ஆந்திர மாநிலத்தில், பக்தர்களாக இணைந்து, 'சிவபெருமானாருக்கு' ஒரு ஆலயத்தை எழுப்பினார்கள். கருவறையின் பீடத்தில் பதிப்பதற்காக, கல்லால் செதுக்கியிருந்த மூல விக்ரமான, 'சிவலிங்கத்தை' எடுக்க முற்படுகையில், அதை ஒரு அங்குல அளவுக்குக் கூட நகர்த்த முடியவில்லை. ஆச்சரியத்தில் மூழ்கிய பக்தர்கள், தங்களால் ஆன அனைத்து முயற்சிகளையும் செய்து பார்த்து, இறுதியாக, காஞ்சீபுரம் வந்து 'மஹா பெரியவரிடம்' இதைப் பற்றித் தெரிவித்தார்கள்.
சில நிமிட மௌனத்திற்குப் பிறகு, மடத்து சிப்பந்தியை அழைத்து, அவரிடம் திருச்சிக்கு அருகாமையில் வசிக்கும், ஸ்ரீ வைத்தியநாத சாஸ்திரிகள் என்பவரை அழைத்துவரச் சொன்னார். வைத்தியாநாத சாஸ்திரிகள் வந்தவுடன், அவரை அருகில் அழைத்து, அவரது காதில் ரகசியமாக சில நிமிடங்கள் பேசி விட்டு, ஆந்திர பக்தர்களை அழைத்து, சாஸ்திரிகளை அவர்களோடு அழைத்துச் சென்று 21 நாட்கள் தங்க வைக்கும்படி சொன்னார்.
ஆந்திராவை அடைந்ததும், பக்தர்கள் குறிப்பிட்டிருந்த கோவிலுக்குள் சென்ற சாஸ்திரிகள், தனது வழக்கமான அனுஷ்டாங்களை முடித்து விட்டு, நகர்த்தவே முடியாமலிருந்த 'சிவலிங்க ரூபத்திற்கு' முன், 'ஜபத்தில்' அமர்ந்து விட்டார். தங்களது சிக்கலுக்கு ஏதாவது உபாயம் சொல்லுவார் என்ற நம்பிக்கையில் இருந்த பக்தர்களுக்கு, சாஸ்திர்களின் செயல் சற்று ஏமாற்றமாகத்தான் இருந்தது. சாஸ்திர்களின் 'ஜபம்' 21 நாட்களும் தொடர்ந்தது. அந்த நாளின் இறுதியில், சாஸ்திரிகள் பக்தர்களை அழைத்து, 'இப்போது, சிவலிங்கத்தை நகர்த்தலாம்!' என்று கூற, சற்று அவநம்பிக்கையுடன் சென்ற பக்தர்களுக்கு ஆச்சரியம் காத்திருந்தது! அதுவரையில், ஒரு அங்குலம் கூட நகர்த்த முடியாத அளவிற்கு மிகக் கனமாக இருந்த லிங்கம், தற்போது ஒரு பஞ்சுப் பொதியை நகர்த்துவது போல, மிக எளிதாக இருந்தது.
இந்த அற்புதத்திற்கான காரணத்தை பக்தர்கள் ஆவலுடன் வினவ, சாஸ்திரிகளோ, 'எனக்கும் அது தெரியாது. பெரியவர், இந்த லிங்கத்திற்கு முன்பாக அமர்ந்து 21 நாட்களும் 'பஞ்சாட்சர மந்திரத்தை' (ஓம் நமசிவாய) ஜபிக்க சொன்னார். அவ்வளவுதான்!' என்றார்.
அப்போதுதான், பக்தர்களுக்குப் புரிந்தது, எத்தனையோ யுகங்களுக்கு முன்னால், இதே 'பஞ்சாட்சிர மந்திரத்தின்' மஹிமையை எல்லோருக்கும் 'நாவுக்கரசப் பெருமானார்' உணர்த்தியது போல, இந்த 20 ஆம் நூற்றாண்டிலும் தனது தபோ மகிமையால் நிரூபித்துக் காட்டியிருக்கிறார்... மகா பெரியவர், என்று.
சமண அரசனின் ஆணைக்கு இணங்கி, தன்னை ஒரு பெரும் கல்லால் கட்டி, கடலின் ஆலத்தில் தூக்கி வீசிய போதும், 'திருநாவுக்கரசர்' மிகப் பெரிய நம்பிக்கையுடன், இதே 'பஞ்சாட்சர மந்திரத்தை' ஜபித்துத்தான், கடலில் மிதந்து வந்து கரை சேர்ந்தார்.
(நன்றி : 'ஜகத் குரு மகா பெரியவா - காஞ்சி பரமாச்சார்யா / முக நூலிலிருந்து...தொகுக்கப்பட்டது.)
தமிழாக்கம்... அடியேன்.
ஸாய்ராம்.

No comments:
Post a Comment