ஜோதிடமும் அதன் சூட்சுமமும் - பகுதி 1.
ஜோதிடக் கலையின் அணுகுமுறையில் பிரதானமாகவும்... ஜீவனின் வாழ்வு இரகசியத்தை வெளிப்படுத்தும் மூலமாகவும் திகழ்வது 'திரிகோணம்' என்ற அமைவு.
ஜாதகச் சித்திரத்தில் லக்னம் என்ற 1 ஆவது ஸ்தானத்தையும்... பூர்வம் என்ற 5 ஆவது ஸ்தானத்தையும்... பாக்கியம் என்ற 9 ஆவது ஸ்தானத்தையும்... ஒரு முக்கோணமாக இணைக்கும் போது இந்த 'திரிகோணம்' என்ற அமைவு பூரணமாகிறது.
இது உணர்த்தும் சூட்சுமம் என்னவென்றால்... எத்தனையோ பிறவிகளில் ஜீவன் பெற்றுள்ள... மொத்த வினைகளுக்கான சுமையிலிருந்து (கர்மா - சஞ்சித கர்மா)... இந்த பிறவிக்கான சமமாகக் கலக்கப்பட்ட இன்ப - துன்ப வினைகளை (கர்மா - பிராரப்த கர்மா) சுமந்து கொண்டு இந்தப் பிறவியை எடுக்கிறது ஜீவன். இந்தக் கர்மாவின் வினைகளை இந்த ஜீவன் எதிர்கொள்ளும் போது...அதிலிருந்து விளையும் விளைவுகளை (கர்மா - ஆகாமிய கர்மா) இந்த பிறவியில் அனுபவித்தும்... மீந்துவதைக் கொண்டுபோய் மொத்த வினைகளான 'சஞ்சிதத்திலும் சேர்த்துவிடுகிறது.
இந்த சூட்சுமத்தைத்தான்... இந்த அமைவான 'திரிகோணம்' உணர்த்துகிறது.
லக்னம் என்ற 1 ஆவது ஸ்தானம்... முதல் திரிகோணமாக... 'சஞ்சித கர்மாவகவும்'... அது ஜீவனுக்கு பிறவியாகவும்... பூர்வம் என்ற 5 ஆவது ஸ்தானம்... இரண்டாவது திரிகோணமாக... 'பிராரப்த கர்மாவாகவும்'... பூர்வ வினைகளாகவும்...பாக்கியம் என்ற 9 ஆவது ஸ்தானம்... மூன்றாவது திரிகோணமாக... ஆகாமிய கர்மாவாகவும்... வகைப்படுத்தி... இந்த ஜீவன் இந்தப் பிறவியில்அனுபவிக்கும் பாக்கியங்களாகவும்... இந்த 'திரிகோண' அமைவு பூரணப்படுகிறது.
ஸாய்ராம்.
ஜோதிடக் கலையின் அணுகுமுறையில் பிரதானமாகவும்... ஜீவனின் வாழ்வு இரகசியத்தை வெளிப்படுத்தும் மூலமாகவும் திகழ்வது 'திரிகோணம்' என்ற அமைவு.
ஜாதகச் சித்திரத்தில் லக்னம் என்ற 1 ஆவது ஸ்தானத்தையும்... பூர்வம் என்ற 5 ஆவது ஸ்தானத்தையும்... பாக்கியம் என்ற 9 ஆவது ஸ்தானத்தையும்... ஒரு முக்கோணமாக இணைக்கும் போது இந்த 'திரிகோணம்' என்ற அமைவு பூரணமாகிறது.
இது உணர்த்தும் சூட்சுமம் என்னவென்றால்... எத்தனையோ பிறவிகளில் ஜீவன் பெற்றுள்ள... மொத்த வினைகளுக்கான சுமையிலிருந்து (கர்மா - சஞ்சித கர்மா)... இந்த பிறவிக்கான சமமாகக் கலக்கப்பட்ட இன்ப - துன்ப வினைகளை (கர்மா - பிராரப்த கர்மா) சுமந்து கொண்டு இந்தப் பிறவியை எடுக்கிறது ஜீவன். இந்தக் கர்மாவின் வினைகளை இந்த ஜீவன் எதிர்கொள்ளும் போது...அதிலிருந்து விளையும் விளைவுகளை (கர்மா - ஆகாமிய கர்மா) இந்த பிறவியில் அனுபவித்தும்... மீந்துவதைக் கொண்டுபோய் மொத்த வினைகளான 'சஞ்சிதத்திலும் சேர்த்துவிடுகிறது.
இந்த சூட்சுமத்தைத்தான்... இந்த அமைவான 'திரிகோணம்' உணர்த்துகிறது.
லக்னம் என்ற 1 ஆவது ஸ்தானம்... முதல் திரிகோணமாக... 'சஞ்சித கர்மாவகவும்'... அது ஜீவனுக்கு பிறவியாகவும்... பூர்வம் என்ற 5 ஆவது ஸ்தானம்... இரண்டாவது திரிகோணமாக... 'பிராரப்த கர்மாவாகவும்'... பூர்வ வினைகளாகவும்...பாக்கியம் என்ற 9 ஆவது ஸ்தானம்... மூன்றாவது திரிகோணமாக... ஆகாமிய கர்மாவாகவும்... வகைப்படுத்தி... இந்த ஜீவன் இந்தப் பிறவியில்அனுபவிக்கும் பாக்கியங்களாகவும்... இந்த 'திரிகோண' அமைவு பூரணப்படுகிறது.
ஸாய்ராம்.

No comments:
Post a Comment