திருவண்ணாமலையில் யோகினீஸ்வரி :
உலகமெங்கும் இருக்கும் ஆத்ம சாதகர்களை தன்னில் ஈர்த்துக் கொள்ளும் அற்புத ஸ்தலமே திருவண்ணாமலை. ஒவ்வொரு ஸ்தலத்தின் பெருமைகளைக் கூறும் போது... 'நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமாக' திருவண்ணாமலை திகழ்கிறது.
மேற்கத்திய நாடுகளில் தமது அறிவைக் கொண்டு... தாமாகத் தம்மை உயர்த்திக் கொண்ட ஆத்மாக்கள்... அடுத்தத்த நிலைகளை அடைய முடியாது தவிக்கும் போது... இமயத்தின் அடிவாரத்தில் இருக்கும்... பாரதம்... தமது ஒப்பற்ற மகான்களின் துணையுடன்... அவர்களைக் கடை தேற்றம் செய்திருக்கிறது.
'ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்ஸரின்' அருள் கருணை... 'சுவாமி விவேகானந்தரை'... அவர்களுக்குத் துணையாக அனுப்பியது. 'ஸ்ரீ பாபாஜி' அவர்களின் அருள் கருணை... 'பரமஹம்ஸ யோகானந்தரை'... அவர்களுக்குத் துணையாக அனுப்பியது.
அதுமட்டுமல்லாமல்... திருவண்ணாமலையில் உறைந்திருக்கும் எண்ணற்ற மகான்கள்... அந்த சாதகர்களை... தமது அருள் வட்டத்திற்குள் ஈர்த்து... அவர்களின் நிலைகளுக்கு ஏற்ப... அவர்களை... அவர்களது 'ஆன்ம சாதனைப்' பாதையில் வழிநடத்திக் கொண்டு இருக்கிறார்கள்.
சென்ற நூற்றாண்டில்... அந்த மகத்தான பணியை... 'பகவான் ஸ்ரீ ரமண மகிரிஷி' நிறைவேற்றினார். அவரைத் தேடி வந்த எண்ணற்ற மேற்கத்திய பக்தர்கள்... தமது பாதையில் மேன்மை அடைந்து... இறைவனின் பேரானந்தத்தில் திளைத்ததை... தமது நாடுகளுக்குத் திரும்பிய பின்... கட்டுரைகளாக, புத்தகங்களாக பதிவு செய்திருப்பதே... இந்த அரிய பேருதவிக்கான சாட்சிகளாக அமையும்.
இந்த நூற்றாண்டில்... இன்று... திருவண்ணாமலயில் இருந்து... உலகெங்குமிருந்தும் ஆத்ம சாதனையின் பாதையில் பயணித்துக் கொண்டிருக்கும்... சாதகர்களை, தனது அருள் கடாக்ஷத்தால்... தன்னில் ஈர்த்து... அவர்கள் தடங்கி நிற்கும் நிலையிலிருந்து மீட்டு... சரியான பாதையில் வழி நடத்தி... சாதகர்களை வழி நடத்தும் அற்புதப் பணியை... இந்த யோகினீஸ்வரி... இருபத்தைந்து ஆண்டுகளாக... சப்தமின்றி செய்து கொண்டிருக்கிறார்.
அவர்தான்... 'தாயார் சிவசக்தி அம்மையார்'. வாழும் யோனீஸ்வரியின் அருள் கடாக்ஷம் இன்றும்... அண்ணாமலயாரின் ஜோதியாக... சாதகர்கள் அனைவரையும்... திருவண்ணாமலையை நோக்கி ஈர்க்கிறது.
மாதாமாதம்... பௌர்ணமி தோறும்... தாயாரின் அருள் கருணை... தன்னை நாடி வரும் சாதகர்களுக்கு மட்டுமல்ல... பக்தர்களின் திருவுள்ளங்களிலும் பக்தியையும்... அன்பையும்... வளர்க்கிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
ஸாய்ராம்.
உலகமெங்கும் இருக்கும் ஆத்ம சாதகர்களை தன்னில் ஈர்த்துக் கொள்ளும் அற்புத ஸ்தலமே திருவண்ணாமலை. ஒவ்வொரு ஸ்தலத்தின் பெருமைகளைக் கூறும் போது... 'நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமாக' திருவண்ணாமலை திகழ்கிறது.
மேற்கத்திய நாடுகளில் தமது அறிவைக் கொண்டு... தாமாகத் தம்மை உயர்த்திக் கொண்ட ஆத்மாக்கள்... அடுத்தத்த நிலைகளை அடைய முடியாது தவிக்கும் போது... இமயத்தின் அடிவாரத்தில் இருக்கும்... பாரதம்... தமது ஒப்பற்ற மகான்களின் துணையுடன்... அவர்களைக் கடை தேற்றம் செய்திருக்கிறது.
'ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்ஸரின்' அருள் கருணை... 'சுவாமி விவேகானந்தரை'... அவர்களுக்குத் துணையாக அனுப்பியது. 'ஸ்ரீ பாபாஜி' அவர்களின் அருள் கருணை... 'பரமஹம்ஸ யோகானந்தரை'... அவர்களுக்குத் துணையாக அனுப்பியது.
அதுமட்டுமல்லாமல்... திருவண்ணாமலையில் உறைந்திருக்கும் எண்ணற்ற மகான்கள்... அந்த சாதகர்களை... தமது அருள் வட்டத்திற்குள் ஈர்த்து... அவர்களின் நிலைகளுக்கு ஏற்ப... அவர்களை... அவர்களது 'ஆன்ம சாதனைப்' பாதையில் வழிநடத்திக் கொண்டு இருக்கிறார்கள்.
சென்ற நூற்றாண்டில்... அந்த மகத்தான பணியை... 'பகவான் ஸ்ரீ ரமண மகிரிஷி' நிறைவேற்றினார். அவரைத் தேடி வந்த எண்ணற்ற மேற்கத்திய பக்தர்கள்... தமது பாதையில் மேன்மை அடைந்து... இறைவனின் பேரானந்தத்தில் திளைத்ததை... தமது நாடுகளுக்குத் திரும்பிய பின்... கட்டுரைகளாக, புத்தகங்களாக பதிவு செய்திருப்பதே... இந்த அரிய பேருதவிக்கான சாட்சிகளாக அமையும்.
இந்த நூற்றாண்டில்... இன்று... திருவண்ணாமலயில் இருந்து... உலகெங்குமிருந்தும் ஆத்ம சாதனையின் பாதையில் பயணித்துக் கொண்டிருக்கும்... சாதகர்களை, தனது அருள் கடாக்ஷத்தால்... தன்னில் ஈர்த்து... அவர்கள் தடங்கி நிற்கும் நிலையிலிருந்து மீட்டு... சரியான பாதையில் வழி நடத்தி... சாதகர்களை வழி நடத்தும் அற்புதப் பணியை... இந்த யோகினீஸ்வரி... இருபத்தைந்து ஆண்டுகளாக... சப்தமின்றி செய்து கொண்டிருக்கிறார்.
அவர்தான்... 'தாயார் சிவசக்தி அம்மையார்'. வாழும் யோனீஸ்வரியின் அருள் கடாக்ஷம் இன்றும்... அண்ணாமலயாரின் ஜோதியாக... சாதகர்கள் அனைவரையும்... திருவண்ணாமலையை நோக்கி ஈர்க்கிறது.
மாதாமாதம்... பௌர்ணமி தோறும்... தாயாரின் அருள் கருணை... தன்னை நாடி வரும் சாதகர்களுக்கு மட்டுமல்ல... பக்தர்களின் திருவுள்ளங்களிலும் பக்தியையும்... அன்பையும்... வளர்க்கிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
ஸாய்ராம்.

No comments:
Post a Comment