மனம் என்பது என்ன...? பகுதி - 2.
மனதில் தோன்றும் எண்ணங்களுக்கு ஏற்பவே இந்த உடல் செயல்படுகிறது. மனம் சுறு சுறுப்படையும் போது... உடலும் அதற்கேற்ற சுறு சுறுப்பை அடைகிறது. மனம் சோர்வாக இருக்கும் போது... இந்த உடலும் சோர்வை அடைகிறது.
மனம் என்பது எண்ணங்களின் தொகுப்பு என்பதை அறிவோம். அந்த எண்ணங்களுக்கு மூலம் எது... என்பதை அறியும் போதுதான்... மனதின் சூட்சுமம் புரிகிறது. எண்ணங்களுக்கு மூலம் வாசனை. அந்த வாசனையின் மூலம் 'கர்ம வினைகள்'.
ஒரு ஜீவனின் கர்ம வினைகளுக்கு ஏற்ப... அடுத்தடுத்ததான எண்ணம் உற்பத்தியாகிறது. அந்த எண்ணத்திற்கு ஏற்பவே செயல்களும் அமைந்து போகிறது. இப்படி இயங்கும் மனதினை... அதாவது... இடையறாது எண்ண அலைகளை உற்பத்தி செய்யும்... வற்றாத சாகரத்தை... எந்த அணை கொண்டு தடுக்க முடியும்... ?
உடலின் ஒவ்வொரு இயக்கத்திற்கும் ஒரு உறுப்பைக் மூலமாகக் கொள்ளலாம். உதரணமாக... சுவாசப் போக்கு - இதற்கு ஆதாரனமான உறுப்பு... நுரையீரல் ; ரத்த ஓட்டம் - இதயம் ; உணவின் செரிமானம் - இரைப்பை ; உறுப்புகளின் அசைவு - மூளை ; உடலின் கழிவுகள் - சிறு நீரகம் ... என ஒவ்வொரு உறுப்பாக ஆராய்ந்து... அதனதன் செயல்பாடுகள் இந்த உடலை எவ்வாறு இயக்குகிறது... என்பதை அறிந்து கொள்ளலாம்.
உடலில் ஏற்படும் அந்தந்த குறைபாடுகளை... அந்தந்த உறுப்புகளின் செயல்பாட்டை ஒழுங்கு செய்வதன் மூலம்... சரி செய்து கொள்ளலாம்.
ஆனால்... கோபம்; மகிழ்வு ; ஆச்சர்யம் ; அச்சம் ; பயம் ; நாணம் ; பச்சாதாபம் ; கலக்கம் ; குழப்பம் ; அமைதி... போன்ற அவஸ்தைகளை இந்த உடல் அனுபவிக்கும் போது... அதற்கு மூலமாகவோ அல்லது ஆதராமாகவோ... எந்த உறுப்பைச் சுட்டிக் காட்டுவது...?
அதுதான்... மனம். அந்த மனம் இந்த எண்ணற்ற அவஸ்தைகளை... அந்த ஜீவனின் கர்ம வினைகளுக்கு ஒப்ப... எண்ணங்களாக்கி... அதன் மூலமாக இந்த அனுபவங்களை... இந்த உடலுக்கு அளிக்கிறது. இந்த அவஸ்தைகளை மனம்... தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும்... ஒன்பது நாளமில்லாச் சுரபிகளைக் கொண்டே... வழி நடத்துகிறது.
ஸாய்ராம்.
மனதில் தோன்றும் எண்ணங்களுக்கு ஏற்பவே இந்த உடல் செயல்படுகிறது. மனம் சுறு சுறுப்படையும் போது... உடலும் அதற்கேற்ற சுறு சுறுப்பை அடைகிறது. மனம் சோர்வாக இருக்கும் போது... இந்த உடலும் சோர்வை அடைகிறது.
மனம் என்பது எண்ணங்களின் தொகுப்பு என்பதை அறிவோம். அந்த எண்ணங்களுக்கு மூலம் எது... என்பதை அறியும் போதுதான்... மனதின் சூட்சுமம் புரிகிறது. எண்ணங்களுக்கு மூலம் வாசனை. அந்த வாசனையின் மூலம் 'கர்ம வினைகள்'.
ஒரு ஜீவனின் கர்ம வினைகளுக்கு ஏற்ப... அடுத்தடுத்ததான எண்ணம் உற்பத்தியாகிறது. அந்த எண்ணத்திற்கு ஏற்பவே செயல்களும் அமைந்து போகிறது. இப்படி இயங்கும் மனதினை... அதாவது... இடையறாது எண்ண அலைகளை உற்பத்தி செய்யும்... வற்றாத சாகரத்தை... எந்த அணை கொண்டு தடுக்க முடியும்... ?
உடலின் ஒவ்வொரு இயக்கத்திற்கும் ஒரு உறுப்பைக் மூலமாகக் கொள்ளலாம். உதரணமாக... சுவாசப் போக்கு - இதற்கு ஆதாரனமான உறுப்பு... நுரையீரல் ; ரத்த ஓட்டம் - இதயம் ; உணவின் செரிமானம் - இரைப்பை ; உறுப்புகளின் அசைவு - மூளை ; உடலின் கழிவுகள் - சிறு நீரகம் ... என ஒவ்வொரு உறுப்பாக ஆராய்ந்து... அதனதன் செயல்பாடுகள் இந்த உடலை எவ்வாறு இயக்குகிறது... என்பதை அறிந்து கொள்ளலாம்.
உடலில் ஏற்படும் அந்தந்த குறைபாடுகளை... அந்தந்த உறுப்புகளின் செயல்பாட்டை ஒழுங்கு செய்வதன் மூலம்... சரி செய்து கொள்ளலாம்.
ஆனால்... கோபம்; மகிழ்வு ; ஆச்சர்யம் ; அச்சம் ; பயம் ; நாணம் ; பச்சாதாபம் ; கலக்கம் ; குழப்பம் ; அமைதி... போன்ற அவஸ்தைகளை இந்த உடல் அனுபவிக்கும் போது... அதற்கு மூலமாகவோ அல்லது ஆதராமாகவோ... எந்த உறுப்பைச் சுட்டிக் காட்டுவது...?
அதுதான்... மனம். அந்த மனம் இந்த எண்ணற்ற அவஸ்தைகளை... அந்த ஜீவனின் கர்ம வினைகளுக்கு ஒப்ப... எண்ணங்களாக்கி... அதன் மூலமாக இந்த அனுபவங்களை... இந்த உடலுக்கு அளிக்கிறது. இந்த அவஸ்தைகளை மனம்... தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும்... ஒன்பது நாளமில்லாச் சுரபிகளைக் கொண்டே... வழி நடத்துகிறது.
ஸாய்ராம்.

No comments:
Post a Comment