ஜோதிடமும் அதன் சூட்சுமமும - பகுதி 2.
வேதத்தின் அங்கமே ஜோதிடக் கலை. வேதத்தின் மீமாம்ஸம் என்ற பிரிவின் ஆறு அங்கங்களில் ஒன்றாக ஜோதிடம் அமைகிறது.
இதன் பயன்பாடு... வேதகாலத்தில் இருந்து தற்போதைய கலிகாலம் வரை விரவி இருக்கிறது. காலத்திற்கேற்ப அதன் அணுகுமுறையில்தான் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன.
தர்மத்தையே ஆதாரமாகக் கொண்டு மனித வாழ்வு அமைந்தபோது, ஆன்மீக வளர்ச்சியின் ஆதரமாக இந்த ஜோதிடக்கலை இருந்தது.
தர்மத்தின் நடைமுறையில் குறைவு ஏற்பட... ஏற்பட... மனிதர்களின் செயல்களில் பொதுநலம் குறைந்து, சுயநலம் மேலோங்க ஆரம்பித்தது. இந்த சுயநலத்தின் போக்கு, சமுதாயத்தில் ஏற்றத்தாழ்வுகள் அமைய காரணமானது. இந்த ஏற்றத் தாழ்வுகளால் இன்பத்தை அனுபவிக்கும் மனிதர்கள்... துன்பத்தை அனுபவிக்கும் மனிதர்கள்... என சமூகம் வேறுபட்டு நின்றது. துன்பத்தை அனுபவிக்கும் மனிதர்கள்... தமக்கு ஏன் இந்த நிலை... என்று கேள்வியை எழுப்பிய போது... ஜோதிடத்தின் அணுகுமுறையில் மாற்றம் தேவைப்பட்டது.
இந்த மாற்றத்தை புரதான ரிஷிகள்... வேதத்தை ஆதாரமாகக் கொண்டும்... தமது தீர்க்க தரிசனத்தைக் கொண்டும்... ஜோதிட விதிகளை வகுத்து... அதன் மூலம் துன்பப்படும் ஜீவர்களுக்கு ஆறுதலையும்... துன்பத்திலிருந்து நீங்கும் வழிகளையும்... கண்டறிந்து வழி நடத்தினார்கள்.
காலங்களின் மாற்றம் நீண்டு. தற்போதைய கலிகாலத்தில் தர்மத்தின் வழி நடக்கும் மனிதர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்த விட்ட நிலையில்... இந்தக் கலையில் மீண்டும் அணுகுமுறை மாற்றங்கள் தேவைப்படுகிறது.
காரணம், இன்றைய சமூகம், உள் வாழ்வான ஆன்மீகத்திலிருந்து... வெளி வாழ்வான உலக வாழ்விற்கு... வெகுவாக ஈர்க்கப்பட்டிருக்கிறது. இந்த உலக வாழ்வுதான் நிரந்தரம் என்றும்... அதிலிருக்கும் அனைத்து அங்கங்களையும் தாம் அனுபவிக்க வேண்டும் என்ற ஆசையும்... விஞ்சி நிற்கும் வேளையில்... உலக வாழ்வின் நிதர்சன உண்மையை இந்த கலை ஒன்றின் மூலமே உணரவைக்க முடியும்.
இந்தப் பிறவியின் நோக்கம்... பிறவி என்ற தொடர் ஓட்டத்தை முடித்துவைப்பதிற்கான ஒரு வாய்ப்பு... என்பதை உணர வேண்டியதே.
'அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது...' என்பது எவ்வளவு உண்மை என்பதை... இந்தப் பிறவியின் மூலத்தை ஆய்ந்தாலே அறிந்து கொள்ள முடியும்.
எத்தனையோ கோடி உயிரணுக்களின் போராட்டத்தில்... ஒரு உயிரணுவுக்கே... இந்த மனித பிறவியை அடையும் பாக்கியம் ஏற்படுகிறது. அதற்கான வாழ்வு காலமும் வெகு சொற்பமாக அமைகிறது. இந்த சொற்பக் காலத்திற்குள்... இந்த ஜீவன் தனது கடமைகளையும் முடிக்க வேண்டியுள்ளது... அதே வேளையில் மீண்டும் பிறவாதிருப்பதிற்கும் உழைக்க வேண்டியுள்ளது.
இந்த பூர்வ தேவ ரகசியத்தை... இந்த ஜோதிடக் கலை ஒன்றின் மூலமே வெளிப்படுத்த முடியும்.
ஸாய்ராம்.
வேதத்தின் அங்கமே ஜோதிடக் கலை. வேதத்தின் மீமாம்ஸம் என்ற பிரிவின் ஆறு அங்கங்களில் ஒன்றாக ஜோதிடம் அமைகிறது.
இதன் பயன்பாடு... வேதகாலத்தில் இருந்து தற்போதைய கலிகாலம் வரை விரவி இருக்கிறது. காலத்திற்கேற்ப அதன் அணுகுமுறையில்தான் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன.
தர்மத்தையே ஆதாரமாகக் கொண்டு மனித வாழ்வு அமைந்தபோது, ஆன்மீக வளர்ச்சியின் ஆதரமாக இந்த ஜோதிடக்கலை இருந்தது.
தர்மத்தின் நடைமுறையில் குறைவு ஏற்பட... ஏற்பட... மனிதர்களின் செயல்களில் பொதுநலம் குறைந்து, சுயநலம் மேலோங்க ஆரம்பித்தது. இந்த சுயநலத்தின் போக்கு, சமுதாயத்தில் ஏற்றத்தாழ்வுகள் அமைய காரணமானது. இந்த ஏற்றத் தாழ்வுகளால் இன்பத்தை அனுபவிக்கும் மனிதர்கள்... துன்பத்தை அனுபவிக்கும் மனிதர்கள்... என சமூகம் வேறுபட்டு நின்றது. துன்பத்தை அனுபவிக்கும் மனிதர்கள்... தமக்கு ஏன் இந்த நிலை... என்று கேள்வியை எழுப்பிய போது... ஜோதிடத்தின் அணுகுமுறையில் மாற்றம் தேவைப்பட்டது.
இந்த மாற்றத்தை புரதான ரிஷிகள்... வேதத்தை ஆதாரமாகக் கொண்டும்... தமது தீர்க்க தரிசனத்தைக் கொண்டும்... ஜோதிட விதிகளை வகுத்து... அதன் மூலம் துன்பப்படும் ஜீவர்களுக்கு ஆறுதலையும்... துன்பத்திலிருந்து நீங்கும் வழிகளையும்... கண்டறிந்து வழி நடத்தினார்கள்.
காலங்களின் மாற்றம் நீண்டு. தற்போதைய கலிகாலத்தில் தர்மத்தின் வழி நடக்கும் மனிதர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்த விட்ட நிலையில்... இந்தக் கலையில் மீண்டும் அணுகுமுறை மாற்றங்கள் தேவைப்படுகிறது.
காரணம், இன்றைய சமூகம், உள் வாழ்வான ஆன்மீகத்திலிருந்து... வெளி வாழ்வான உலக வாழ்விற்கு... வெகுவாக ஈர்க்கப்பட்டிருக்கிறது. இந்த உலக வாழ்வுதான் நிரந்தரம் என்றும்... அதிலிருக்கும் அனைத்து அங்கங்களையும் தாம் அனுபவிக்க வேண்டும் என்ற ஆசையும்... விஞ்சி நிற்கும் வேளையில்... உலக வாழ்வின் நிதர்சன உண்மையை இந்த கலை ஒன்றின் மூலமே உணரவைக்க முடியும்.
இந்தப் பிறவியின் நோக்கம்... பிறவி என்ற தொடர் ஓட்டத்தை முடித்துவைப்பதிற்கான ஒரு வாய்ப்பு... என்பதை உணர வேண்டியதே.
'அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது...' என்பது எவ்வளவு உண்மை என்பதை... இந்தப் பிறவியின் மூலத்தை ஆய்ந்தாலே அறிந்து கொள்ள முடியும்.
எத்தனையோ கோடி உயிரணுக்களின் போராட்டத்தில்... ஒரு உயிரணுவுக்கே... இந்த மனித பிறவியை அடையும் பாக்கியம் ஏற்படுகிறது. அதற்கான வாழ்வு காலமும் வெகு சொற்பமாக அமைகிறது. இந்த சொற்பக் காலத்திற்குள்... இந்த ஜீவன் தனது கடமைகளையும் முடிக்க வேண்டியுள்ளது... அதே வேளையில் மீண்டும் பிறவாதிருப்பதிற்கும் உழைக்க வேண்டியுள்ளது.
இந்த பூர்வ தேவ ரகசியத்தை... இந்த ஜோதிடக் கலை ஒன்றின் மூலமே வெளிப்படுத்த முடியும்.
ஸாய்ராம்.

No comments:
Post a Comment