும் போது சிவகுலத்தில் பிறந்த 'ரெங்கநாயகியை'... வைணவ குலத்தில் பிறந்த 'ரெங்கநாதன்' மணம் புரிந்தான். வைணவ குலத்தில் பிறந்த 'லோகநாயகியை' சிவகுலத்தில் பிறந்த 'உலகநாதன்' மணம் புரிந்தான்.
இந்த இணைவு இரண்டு குலங்களையும் இணைத்தது. அதனால் வரன்களை சேர்ப்பது மிக எளிதாக அமைய... பெயர்கள் மட்டுமே போதுமானதாக இருந்தது. பெயர் பொருத்தம் மட்டுமே... திருமணம் அமைய பெரும் காரணமாக அமைந்தது.
ஸாய்ராம்

No comments:
Post a Comment