* நவக்கிரக நாயகர்களில், மேற்கு திசைக்கு அதிபதியாகி, ஈஸ்வரனின் அனுக்கிரகத்தை வெளிப்படுத்தும் வண்ணமாக... 'சனீஸ்வரர்' என்ற அருள் நாமத்தைப் பெற்றிருப்பவர்.
* ஒரு ஜீவனின் வாழ்வு நாட்கள் முழுவதிற்குமான, உரிமையைப் பெற்று... அந்த வாழ் நாட்கள் முழுவதுமாக... அந்த ஜீவன், தனது 'கர்ம வினைகளை', ஒவ்வொன்றாக அனுபவித்துக் கடந்து போவதை உறுதி செய்பவர்.
* ஜீவன், தனது 'கர்ம வினைகளுக்கு' ஏற்ப, தான் 'மேற்கொள்ளும்' (Actions) அல்லது 'எதிர் கொள்ளும்' (Reactions)... 'செயல் பாடுகளையும்... அவை, விளைவிக்கும் விளைவுகளையும்... ஆய்ந்து, அதன் 'பாப - புண்ணியங்களை', ஜீவனின், 'கர்ம வினைத் தொகுப்பில்' கொண்டு சேர்க்கும் பணியை மேற்கொள்பவர்.
* 'கர்ம வினைகளின் தொகுப்பை' சுமந்து வந்திருக்கும்... 'ராகு பகவான', 'கர்ம வினைகளின் கட்டுகளிலிருந்து' விடுவிக்கும்... 'கேது பகவான்' உட்பட்ட 'நிழல் கிரகங்களையும்', ஜீவனின் உலக வாழ்வு மற்றும் உள் வாழ்வு நிலைகளை வெளிப்படுத்தும், 'சூரிய, சந்திர, செவ்வாய், புதன், வியாழன் மற்றும் சுக்கிர பகவான்களையும், 'ஆயுள்' என்ற தனது கட்டுக்குள் வைத்து... அவர்களை 'கர்ம வினைகள்' என்ற நூற்கள் கொண்டு இயக்கும், 'சூத்திரதாரியாக' இருப்பவர்.
* ஜீவனின், ஜாதகத்தின் ஒவ்வொரு பாவத்திலும்... 'இரண்டரை வருடங்களுக்குக் குறையாமல்' வீற்றிருந்து... அந்த பாவம் வெளிப்படுத்தும், 'கர்ம வினைகளின் விளைவுகளை' கண்கானித்து... 'தர்ம பரிபாலனம் செய்யும் 'தர்மவானாகத்' திகழ்பவர்.
* ஜீவன் தனது வாழ்வை, 'கர்மம்' என்ற 'இகலோக வாழ்வுக்கு' அர்ப்பணித்தாலும்... பக்தி என்ற 'உள் வாழ்விற்கு' அர்ப்பணித்தாலும்... ,ஞானம்' என்ற 'முக்திப் பாதைக்கு' அர்ப்பணித்தாலும்... அதன் முயற்சிக்கேற்ற புண்ணிய பலனை, ஜீவனின் 'கர்ம வினைத் தொகுப்பிலிருந்து அள்ளிக் கொடுக்கும் வள்ளலாகத் திகழ்பவர்.
* ஜீவன், தனது வாழ் நாட்கள் முழுவதுமாக, தனது 'கடமைகள்' என்ற 'விதிக்கப்பட்டவைகளிலிருந்து', விலகி விடாதபடி, கண்காணிக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருப்பவர்.
* ஜீவன், தனது கடமையை, நேர்மையுடன் எதிர் கொண்டாலும்... நேர்மையற்று எதிர் கொண்டாலும்... அதை எதிர் கொள்ளும் வல்லமையை... தனது 3 ஆம் பார்வையால அருள்பவர்.
* ஜீவன், தான் கடமைகளை, மேற்கொள்ளும் நிலைகளுக்கு எற்ப... இந்த உலக வாழ்வில் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளும் வண்ணமாக, ஜீவனுக்கு அந்த வல்லமையை... தனது 7 ஆம் பார்வையால் அருள்பவர்.
* ஜீவன், தனது 'விதிக்கப்பட்ட' கடமைகளிலும்... 'விதிக்கப்படாத' கடமைகளிலும்... எவ்வாறு செயல்படுகிறார் என்பதை உறுதி செய்யும் வகையில்... ஜீவனுக்கு அந்த வாய்ப்புகளை நல்கும் வகையில்... தனது 10 ஆம் பார்வையால் பார்த்து அருள்புரிபவர்.
ஜோதிடக் கலையில், இத்துனை வல்லமை படைத்த 'சனீஸ்வர பகவான்', ஒரு ஜீவனின் ஜாதகத்தில் எவ்வாறெல்லாம் அமைகிறார் என்பதையும்... அவரின் அமைவுகள் உணர்த்தும் பலன்களையும்...அவர் வெளிப்படுத்தும் பலம் மற்றும் பலவீனங்களையும்... அவற்றை எவ்வாறு 'இறைவனின் அருள் கருணை' என்ற 'மதியால்' கடந்து வெற்றி பெறலாம்...என்பதையும் தொடர்ந்து ஆய்வோம்.
ஸாய்ராம்.

No comments:
Post a Comment