சத்தியமும்... தர்மமும் :
உலகம் என்ற உருண்டைப் பந்து
ஒட்டிக் கொண்டது வானத்தில்
தர்மம் என்ற சத்யக் கோட்டில்
சுற்றி வந்தது சூர்யனை ;
வட்டப் பாதை சுற்றும் பூமி முப்பரப்பின் மேலே
சொட்டும் நீரும் ஒட்டிக் கொள்ளும் சிந்திடாமலேயே
எஞ்சி நிற்கும் புவியின் மேலே விஞ்சும் மலையின் சிகரமும்
சொல்லும் சத்ய வார்த்தை யொன்று தர்மம் நிற்கும் உலகிலே ;
பரமன் வகுத்த பாதை ஒன்றில் சுழலும் பூமிப் பந்தினில்
நான்கில் மூன்று பங்கு நீரும் நிற்கும் எல்லைக் கோட்டிலே
காவல் இன்றி தடுப்பும் இன்றி சீறும் கடலின் அலைகளை
சப்தம் இன்றி கடலின் உள்ளே திருப்பும் ஆற்றல் சத்யமே ;
கடலின் நீரை ஆவியாக்கி மேகத்துள்ளே வைப்பதும்
மேகம் கருத்து வானம் மின்னி மழையாய் மீண்டும் பொழிவதும்
ஜீவன் இங்கு உயிராய் வாழ மூச்சுக் காற்றாய் இருப்பதும்
நச்சுக் காற்றை நல்ல காற்றாய் ஆக்கும் ஆற்றல் சத்யமே ;
மண்ணில் ஊன்றும் சிறியவித்தும் விருட்சமாக வளர்வதும்
வண்ணபூக்கள் கனியினங்கள் பூத்து காய்த்து நிற்பதும்
இலையுதிர்ந்து மீண்டும் ஓர் நாள் பசும் தளிர்கள் முளைப்பதும்
வியக்க வைக்கும் இயற்கை ஆற்றல் சொல்லும் வார்த்தை சத்யமே ;
சுக்கிலமும் சுரோணிதமும் சேர்ந்து கருவாவதும்
சிறிய கருப் பையில் ஜீவன் உயிருடனே இருப்பதும்
பனிக்குடம் உடைந்து உயிர் பத்திரமாய் ஜனிப்பதும்
பத்து மாதம் தாய் சுமக்கும் ஆற்றலென்ன சத்யமே ;
இத்தனையும் அறிந்த மனிதன் நெறிமுறைகள் தவர்வதும்
சுயநலத்தின் பெயரால் சத்யம் அழிந்து மண்ணில் வாழ்வதும்
அருளப்பட்ட மனித ஆற்றல் தனக்கே என்று கணப்பதும்
முடிவில் சத்யம் ஒன்றுதான் நிலைக்கும் என்று உணர்வதும் ;
என்னே இந்த விந்தை...!
வியக்க வைக்கும் மாயை...!!
ஸாய்ராம்.
உலகம் என்ற உருண்டைப் பந்து
ஒட்டிக் கொண்டது வானத்தில்
தர்மம் என்ற சத்யக் கோட்டில்
சுற்றி வந்தது சூர்யனை ;
வட்டப் பாதை சுற்றும் பூமி முப்பரப்பின் மேலே
சொட்டும் நீரும் ஒட்டிக் கொள்ளும் சிந்திடாமலேயே
எஞ்சி நிற்கும் புவியின் மேலே விஞ்சும் மலையின் சிகரமும்
சொல்லும் சத்ய வார்த்தை யொன்று தர்மம் நிற்கும் உலகிலே ;
பரமன் வகுத்த பாதை ஒன்றில் சுழலும் பூமிப் பந்தினில்
நான்கில் மூன்று பங்கு நீரும் நிற்கும் எல்லைக் கோட்டிலே
காவல் இன்றி தடுப்பும் இன்றி சீறும் கடலின் அலைகளை
சப்தம் இன்றி கடலின் உள்ளே திருப்பும் ஆற்றல் சத்யமே ;
கடலின் நீரை ஆவியாக்கி மேகத்துள்ளே வைப்பதும்
மேகம் கருத்து வானம் மின்னி மழையாய் மீண்டும் பொழிவதும்
ஜீவன் இங்கு உயிராய் வாழ மூச்சுக் காற்றாய் இருப்பதும்
நச்சுக் காற்றை நல்ல காற்றாய் ஆக்கும் ஆற்றல் சத்யமே ;
மண்ணில் ஊன்றும் சிறியவித்தும் விருட்சமாக வளர்வதும்
வண்ணபூக்கள் கனியினங்கள் பூத்து காய்த்து நிற்பதும்
இலையுதிர்ந்து மீண்டும் ஓர் நாள் பசும் தளிர்கள் முளைப்பதும்
வியக்க வைக்கும் இயற்கை ஆற்றல் சொல்லும் வார்த்தை சத்யமே ;
சுக்கிலமும் சுரோணிதமும் சேர்ந்து கருவாவதும்
சிறிய கருப் பையில் ஜீவன் உயிருடனே இருப்பதும்
பனிக்குடம் உடைந்து உயிர் பத்திரமாய் ஜனிப்பதும்
பத்து மாதம் தாய் சுமக்கும் ஆற்றலென்ன சத்யமே ;
இத்தனையும் அறிந்த மனிதன் நெறிமுறைகள் தவர்வதும்
சுயநலத்தின் பெயரால் சத்யம் அழிந்து மண்ணில் வாழ்வதும்
அருளப்பட்ட மனித ஆற்றல் தனக்கே என்று கணப்பதும்
முடிவில் சத்யம் ஒன்றுதான் நிலைக்கும் என்று உணர்வதும் ;
என்னே இந்த விந்தை...!
வியக்க வைக்கும் மாயை...!!
ஸாய்ராம்.

No comments:
Post a Comment