பிரம்மச்சர்யம்... கிரகஸ்தம்... வானப்பிரஸ்தம்... சன்னியாஸம்... என்ற 'நால்வகை வாழ்வியலில்', கிரகஸ்தம் என்ற 'இல்வாழ்வு' என்ற உலகவாழ்வை வாழும் போதுதான், இந்த வர்ணாசிரமம்' என்ற 'நால்வகை' வர்ணங்கள் குறுக்கிடுகின்றன.
கிரகஸ்தனாக, தனது 'கர்ம வினைகளின் பாப - புண்ணிய விளைவுகளை' எதிர் கொள்ளும் கிரகஸ்தனான, குடும்பஸ்தன்,
* தனது குடும்ப பாரத்தை சுமந்து, அதற்காக கடுமையாக உழைக்கும் போது, தானே ஒரு 'சூத்திரனாக' இருக்கிறான்.
* தனது குடும்பத்தினரின் வளமான வாழ்வுக்காக திட்டமிடும் போதும், அவைகளை நிறைவேற்ற திரவியங்களைத் திரட்ட முற்படும் போதும், தானே ஒரு 'வைசியனாக' மாறுகிறான்.
* தனது குடும்பத்தினரின் சுக வாழ்வுக்காக போராடும் போதும், அவர்களின் நலத்தில் அக்கறை கொண்டு, அவர்களைப் பாதுகாக்கும் போதும், தானே ஒரு 'சத்திரியனாக' மாறி விடுகிறான்.
* குடும்பம் என்ற இல்லற வாழ்வின் அமைவுக்குக் காரணமே, தனது 'பூர்வ வினைகள்தான' என்ற உண்மையை உணரும் போது, அவைகளிலிருந்து விடுபடுவதற்கு, தான் மேற்கொள்ளும் அல்லது எதிர் கொள்ளும் அனைத்துச் செயல்களையும், 'கடமை' என்று உணர்ந்து, அவற்றை 'பற்றின்றி' மேற்கொள்ளும் போது, தானே ஒரு 'பிராமணனாக'... தனக்குள் இருந்து அருளும் 'பிரம்மத்தை' உணர்ந்தவனாக, உயர்ந்து விடுகிறான்.
இவ்வாறு, ஒரு இல்லறத்தனாக, தனது 'கடமைகளை' மேற்கொள்ளும் ஒரு கிரகஸ்தனின் வாழ்வின் மேம்பாட்டைக் குறிப்பதுதான்... 'வர்ணாசிரமாக' இருக்க முடியும் !
ஸாய்ராம்.

No comments:
Post a Comment