Monday, October 19, 2020

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் : பகுதி - 142 : ஜாதகப் பலன்களை கணித்தளிக்குமுன் நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய அம்சங்கள்.





ஒரு ஜாதகத்தைக் கணிப்புக்கு எடுத்துக் கொள்ளுமுன், கவனிக்கப்பட வேண்டிய முக்கிய அம்சங்கள்...

1. ஜாதகரின் பிறந்த நேரத்தின் அடிப்படையில் லக்னம் அமைந்திருக்கிறதா... ? என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். 

2. ஆங்கிலத் தேதி, மாத, வருடமும்... தமிழ்த் தேதி மாதமும்... அன்றைய நட்சத்திரமும், அதன் பாத சாரமும் சரியாக இருக்கிறதா... ? என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

3. நட்சத்திர பாத சாரததின் படி, 'கர்ப்ப செல் நீக்கிய இருப்பு' கணிக்கப்பட்டிருக்கிறதா... ? என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

4. 'கிரக பாத சாரங்களின்' அட்டவணையை உதவியாகக் கொண்டு... இராசி வீடுகளில், கிரகங்களை ஒவ்வொன்றாக... சரியான இராசி வீடுகளில் அவற்றின் பாத சாரங்களின் படி அமைந்திருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். அவற்றின் பாத சாரங்களை நவாம்ஸத்திலும் ஒப்புமைப் படுத்திப் பார்த்துக் கொள்ள வேண்டும்.

5. ஜாதகரின் பிறந்த தேதி, மாத, வருடத்தின் அடிப்படையில்... அந்த ஜாதகரின் 'தசா, புத்தி, இருப்பை'... அந்த 'ஜீவனின் கர்ப்ப செல் நீக்கிய இருப்பைக்' கொண்டு, ஜனன காலம் முதல், தற்போதைய நடப்புக் காலம் வரை... கணக்கீடு செய்து கொள்ள வேண்டும  

6. ஜாதகத்தை ஆய்வு செய்யும் காலம வரையிலான வயதைக் கணித்து... அன்றைய நிலையில், ஜாதகர் கடந்து கொண்டிருக்கும் 'தசா - -புத்தி - அந்தர காலத்தை' கணிப்புக்கான ஆதரமாகக் கொள்ள வேண்டும்.

இவை அனைத்தையும், பஞ்சாங்கத்தின் உதவியுடன், துல்லியமாகக் கணித்து அறிந்ததற்குப் பின், ஜாதகத்தை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.

ஸாய்ராம்.

  


    
        


No comments:

Post a Comment

ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...